School Morning Prayer Activities - 08.08.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

விளக்கம்:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.


பழமொழி :
As rare as hen's teeth

அத்தி பூத்தார் போல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது எது?

விடை: பரம் வீர் சக்ரா.

2. இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை: தேசிய திரைப்பட விருது.

English words & meanings :

 neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம்: சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.

நீதிக்கதை

ஒரு நாள் சுந்தர், சிவா என்ற இரண்டு நண்பர்கள் வேலை சம்மந்தமாக பக்கத்து ஊருக்கு சென்றார்கள். அப்போது, இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டதாலும் இருவரும் விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எதன்மீதோ கால்தடுக்கி எப்படியோ உருண்டு ஆழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை. ஆனால், மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்த பிறகு வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. ஏனென்றால், அவர்கள் நினைத்ததைவிட கிணறு மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதிலிருந்து ஏறி வர எந்தப் பிடிப்போ, படிகளோ எதுவுமே இல்லை. சேறும் சகதியும் வெளியேறுவது கடினமாக இருந்தது.

அதனால், சுந்தர் மிகவும் சோர்ந்து போனார். ஆனால், சிவா சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவர் கண்ணில்பட்டது. அதைப் பார்த்ததும், அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து தட்டித்தட்டி சிறு மூங்கில் கழி போல் செய்தார்.

சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கி, வந்தார். அந்தக் கல்லால் வேரைத் இரு துண்டுகளாக வெட்டி எடுத்தார். வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம் என சுந்தரை அழைத்தார். ஆனால் அவர் பயந்து நடுங்கி சிவாவிற்கு வர மறுத்து விட்டார்.சிவா நண்பனை சுமந்து செல்லவும் முடியாது.அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது.

அதனால், சிவா ஒரு சில நிமிடங்கள் யோசித்து, பின் சுந்தரிடம் எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றார். அதைக் கேட்டதுமே சுந்தர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக என்ன மந்திரம் அது, சொல் என்றார். உடனே சிவா  இது என்ன நமஇவெயா... ? என்று சுந்தர் கேட்டார்உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா? என்று சிவா கேட்டதும், இருக்கிறது. என்று சுந்தர் கூறினார்.

அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் என்று சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. சிவா கூறினார். அதனால், சுந்தரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.

உடனே அவர் மனதிலும் நம்பிக்கை உண்டானது. பிறகு இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். வழியில் சுந்தர், சிவாவிடம் எனக்குத்  தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய்? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி      எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவதுஉனக்கு தெரியுமா? அவற்றையும் சொல்லித் தருகிறாயா? என்று கேட்டார்.

அதற்கு சிவா, சிரித்துக் கொண்டே, நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு சொல்லித் தந்தது மந்திர வார்த்தை இல்லை. 

மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை போக்கி உன்னை நம்பிக்கையுடன் செயல்பட நான் சொல்லியது. நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் (நமஇவெயா) முதல் எழுத்துக்கள்தான் என்று கூறினார்


இன்றைய செய்திகள் - 08.08. 2023

*மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்.

* தன் நாட்டில் ஒரு கிராமத்தையே காலி செய்யும் ரஷ்யா. இந்தியாவிற்கு போட்டியாக விண்வெளி முயற்சி.

* தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும்-  வானிலை ஆய்வு மையம் தகவல்.

*ஆர்சிபி அணியை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி.

*வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்.

Today's Headlines

*Delhi Emergency Ordinance Amendment Bill is passed in the State Assembly through voting.

* Russia evacuates a village in its own country. Competing with India's space effort.

* It will be hot in Tamil Nadu today and tomorrow - Information from Meteorological Department.

*Hyderabad has appointed a new coach after RCB.

*Coco Cope wins Washington Open tennis title
 Prepared by

Covai women ICT_போதிமரம்


 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 07.08.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.


விளக்கம்:

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.


பழமொழி :
As is the king, so are subjects

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல. விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது?

விடை: பாரத ரத்னா.

2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது.


English words & meanings :

 inaugurate -initiate துவக்கி வைத்தல்; saplings - young plant நாற்றுகள்


ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம்: இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

ஆகஸ்ட் 07 இன்று

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்


இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.ய
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.



நீதிக்கதை

ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 

அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 

இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன.அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன.

“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லா முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 

அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது. 

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியானாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கிறோம். “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.


அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.நம்மை பார்த்துமா இவை பயப்படுகின்றன? இனி நாம் இந்த நதியில் விழுந்து சாகாமல்  நாமும் இவ்வுலகில் தைரியமாய் வாழ வேண்டும் என முடிவு செய்தன.

இன்றைய செய்திகள் - 07.08. 2023

*மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

*ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜோபைடன் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வருகை.

*கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மராத்தான்.

*ஜனாதிபதி நாளை வருகை- புதுச்சேரியில் இரண்டு நாள் ட்ரோன்கள் பறக்க தடை.

*உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தங்கம் வென்று சாதித்த 17 வயது இந்திய வீராங்கனை அதிதி.

*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சீனா - தென்கொரியா ஆட்டம் சமன் ஆனது.

Today's Headlines

*Students don't get stressed : President Draupadi Murmu at Madras University Convocation.

*Joe Biden will visit India on September 7 to participate in the G-20 conference.

* Kalainjar 's hundredth International Marathon made Guinness World Record.

*President's visit tomorrow- Drones will be banned in Puducherry for two days.

*17-year-old Indian archery champion Aditi has won gold at the World Archery Championships.

*Asian Champions Cup Hockey: China vs South Korea draw.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

11th - Tamil New Guide Study Material

11th - Tamil New Guide - Mr.A.Ezhilarasan Pgt, GHSS ELAPAKKAM - Download here
--------------------------------------

11th Month Wise Content 2023 - 2024 | Download here

11th Physics - Important Questions & Problems - Mr Rajendran - E/M - Download here

11th Chemistry - One Mark Question - Test 1 Download here | Test 2 Download here - EM - Mr S.Manikandan

11th Chemistry - Full portion One Mark Test Question Paper 1 - Download here |Question paper 2 - Download here

11th Chemistry - Full portion Revision Test 3 - EM - Mr S.Manikandan - Download here

11th Chemistry - Full portion Revision Test 2 - EM - Mr S.Manikandan - Download here


11th Chemistry - Chapter Wise Evaluation And MCQ Question With Answer Key ( EM ) - Mr G.Suresh - Download here 

11th English - Quarterly Exam Sep 2022 - Model Question Paper Download - Answer Key Download ( Rasi English Guide ) 

11th Std All Subject Instant Supplementary Exam Question Papers and Answers June 2023 - Download here


 Click here for latest Kalvi News 

10 ஆம் வகுப்பு - மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கணக்கு சிறப்பு கையேடு

 I. Latest 10th Standard - English Medium Study Materials Download


10th New Study Materials | Latest Study Notes

I.     10th Full Syllabus - New Study Materials


 Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum TLM - Download

Scholarship to Full Time Phd Students!

EMIS' அடையாள எண்ணில் மாற்றம்!

 பள்ளிக்கல்வித் துறையின் 'எமிஸ்' அடையாள எண், 10 இலக்கமாக மாற்றப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எமிஸ் என்ற, கல்வி மேலாண்மை தளத்தின் ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கப்படுகிறது.

அந்த எண்ணின் இணைப்பில், சம்பந்தப்பட்ட மாணவரை பற்றிய தரவுகள், ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன.

இந்த எண், மாணவர்களின் அனைத்து வகை சான்றிதழ்கள், அலுவலக பதிவேடுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு மாணவர், ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாறி சேர்க்கை பெறவும், பொதுத் தேர்வு எழுதவும், இந்த எமிஸ் எண் கட்டாயம்.

இந்த எண்ணானது, இதுவரை, 16 இலக்கமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, 10 இலக்க அடையாள எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக எளிதாக இருக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்


 Click here for latest Kalvi News 

How to use language lab in our hitech lab ?

 

மொழிகள் ஆய்வகத்தை நம்முடைய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வத்திலும் நம் கைபேசியிலும் எவ்வாறு பயன்படுத்தி நம் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ளலாம் ? How to use language lab in our hitech lab ? 



Step 1 - View Here

Step 2 - View Here



 Click here for latest Kalvi News 

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடக்கம்

 

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.


இதேபோல, 28 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,820 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.


சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி (நேற்று) தொடங்கியது.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் வரும் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

 Click here for latest Kalvi News 

ஆக. 9 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) ஆடி கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 


அந்தவகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - Module 8 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Term 1 Lesson Plan

August 2023

Module - 8

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 8 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 8 Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 8 Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 8 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 8 Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 8 Lesson Plan - E/M - Download here


 Click here for latest Kalvi News 

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் : செப்டம்பரில் கலந்தாய்வு

 இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது.


அதேபோன்று சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, 17 தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பிளஸ்-2 தோ்வு அடிப்படையில் இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.


ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்த படிப்புக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் தொடங்கியது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் ஆக.14-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்போது அப்படிப்புக்கு ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்திய மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் மலா்விழி கூறியதாவது: யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. நிகழாண்டிலும் அந்தப்படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலானோா் விண்ணப்பிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 14-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பரில் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும். நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஆயுா்வதேம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.


 Click here for latest Kalvi News 

தேசிய கைத்தறி தினம் கட்டுரை போட்டி

 தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நிர்வாகம் சார்பில், கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் இயங்கி வரும், அண்ணா நினைவு கைத்தறி பட்டுப்பூங்கா இயக்குனர் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஒன்பதாவது தேசிய கைத்தறி தினம், காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் உள்ள பட்டுப்பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பட்டுப்பூங்கா நிறுவனத்தின் சார்பில், தற்போது ஆடை உற்பத்தி பெருகி வரும் சூழ்நிலையில், கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. கட்டுரைகள் வரும் 6ம் தேதி, மாலை 5:30 மணிக்குள், 88257 84926 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். கட்டுரை எழுத முடியாதவர்கள் குரல் மூலம் அதே, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் கைத்தறி தினமான, வரும் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றே பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News