JEE Advanced 2023; திருச்சி என்.ஐ.டி 5 ஆண்டு கட் ஆஃப் விவரம் இங்கே

JEE Advanced 2023: இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NITs), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) மற்றும் பிற அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) ஆகியவற்றில் சேர்வதற்கான கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) கவுன்சிலிங் நடந்து வருகிறது.

இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் 31 என்.ஐ.டி.,களில் ஒன்று – என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அல்லது என்.ஐ.டி திருச்சி. இது பொறியியல், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மைக்கான முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

NIRF 2023 தரவரிசையின்படி, NIT திருச்சிராப்பள்ளி நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒன்பதாவது இடத்தையும், கட்டிடக்கலை கல்லூரிகளில் நான்காவது இடத்தையும், அதன் ஆராய்ச்சி ரேங்கில் 22 ஆவது இடத்தையும், மேலாண்மை நிறுவனங்களில் 35 வது இடத்தையும், அதன் ஒட்டுமொத்த தரவரிசையில் 21 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி 10 இளங்கலைப் படிப்புகளையும், பல்வேறு துறைகளில் 26 முதுகலைப் படிப்புகளையும், அனைத்துத் துறைகளிலும் பி.எச்.டி படிப்புகளையும் வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தரவரிசையைப் பார்ப்போம்.

2023 

2022

2021

2020

2019

NIT திருச்சிராப்பள்ளி இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியாக 1964 இல் பிராந்திய பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 2003 இல் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி என மறுபெயரிடப்பட்டது. இது தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சட்டம் 2007 மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.





CBSE: சி.பி.எஸ்.இ 9-12 வகுப்பு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 முதல் 12 வகுப்புகளுக்கான வினாத்தாள் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருவதோடு, அவற்றின் மதிப்பீட்டு முறைகளிலும் மாற்றத்தை செய்து வருகின்றன.

வினாத்தாள் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போட்டித் தேர்வுத் தரங்களுடன் ஒத்துப்போகிறது, இது உயர் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு 40% உடன் ஒப்பிடும்போது, ​​50% திறன் அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும். மீதமுள்ள 30% குறுகிய மற்றும் நீண்ட பதில்கள் உட்பட கட்டமைக்கப்பட்ட பதில் கேள்விகளைக் கொண்டிருக்கும், மீதமுள்ள 20% கொள்குறி வகை கேள்விகளாக (MCQs) இருக்கும்.

“தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, கருத்தியல் அடிப்படையிலான கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் நோக்கிய மாற்றம் CBSEயின் புதிய வினாத்தாள் வடிவத்தில் தெளிவாகத் தெரிகிறது. கருத்தியல் வகை கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலம், வாரியமானது கற்றலை ஊக்கப்படுத்துவதையும், கருத்துகளின் ஆழமான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை தேர்வுகளின் போது மாணவர்களுக்கு பயனளிப்பதோடு, மதிப்பீட்டு செயல்முறையையும் விரைவுபடுத்தும். இருப்பினும், கருத்தியல் வகை வினாக்களுக்கான இந்த மாற்றத்திற்கு ஆசிரியர்கள் மாணவர்களை வித்தியாசமாக தயார்படுத்த வேண்டும்,” என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


 Click here for latest Kalvi News 

ADD IN-SERVICE TRAINING DETAILS IN EMIS PORTAL

 பணியிடை பயிற்சியில் (TPD_2_Cls4&5_July22) கலந்து கொண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரத்தினை EMIS PORTAL-ல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்


👇👇👇👇👇


https://youtu.be/yx5BsLo_nRA

 Click here for latest Kalvi News 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

 

மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதுவரை எவ்வித விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படாதது வருத்தமான செயலாகும்.


எனவே அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 5 பேர், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 3 பேர் என்ற விகிதத்தில் தயார்செய்து http://www.inspireawards.dstgov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் எந்தவொரு பள்ளியும் விடுபடக் கூடாது.


எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்காகத் தேர்வான மாணவர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

Then chittu Magazine ( 16 to 31th ) - July 2023

 

தேன்சிட்டு 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.

July 2023 - Then chittu Magazine ( 16 to 31th ) - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

 

 பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

DSE - HSS HM Panel List - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 


தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :


 ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மணற்கேணி எனும் புதிய செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் - 25.07.2023 அன்று வெளியீடு

 

நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது . நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

Invite-Manarkeni-App-launch.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை

 

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CBSE பள்ளிகளில் தமிழ் மீடியம்; வாரியம் உத்தரவு.

 

'நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுதும், 28,886 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்; 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

பயிற்று மொழி


இந்த பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களிடையே பன்மொழி திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.


இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து, புதிய தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் கல்வித் துறையில் தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வி துறையிலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இதன்படி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும்.


மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்பிப்பதிலும், இதை நடைமுறைப்படுத்துவதிலும் சில சவால்கள் உள்ளன.


அடித்தளம்


இந்த மொழிகளில் பாடம் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடப்புத்தகங்களை தயாரிப்பது, இரண்டு, 'ஷிப்டு' களாக இயங்கும் அரசு பள்ளிகளில், இதற்கான நேரத்தை ஒதுக்குவது ஆகியவை சவாலான விஷயங்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.


இதற்காக தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 2024 - 25ம் கல்வியாண்டு முதல், இந்த பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.


இந்த பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் பணியை உயர் கல்வித் துறை துவங்கியுள்ளது. நாடு முழுதும் பிராந்திய மொழிகளில் முக்கியமான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


தொழிற்கல்வி, சட்டம், மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு, ஏற்கனவே பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.


எனவே, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான முக்கியமான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வி துறையிலும் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கும் முயற்சி துவங்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 24.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.07.23


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :222

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

விளக்கம்:

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

பழமொழி :
After a strom cometh a calm

புயலுக்கு பிறகு அமைதி உண்டாகும்.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். 

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :

வாய்ப்புக்காக காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்…

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்


பொது அறிவு :

1. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: அபினவ் பிந்த்ரா.( துப்பாக்கி சுடுதல்)

2. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
விடை: வில்லியம் பென்டிங்க் பிரபு.


English words & meanings :

 quell - control அடக்கு: rind - skin தோல்,மரப்பட்டை


ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.

சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.


நீதிக்கதை

ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல  மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சையை முயற்சித்தார், ஆனால் எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று புகழ் பெற்ற ஒரு துறவியைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவனிடம் சென்று தன் பிரச்சனையைச் சொன்னான்.

துறவி அவரது பிரச்சனையைப் புரிந்துகொண்டு, “நீங்கள் பச்சை நிறங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், உங்கள் கண்கள் வேறு எந்த நிறத்தையும் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார். செல்வந்தன் இந்த வகையான மருத்துவத்தை விசித்திரமாகக் கண்டான் மற்றும் அதை முயற்சிக்க முடிவு செய்தார். செல்வந்தன் ஓவியர்களைக் கூட்டி வரவழைத்து ஏராளமான பச்சை வண்ணப்பூச்சுகளை வாங்கி, துறவி கூறியதை போலவே தனது கண்ணில் விழும் ஒவ்வொரு பொருளும் பச்சை நிறத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார்சில நாட்களில் அந்த மனிதனைச் சுற்றியுள்ள அனைத்தும் பச்சை நிறத்தில் இருந்தன. செல்வந்தன் சுற்றிலும் உள்ள எதுவும் வேறு எந்த நிறத்திலும் வராமல் பார்த்துக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு, துறவி செல்வந்தரைப் பார்க்க வந்தார், செல்வந்தரின் வேலைக்காரன் ஒருவன் பச்சை வண்ணப்பூச்சின் வாளியுடன் ஓடி வந்து துறவியின் மீது ஊற்றினான். துறவி வேலைக்காரனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார்.

வேலைக்காரன் அதற்கு பதிலளித்தார், “நீங்கள் காவி வண்ணத்தில் உடை அணிந்துள்ளீர்கள், பச்சை நிறத்தை தவிர எங்கள் மாஸ்டர் வேறு எந்த நிறத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது…அதைக் கேட்டு துறவி சிரித்துவிட்டு, “அவர் அணிவதற்கு ஒரு  பச்சை நிறக் கண்ணாடியை நீங்கள் வாங்கியிருந்தால் செலவு குறைந்திருக்கும். நீங்கள் இந்த சுவர்கள், கட்டுக்கள் அனைத்தையும் சேமித்திருக்கலாம், மேலும் அவரது செல்வத்தில் பெரும் தொகையைச் சேமித்திருக்க முடியும்.. உங்களால் உலகத்தை பச்சையாக வரைய முடியாது.”


 உலகை வடிவமைப்பது மாற்றுவது முட்டாள்தனம், முதலில் நம்மை வடிவமைப்போம். நம் பார்வையை மாற்றுவோம், அதன்படி உலகம் தோன்றும்.


இன்றைய செய்திகள் - 24.07. 2023

*பீகார் மாநிலத்தில் நாளந்த மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். 5 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு.

*தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு.

*30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி இலக்கிய விருது - சபாநாயகர் அப்பாவு வழங்கினார். 

*ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள். ஆசிரியருக்கு 'பேஷன் ப்ரோ' பைக் பரிசளித்த முன்னாள்  மாணவர்கள்.

*டுவிட்டர் என்ற பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு.

*சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் லஹிரு திரிமானே.

*கொரிய ஓபன் பேட்மிட்டன்: இந்தியாவின் சாத்விக் - சிராஜ் ஜோடி சாம்பியன்.

Today's Headlines

*A 4-year-old girl from Nalanda district in Bihar fell into a borewell.  Rescued alive after 5 hours.

 * 110 District Collectors promoted as Deputy Collectors in Tamil Nadu.

 *VGP Literary Award was given to 30 Tamil Scholars honourable by Speaker Appavu.

 *Former students held a retirement appreciation ceremony for the teacher who worked for 34 years in Alangadu Government High School.  Alumni presented the teacher with a 'Passion Pro' bike.

 * Elon Musk  decided to change the name Twitter.

 *Sri Lankan player Lahiru Thirmane has announced his retirement from international cricket.

 *Korea Open Badminton: India's Shathwick-Siraj pair clinched  the championship
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BASELINE ASSESSMENT SURVEY வகுப்பு 2,3 & 4 - SCERT

ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.

2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை  (19-07-2023) முதல் வருகின்ற (25-07-2023) ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் செயலியில் மேற்கொள்ளலாம். 

                                    நன்றி

                                     SCERT

https://youtu.be/_rC332wEhTU


BASELINE ASSESSMENT SURVEY வகுப்பு 2,3 & 4


📌 2023-2024-ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும்


🌷 தமிழ்

🌷 ஆங்கிலம்

🌷 கணக்கு


📌 பாடத்திற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை 19.07.2023 முதல் 25.07.2023 ஆம் தேதி வரை 


📌 TNSED SCHOOLS செயலியில் மேற்கொள்வதற்கான வழிமுறை.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை :

 


INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

.

1.முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.                   


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். 

தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                

3. மாணவர்கள் விவரங்கள்.

🔸பெயர்

🔸பெற்றோர் பெயர்

🔸வகுப்பு

🔸ஆதார் எண்(not mandatory)

🔸கைபேசி எண்

🔸இனம்

🔸புகைப்படம்

(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

🔸வங்கி கணக்கு புத்தகம். 


4.PROJECT விவரங்கள்.

Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.

தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

project photo copy upload additional( not mandatory.)

project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)

5.Guide teacher name and phone number  

6.HM name and phone number


7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.


8.Acknowledgement download செய்தபின் மாணவர்களின்  விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.ஆனால் உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களை add செய்து கொள்ளலாம்.

அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

22.07.2023-CRC Quiz key Answer and link

இலவச பேருந்து பயண அட்டை பெற இவ்வாண்டும் பழைய நடைமுறையினை (Offline) பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 மாணவர்களின் நலன் கருதி இலவச பேருந்து பயண அட்டை பெற இவ்வாண்டும் பழைய நடைமுறையினை (Offline) பின்பற்ற பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

03.08.2023 ( வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 நாமக்கல் மாவட்டம் , கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும் , கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2023 மற்றும் 3.8.2023 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.


 இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் , பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் , எதிர்வரும் , 3.8.2023 ( ஆடி மாதம் 18 - ஆம் நாள் ) வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 128.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Namakkal District local holiday reg - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு!

 


9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு!

Emotional Wellbeing & Life Skill  Training - SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CRC ( July 25 - 27 ) Training Agenda & Guidelines

 

6th - 8th CRC ( July 25 - 27 ) Training Agenda & Guidelines 

6 to 8 வகுப்பு ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான ( Facilitator ) விரிவான வழிகாட்டி

TPD 2 (6 to 8) Agenda & Guidelines - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News