School Morning Prayer Activities - 28.06.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.


பழமொழி :
A little learning is a dangerous thing

அரை குறை படிப்பு ஆபத்தானது.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.


பொது அறிவு :

1. ”வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?

விடை: தாய்லாந்து

2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?


விடை: சஹாரா பாலைவனம்


English words & meanings :

 fragrance – a pleasant, sweet smell. noun. நறுமணம். பெயர்ச் சொல். gather - come together, bring together. noun. ஒன்றுச் சேர். திரட்டு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.


ஜூன் 28 இன்று

பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.


நீதிக்கதை

நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது



ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே..என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...
இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று


புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.06. 2023

*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 

*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 

*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.

*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Today's Headlines

* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.

 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.

 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.

 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.

 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

 

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்....

 6th , 7th , 8th Std Tamil Teachers Workshop - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 27.06.2023

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.06.23


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம்:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.


பழமொழி :
A lie has no legs

கதைக்கு காலில்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி. தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?



விடை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

2. பையின் மதிப்பை கண்டுபிடித்தவர் யார்?

விடை: ஆர்க்கிமிடிஸ்


English words & meanings :

 Extrodinary - wonderful,அசாதாரணமான. diffusion - the spreading of something so widely,பரவல்


ஆரோக்ய வாழ்வு :

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு (Fast food) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.


ஜூன் 27 இன்று

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்


ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  

பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்



பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீதிக்கதை

சிங்கம்  இறைச்சிகளைச்  சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற்படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.

அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது, தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.

எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!

பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!


 இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.


இன்றைய செய்திகள் - 27.06. 2023

*  பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு. திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம். 102 பேர் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

*மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு.

*கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்.

*பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

*TNPL கிரிக்கெட் : டாஸ் வென்று வந்து வீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

Today's Headlines

* Engineering rank list published Tiruchendur student Nethra topper.  102 people scored 200 out of 200.

 * Increase in water release in Mettur Dam.

 *The New Democratic Party is back in power in Greece.  Mitsotakis became Prime Minister for the second time.

 *Anyone can become a priest if he has mastered the methods of worship ordered Madras High Court.

 *TNPL Cricket: Chepak Super Gillies won the toss and chose to bowl.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

30 Days Training For Selected Teachers - DSE Proceedings

 பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching " 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பயிற்சியில் அரசு நடத்துதல் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு . - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - RIESI - 30 Days Training  For Selected Teachers  - DSE Proceedings - Pdf


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் கணிதன்- Maths shortcut Memes

 தமிழ் கணிதன்- Maths shortcut Memes

விளையாட்டாக, மகிழ்ச்சியாக கணக்கு கற்க கீழ்காணும் 74 பக்க தமிழ் கணிதன் Maths Short cut memes பாருங்கள்... கணக்கை எளிமையாக கற்று விடலாம்... 


இதை வைத்துக் கொண்டு TNPSC உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு பயன்படும்...


Click Here to Download - Maths shortcut Memes - Pdf


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED Schools Schemes Details Enabled For HMs

 TNSED SCHOOLS SCHEMES DETAILS ENABLED FOR HMs


முதலில் TNSED App ஐ update செய்ய வேண்டும்


Click Here To Download - TNSED - Mobile App New Update - Version 0.0.68

தலைமை ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு


அரசின் நலத்திட்டங்களான

BOOKS

NOTE BOOKS

UNIFORMS

BAG

CRAYONS

COLOR PENCILS

BUS PASS

BUS PASS APPROVAL

வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய விவரத்தினை உடனுக்குடன் TNSED SCHOOLS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல்- ஒருங்கிணைத்தல் - வழிமுறையில் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

 


அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல்- ஒருங்கிணைத்தல் - வழிமுறையில் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..
முன்னாள் மாணவர்களை கண்டறிவதற்கான பரிந்துரைகள்

முன்னாள் மாணவர்களின் தொடர்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதற்கான வழிமுறைகள்.
ஜூலை -20 ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து EMIS இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்..


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BASELINE ASSESSMENT SURVEY CLASS 5

 BASELINE ASSESSMENT SURVEY CLASS 5


🪷 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை திறனாய்வு (Baseline survey) மேற்கொள்ள வேண்டும்.


நாட்கள்  26.06.230முதல் 05.07.23 வரை


பாடம்

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு.


♦️ சார்ந்த வகுப்பாசிரியர்கள் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். 


📌 *மதிப்பீடு  மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவை*


♦️ TNSED schools  செயலி  மூலம் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.


♦️ செயலியில் மதிப்பீடு மேற்கொள்ளும்  ஆசிரியரின் EMIS ID  மற்றும் password பயன்படுத்த வேண்டும்.


♦️செயலியில் Ennum Ezhuthum -  classroom details 5 ஆம்  வகுப்பை தேர்வு  செய்தல்  வேண்டும் .


♦️தங்களது  வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் EMIS students list ல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.( EMIS portal மற்றும் Tnsed செயலி இரண்டிலும் ) 


♦️தங்களது வகுப்பில் long absentees மாணவர்கள் இருப்பின் , அவர்கள் ஜுன் 30 க்குள் பள்ளிக்கு வருகை தர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் பள்ளிக்கு வருகை தந்த பின்னர் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை அம்மாணவனுக்கு today absent என்று குறிப்பிட வேண்டும். 


♦️ அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் CWSN என்று குறிப்பிட தேவையில்லை. ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலும் . அவர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். Home based மாணவர்கள் மற்றும் ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலாது. அவர்களுக்கு CWSN என்று குறிப்பிட வேண்டும். தங்களது பள்ளியின் சிறப்பு ஆசிரியரின் ஆலோசனை மற்றும் உதவியை பெறலாம்.


📌 குறிப்பு:

 ஒருமுறை long absent அல்லது CWSN என்று mark செய்த மாணவர்களுக்கு மீண்டும் மதிப்பீடு செய்ய இயலாது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2023



Prepared by


✓ திருக்குறள்
✓ பழமொழி
✓ இரண்டொழுக்க   
     பண்புகள்
✓ பொது அறிவு
✓ நீதி கதைகள்
✓ இன்றைய செய்திகள்





School Morning Prayer Activities - 26.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.06.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம்:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.


பழமொழி :
A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம். --தாமஸ் அல்வா எடிசன்


பொது அறிவு :

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: சார்லஸ் பாபேஜ்

சதுரங்கம் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?


விடை: இந்தியா


English words & meanings :

 Disease –sickness. நோய். Entrance –a passage or gate to go inside a place. வாசல்


ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது. முறையான பயிற்சி அவசியம்.


நீதிக்கதை

பாலைவனத்தில்_பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன் குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.

குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில்
 தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா? தண்ணீர் வருமா?
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால், அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்
தாகமும் தணியும் உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்
தண்ணீரைக் குடித்து விடுவதே
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால்
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை
ஆனது ஆகட்டும் என்று......

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!தாகம் தீர வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்த்து.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை பிறருக்கும்
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்


இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!


இன்றைய செய்திகள் - 26.06. 2023

*26 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து சென்ற முதல் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியுடன் உற்சாக வரவேற்பு.

*பறவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில பறவை ஆணையம் அமைப்பு.

*எல்நினோ காலநிலை நிகழ்வு காரணமாக மீண்டும் உயிர்க்கொல்லி வைரஸ்கள் உருவாகும் அபாயம். கடுமையான வெப்பம் காரணமாக வெப்ப மண்டல நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.  

*செவ்வாய் கிரகத்தில் மாறிவரும் பருவநிலையை படம் பிடித்தது நாசா. சூரியனுக்கு அருகே செங்கோள் சென்ற போது எடுக்கப்பட்ட புற ஊதாக்கதிர் படம் வெளியானது. 

*தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவு அதிகபட்சமாக மதுரை புறநகர் பகுதியில் 104.4 டிகிரி பதிவானது. 

*TNPL : திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை.


Today's Headlines

*The first Indian Prime Minister to visit Egypt after 26 years and he was welcomed with the tricolor flag.

 * On behalf of the Tamil Nadu government to strengthen the protection of birds A State Bird Commission has been set up.

 *Risk of resurgence of life-killing viruses due to El Niño climate event.  The World Health Organization has warned that tropical diseases will develop due to extreme heat.

 *NASA captured the changing climate on Mars.  An ultraviolet image was released when the constellation passed close to the Sun.

 * 6 places in Tamilnadu crossed 100 degrees and the highest recorded temperature was 104.4 degrees in Madurai suburbs.

 *TNPL: 
Coimbatore beat Dindigul by 59 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News