கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு.

 அன்புள்ள ஆசிரியர்களே , 

கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

 மேலும் தகவல் அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும் தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.


இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம் , சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


கனவு ஆசிரியர் 2023 மறுதேர்வு - பங்கேற்பாளர் பட்டியல்.pdf - Download here


எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 


 Click here for latest Kalvi News 

கிராம பள்ளி மாணவர்களுக்கு மெய்நிகர் உண்மை கல்வி மாதிரி

 கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழில்நுட்பங்கள் வாயிலாக கற்றல் திறன் பெறும் 'விர்ச்சுவல்ரியாலிட்டி' கல்வி மாதிரியை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது.


சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனும் மெய்நிகர் உண்மை அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கும் பணியில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


அதாவது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் மாதிரிகளை, 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்வதாகும்.


இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி முறையானது, மாணவர்களுக்கு அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை வழங்கும். அதனுடன், மாணவர்கள் புரிந்து படிக்கவும் வழி செய்யும்.


அதேபோல், தொழில்நுட்பங்கள் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டால், மாணவர்களின் கற்றல் வலுப்பெறும்.


மேலும், மாணவர்கள் உயர் கல்விக்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். இதன் வாயிலாக, நேரடி வகுப்பறைகளில் உள்ள சிரமங்கள் களையப்படும்.


இதன் துவக்கமாக, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெரின் சிமிராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோர் 'மெமரிபைட்ஸ்' எனும் மொபைல் போன் செயலியை உருவாக்கிஉள்ளனர்.


இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் செயல்படக்கூடியது. அனைத்து நாடுகளிலும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல் எனும், ஐ.நா., சபையின் இலக்கை அடைய, இந்த திட்டம் உதவும்.


இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரலாறு, மொழிப் பாடங்கள், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவிக்கலாம்.


இந்த திட்டம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடையே நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை இணைக்கும் பாலமாக அமையும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


 Click here for latest Kalvi News 

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு

 ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் ஆசிரியர், மாணவர்கள் வெளிநாடு செல்லவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாக ‘ராக்கெட் சைன்ஸ்’ என்ற இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 500 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் கட்டபயிற்சிக்கு 220 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 130 மாணவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகினர். நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தைபார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ரோஹித், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா, முகமது சாதிக், ரக் ஷித் ஆகிய 5 பேரும் அடங்குவர். இதில், ரோஹித் முதலிடம் பிடித்துள்ளார். இதற்காக உழைத்த ஆசிரியை விஜயலட்சுமியை எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோர் பாராட்டினர்.


வெளிநாடு சுற்றுலா: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி அளவில் மற்றும் வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் திறன் கண்டறியப்பட்டது.


இதில் சிறார் திரைப்பட மன்றப் போட்டியில் ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் லத்தாஷா ராஜ்குமார், சோழிங்கநல்லூர் அரசு பள்ளிமாணவர் ஆர்.ராகுல் தேர்வு பெற்றனர். அதேபோல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குரோம்பேட்டை அரசு பள்ளி மாணவர் ஏ. யுவாஷ், பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி மாணவி கே.ராஜலட்சுமி தேர்வு பெற்றனர். இந்த 4 மாணவர்களும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


மேலும் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு வேடவாக்கம் பள்ளிஆசிரியர் டி.சேகர், வாயலூர் பள்ளிஆசிரியர் முகமது அர்ஷாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் செங்கை மாவட்டத்தில் இருந்து மட்டும் 4 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 Click here for latest Kalvi News 

HOW TO UPDATE THE NS - NOP IN EMIS PORTAL

 

HOW TO UPDATE THE NS - NOP IN EMIS PORTAL 

USING SCHOOL LOGIN USER NAME AND PASSOWORD

Download here pdf ...



 Click here for latest Kalvi News 

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு.

 

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால் வாட்ஸ் ஆப்பில் பகிரக்கூடாது என தகவல்.

4,5th Term 3 SA Question And Answers - 66 Pages Single file - Download here

வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


 Click here for latest Kalvi News 

ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!

 EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது!



 Click here for latest Kalvi News 

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.

 

4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்...


பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 அன்று பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.


https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .


 Click here for latest Kalvi News 

கோடை விடுமுறைக்குப்பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின், ஜுன் 1 அல்லது 5ம் தேதிகளில் பள்ளிகள் திறப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத இறுதியுடன் முடிவடையவுள்ளன.


இதன் பின்னர் மே மாதம் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில், கோடை விடுமுறைக்குப்பின், ஜுன் 1 அல்லது 5-ம் தேதிகளில் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




 Click here for latest Kalvi News 

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க 17 வரை அவகாசம் நீட்டிப்பு

 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவி பெறவும், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை, தேசிய தேர்வுகள் முகமை, ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்துகிறது.


அதன்படி, நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு ஜூன் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு, கடந்த மார்ச், 10ல் துவங்கி ஏப்., 10ல் நிறைவு பெற்றது.


இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று, நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.,17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் csirnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.


இது குறித்த கூடுதல் விபரங்களை, https://nta.ac.in/ எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


ஏதேனும் சந்தேகம் இருப்பின், csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 011- - 4075 9000 / 011- - 6922 7700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


 Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு: தொடக்கக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

 தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5-ம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 3-ம்பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.


அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளைமுதல் (ஏப்ரல் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஸ்சிஇஆர்டி வழங்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் அல்லது பள்ளிகளில் ஆசிரியர்களே தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டு பருவத்தேர்வை நடத்திக் கொள்ளலாம்.


இதுதவிர ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலமாக மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திருச்சி, சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட பிரிண்ட்டர்களை பயன்படுத்தி வினாத்தாள்களை பிரதி எடுத்து தேர்வை நடத்த வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

1 முதல் 3ம் வகுப்பு வரை வரை... தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா?

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இறுதித் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வந்துள்ளது. 

மதிப்பீட்டு தேர்வுகள்

அதாவது சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 60 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இதற்காக ஆசிரியர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேசமயம் ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்தவும் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ-ஆர் கோடு முறை

அதாவது, ஒர்க் புக்கில் மதிப்பீட்டு கேள்வித் தாள்களில் இருக்கும் க்யூ-ஆர் (QR Code) கோடுகளை ஸ்கேன் செய்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிசோதனை செய்யப்படும்.

என்னென்ன பாடங்கள்

கணக்கு பாடத்தை பொறுத்தவரை எண்களை அடையாளம் காணுதல், பொருத்துதல், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றுடன் சேர்த்து கேள்விகள் கேட்கப்படும். எஞ்சிய பாடங்களில் இருந்து செயல் திட்டங்கள் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணும் எழுத்தும் திட்டம்

ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வில் கொள்குறி எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கேட்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கடந்த ஆண்டு ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 8 வயது வரையுள்ள அனைத்து மாணவர்களும் எழுத, படிக்க, அடிப்படை கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வசதி

அதுமட்டுமின்றி மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு நடனம், பாடல்கள், கதை சொல்லுதல், பொம்மலாட்டம் ஆகியவற்றின் மூலம் எழுத மற்றும் படிக்கும் திறன்கள் கற்று தரப்படும். இந்த திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆஃப்லைன் முறை

இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளால் நேரம் வீணாவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும் எனக் கருதி, அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது



 Click here for latest Kalvi News 

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்

 ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள் 

(பத்திரிக்கை செய்தி)


 Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 


 Click here for latest Kalvi News 

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.

  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இந்த ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்


 Click here for latest Kalvi News 

TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023

 


I am to inform you that the B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) / B.Sc.B.Ed. /B.A.B.Ed . ( Semester ) Degree Examinations , April 2023 are scheduled from 17.04.2023 , as per the Time - Table attached herewith.

TNTEU - Examinations Time Table April 2023 - Download here

 Click here for latest Kalvi News 

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

 தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணியில் தொடர அனுமதிக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest Kalvi News 

பள்ளி கல்வித்துறையுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


சென்னை ஐ.ஐ.டி.,யை கிராமப்புற மாணவர்கள் உட்பட, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கும் முயற்சியாக, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்., என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு, ஒரு வாரம் அடிப்படைக் கணிதம் மற்றும் அறிவியல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


அதேபோல், 250 பள்ளிகளைச் சேர்ந்த, 500 அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் வழியாக, ஒரு லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், மின்னணு செய்முறை பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


இவற்றை நேற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழக முதல்வரின் திறனறித் தேர்வு' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் அறிவித்தார்.


இதில், 10ம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 முடிக்கும் வரை, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.


இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்களின் உயர் கல்வியை தொடரும்போது, ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் வீதம், கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி மகேஷ், சுப்ரமணியன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா கலந்து கொண்டனர்.


 Click here for latest Kalvi News