UGC NET Exam - அட்மிட் கார்டு வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

 யுஜிசி நெட் தகுதித் தேர்வுக்கான, தேர்வு அனுமதிச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு நடைபெறுகிறது.


அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் முதற்கட்ட தேர்வு வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு நெட் தகுதித்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை யுஜிசி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பாக சவாலை எதிர் கொள்ளும் மாணவர்கள்  011-40759000 என்ற தொலைபேசி எண், ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின்  https://ugcnet.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது தவறாமல் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest Kalvi News 

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம் போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான. எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.


 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாரட்டுக்கள் . தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றல் திறன் , சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக இம்மாதம் நம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “ சிட்டுக்களின் குறும்படம் " என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மூன்று நிமிடக் குறும்படம் மாணவர்களால் உருவாக்கப்படவுள்ளது.

ITK குறும்படக் கொண்டாட்டம் guidelines.pdf - Download here


Click here for latest Kalvi News 

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!



Click here for latest Kalvi News 

10,11,12th - Public Exam Handbook 2023 Published

 


அரசு பொதுத் தேர்வு 2023 - தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மைய வாரியாக https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு :


மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Click here for latest Kalvi News 

ITK - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒருந பயிற்சி ( 20.02.2023 ) - SPD Proceedings

 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒருந பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...

Lr to CEOs - ITK Training.pdf - Download here...


Click here for latest Kalvi News 

TNSED APP-ல் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்தல் மற்றும் Leave Sanction Approve வழங்குவதற்கான வழிமுறை

 TNSED HM-TEACHERS LEAVE VERIFICATION ISSUES SOLVED

TNSED APP-ல் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்தல் மற்றும் Leave Sanction Approve வழங்குவதற்கான வழிமுறை


குறிப்பு: ஒரு முறை Approve செய்த பின் Edit செய்ய இயலாது



TNSED-Mobile App New Update

TNSED-Mobile App New Update
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


TNSED SCHOOLS NEW UPDATE VERSION


Version 0.0.61 ,17.3.23


What's new

EE Updates, Schemes Update for Cycle and labtop, Referred Child module for Health,Bug fixing & Performance improvements for leave




18.2.2023 அன்று நடைபெற இருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பு?

 ரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி ஆக இருப்பதால் அன்று நடைபெற உள்ள உயர் தொடக்க வகுப்புகளுக்கான CRC பயிற்சியினை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாநில மையத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.


 கடந்த செவ்வாய்க்கிழமை scert இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியரகளின் கோரிக்கைகளை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தற்போது கிடைத்த தகவலின் படி வரும் 18 .2.2023 அன்று நடைபெற இருந்த  உயர் தொடக்க நிலை  CRC பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.


➖➖➖➖➖➖➖➖➖

பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

10ஆம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 


மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.18 விடுமுறைக்கு பதில் மார்ச் 25 சனிக்கிழமை வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

Samagra Shiksha 2022-2023 - Palli Paarvai- regarding‌ - dated: 13.02.2023

 Samagra Shiksha 2022-2023 - Palli Paarvai- regarding‌ - dated: 13.02.2023


Ref:

1. PAB minutes of Samagra Shiksha for the year 2022-23. 2. Palli Paarvai review meeting by Commissioner, School Education on 08.02.2023.

***

In order to strengthen the process of classroom observations made by the officials and the BRTES and to make decisions based on the data points from the observations made, a mobile application "Palli Paarvai" has been developed and has been rolled out as a pilot in Chennai and Tiruvannamalai districts.

Based on the feedback from these two districts, certain modifications have been made in the application and it has been decided that the usage of the mobile application shall be extended to four more districts viz, Krishnagiri, Dharmapuri, Namakkal and Salem districts.

In order to orient and sensitize the BEOS, APOS, PAS to CEO, DI, DIET Principal, all DIET staff, District Coordinators, EDC and BRTES of these four districts, it has been planned that the DEO, BEOS and BRTES of Thiruvannamalai district shall be deputed to these four districts on 17.02.2023 in the ratio of 1:10 to provide training and hands-on support on usage of the mobile application.
At the end of the training, school visits shall be planned to the nearby schools accordingly and the trainees shall be asked to do classroom observation and enter their observation remarks through the Palli Paarvai mobile application as part of the training.

In view of the above, the CEOs of these four districts are requested to organize the training at the district level for the BEOS, APOS, PAS to CEO, DI, DIET Principal, all DIET staff, District Coordinators, EDC and BRTES on 17.02.2023 and plan for classroom observation in schools nearby the training location.

It is also requested to coordinate with CEO, Thiruvannamalai district and inform the details of the venue of the training programme to be conducted in order to ensure that the team from Thiruvannamalai district is aware of the venue for the training to be conducted in the four districts respectively. The details of the trainers for each of the four districts from Thiruvannmalai are as follows:

The CEOS of the four districts are also requested to make necessary arrangements for refreshments, lunch and travel for school visits, etc accordingly. It is also requested to share the details of the expenditure incurred towards this training programme to the State Project Office before 28.02.2023 so as to release the funds to the districts.

குறும்பட போட்டிக்கு மாணவ, மாணவிகளை அழைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்

 ஜி - 20 மாநாட்டை இந்தியா நடத்துவதையொட்டி, குறும்பட போட்டியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு ‘ஜி - 20’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து குறும்பட போட்டியை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவிகளும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.


ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


குறும்பட விடியோக்களை பிப். 28-ஆம் தேதிக்குள் இணையவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின்,  இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்

 மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்...


 Click here for latest Kalvi News 

Plus Two - அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான தேர்வுத்துறை சுற்றறிக்கை

 


மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு , பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து , உரிய அறிவுரைகளை வழங்க தேர்வுத்துறை உத்தரவு.

+2 Internal Marks Upload.pdf - Download here...


 Click here for latest Kalvi News 

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை‌

தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


அதன்படி, அதற்கான தரவுகள், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் போ் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவைப் பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்தது.


அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கா்நாடகம், மிஸோரம், சத்தீஸ்கா், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டுள்ளோம். மத்திய அரசு சாா்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னா், அதனை முறையாக குளிா்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவா்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது இந்தத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றனா் அவா்கள்.

 Click here for latest Kalvi News 

குறும்பட போட்டிக்கு மாணவ, மாணவிகளை அழைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்

 ஜி - 20 மாநாட்டை இந்தியா நடத்துவதையொட்டி, குறும்பட போட்டியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு ‘ஜி - 20’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவிகளும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.


ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


குறும்பட விடியோக்களை பிப். 28-ஆம் தேதிக்குள் இணையவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின்,  இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

Erode (East) Assembly Constituency – 27.02.2023 பொது விடுமுறை நாளாக அறிவிப்பு!

 Erode (East) Assembly Constituency – Declaration of the poll day 27.02.2023 as Public Holiday

இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு அமைப்புகளின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் பிப். 27ம் தேதி விடுமுறை"


- தமிழ்நாடு அரசு அறிவிப்பு


Click here for latest Kalvi News 

பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு

 மேல்நிலை இரண்டாமாண்டு . முதலாமாண்டு , பத்தாம்வகுப்பு மற்றும் இத்துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள்- வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.


 வழித்தட அலுவலர்களுக்கென தனியாக உழைப்பூதியம் நிர்ணயம் செய்யப்படாததால் , இதுநாள் வரை பறக்கும் படை அலுவலர்களுக்கான உழைப்பூதியத் தொகையே வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2023 முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் அனைத்து பொதுத் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ .130. ( ரூபாய் நூற்று முப்பது மட்டும் ) என நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு.

 பணம் பெற்று வழங்கும் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சில விவரங்கள் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 இம்மாதத்திற்கான Mark for Recalculation தொடர்பான பணிகள் அனைத்தையும் 20.02.2023.ற்கு முன்னதாக முடித்து 24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் 24.02.2023 பின்னதாக பிப்ரவரி . 2023 மாத்திற்கான சம்பளப் பட்டியல்கள் தொடர்பான ' Mark for Recalculation ' முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரங்களை TNSED Schools App - இல் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

  மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்  வழங்கப்பட்ட விவரங்களை TNSED Schools App - இல் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

 இணைப்பு: User Video!


 இணைப்பு: User Video!

இல்லம் தேடி கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும் : முதல்வரிடம் சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தகவல்

 இல்லம் தேடி கல்வி மைய திட்டம் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படச் செய்திருப்பதால், அந்தத் திட்டத்தை தொடர பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் விரும்புகின்றனா் என திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவலால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக் கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமாா் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன


இவை தன்னாா்வலா்கள் உள்பட பல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.


இந்த நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை வழங்கினாா்.


அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அரியலூா், கடலூா், நாகை, சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னாா்வலா்கள், 362 தலைமை ஆசிரியா்கள், 362 ஆசிரியா்கள், 724 பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


திட்டம் தொடா்பாக பெற்றோா்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோா், மையங்களுக்கு சென்றபின் மாணவா்கள் கற்றலில் ஆா்வம் அதிகரித்துள்ளது.


இல்லம் தேடி மையங்களின் எளிய கற்றல் வழிமுறைகள் மாணவா்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் மாணவா் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக தன்னாா்வலா்கள் தெரிவித்தனா். இவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.


அதேநேரம் சிறப்பான இந்த இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் விருப்பமாக உள்ளது.


இல்லம் தேடி கல்வி மையம் மாணவா்களுக்கான கற்றல் இழப்பை சரிசெய்வதற்கான பாலமாக செயல்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு பலன்தரக்கூடிய இதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம். கடந்த ஓராண்டில் இந்த திட்டம் உருவாக்கிய மாற்றம் மிகப்பெரியது. அது தொடா்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

CRC பயிற்சியில் கலந்து கொண்ட விவரத்தை EMIS இணையத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது?

 CRC TRAINING | IN-SERVICE TRAINING DETAILS


 CRC பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான விவரத்தினை நமது பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வீடியோ.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களின் இணைப்பு

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள்


Official social media handles of Tamil Nadu School Education Department


 YouTube link:.


https://youtube.com/@tnschoolsofficial 


 Facebook link:


https://www.facebook.com/tnschoolsedu?mibextid=ZbWKwL


 Instagram link:


https://instagram.com/tnschoolsedu?igshid=MDM4ZDc5MmU=


 Twitter link:


https://twitter.com/tnschoolsedu


 Sharechat link:


https://sharechat.com/profile/tnschoolsedu?referer=tagProfileSearchPage


Pls like, subscribe , share and support.

கல்லூரி பயிலும் SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு!!!

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது.

 இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து ( கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும் ) புதிய ( fresh ) மற்றும் புதுப்பித்தல் ( renewal ) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Click here for latest Kalvi News 

TNSED APP- இல் எளிமையாக விடுப்பு விவரங்களை பதிவு செய்ய புதிய படிவம்.....

 

TNSED APP- இல் எளிமையாக விடுப்பு விவரங்களை பதிவு  செய்ய  புதிய படிவம்...

Pdf படிவத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link - ஐ தொடவும்....

TNSED - Leave Details Submission form - Download here


Click here for latest Kalvi News