கனவு ஆசிரியர் Level 2 க்கான Tamil Paper Syllabus and Model questions
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
கனவு ஆசிரியர் Level 2 க்கான Tamil Paper Syllabus and Model questions
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 01.08.2023-படி பணியாளர் நிர்ணயம் சார்ந்த அறிவுரைகள் pdf. - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்கக்கல்வி துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம் பெறாதவை:
1. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்).
2. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).
3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
5. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).
6. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click Here to Download PDF - EE Teachers Hand Book
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here to join whatsapp group for daily kalvinews update
Click Here to Download PDF - EE Teachers Hand Book
Click here to join whatsapp group for daily kalvinews update
எண்ணும் எழுத்தும் - முதல் பருவம் - தமிழ் - ஆசிரியர் கையேடு PDF
லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி, உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
அறிவியல் படிப்புகள் :
B.Sc ( physics) : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல் M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.
B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும். CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.
B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன. வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.
IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics) படிப்பதற்கு JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics) படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும். வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு phd படிக்கலாம். phd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.
M.Sc (physics, Chemistry, Mathematics) முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம். இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம், ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (physics, chemistry) படிக்கலாம், கல்வி துறை (Teaching) , ஆராய்ச்சி துறை (Research) , தகவல் தொழில் நுட்பம் (IT) , உற்பத்தி துறை (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.
கலை படிப்புகள் :
B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி துறையை தவிர்க்கவும்). M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.
B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் : குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள். மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.
B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை. B.Com படித்து CA (charted accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.
மேலாண்மை படிப்பு :
B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill) இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.
தகவல் தொழில் நுட்ப துறை (IT) :
மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை. B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து, Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programming language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும். கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும்.
தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும். MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான். இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான். இதற்க்கு NEET தேர்வில் குறைந்தது 430 மார்க் எடுக்க வேண்டும் (அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 430 மதிப்பெண் எடுக்க வேண்டும்).
படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான், நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.
எனவே பெற்றோர்களே! மாணவர்களே!, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here for latest Kalvi News
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டமை தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ .69,14,16,000 / பெறப்பட்டமை நிதிஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Click here to join whatsapp group for daily kalvinews update
2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இணைப்பில் காணும் கலம் 6 ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .
ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 2023 - திருத்திய கால அட்டவணை
Teachers General Transfer Counselling - Revised Schedule - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.
2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.
3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன் படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.
4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.
5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.
6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறைவாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவை, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசு திரைப்படக் கல்லூரியில் சேர மே 11 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னைதரமணியில் இயங்கி வருகிறது. இங்கு இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் 2023-24-ம்கல்வி ஆண்டில் சேர மாணவ,மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை பின்வரும் இணையதளங்களில் மே 11 முதல் 31 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ``முதல்வர், அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை600113'' என்ற முகவரிக்கு தபால் மூலமாக ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.
2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.
3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால்,
மாணவரின் பெற்றோர் தற்போது பயன் படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.
4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.
5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.
6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.
TC- Issue pdf file -Click here
TC- Issue demo Video - Click here
Click here to join whatsapp group for daily kalvinews update
Kind Attention: EMIS TC Generation Guidelines - 2
🔵முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும்.
🟢 Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்
Terminal Class:
1.Nursery and primary school - 5 std - Terminal class
2. Middle school - 8std Terminal class
3.High Schools - 10 Std
4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class
🔵Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது *Terminal class* என்று மட்டுமே கொடுக்க வேண்டும்.
*குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.*
🔵Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.
தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
🔵அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.
- EMIS Team
Click here to join whatsapp group for daily kalvinews update
'பிளஸ் 2 தேர்வில், கணிதத்தில் 'சென்டம்' குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங்கில் சேர்வதற்கான 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்,'' என, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பிளஸ் 2 பொது தேர்வில், 47 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். அந்த நிலை இனிமேல் வராமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறை கணிதத்தில், 100க்கு 100 சென்டம் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளது.
கணிதத்தில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவு மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அதனால், பி.காம்., படிப்பில் சேர கடும் போட்டி ஏற்படும்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால், அதில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.
அதனால், இன்ஜினியரிங் மற்றும் பிற படிப்புகளுக்கான சேர்க்கையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்ணுடன் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Click here to join whatsapp group for daily kalvinews update
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சி , 1 முதல் 74 அணி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் , இவ்வணிகளில் பயிற்சிக்கு வருகை புரியாத அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியில் இப்பயிற்சியில் பங்கேற்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல் ( இணைப்பு -2 ) மற்றும் முதன்மைக் கருத்தாளர்களின் பட்டியல் ( இணைப்பு -3 ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அட்டவணைப்படி பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அவர்களை பணியிலிருந்து விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
Click here to join whatsapp group for daily kalvinews update
அனைத்துப் பள்ளிகளும் தங்களது பள்ளியின் பாட ஆசிரியர் மற்றும் பாட விபரங்களை உள்ளீடு செய்து பள்ளி மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்கும் TIME TABLE (கால அட்டவணை) தயார் செய்யும் வழிமுறை...வீடியோ இணைப்பு.
Click here to join whatsapp group for daily kalvinews update
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 4,33,000 மாணவிகளும் 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் பொதுத் தேர்வினை எழுதினர்.
8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.
முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.