பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு.

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 

தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட, 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.எனவே, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், உடனடியாக திருத்தம் மேற்கொண்டு, நவ., 30 க்குள் அப்டேட் செய்திட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


 இது குறித்து, விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Primary CRC - CEO Proceedings

 

IMG_20231127_183222

தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 4 முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான தொடர் பணித்  கற்பிக்கும் மேம்பாட்டுப்பயிற்சி ( Continous Professional Development ) குறுவளமைய அளவிலான பயிற்சி . மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணிவிடுப்பு செய்யக்கோருதல் தொடர்பாக தருமபுரி முதன்மை கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

 Primary CRC - CEO Proceedings 

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9,10 STD TEACHERS CRC TRAINING MATERIALS PPT, PDF ( ALL Subject ...)

 

9,10 STD TEACHERS CRC TRAINING MATERIALS PPT, PDF👇

Tamil - Click here

English - Click here

Maths - Click here

Science - Click here

Social Science - Click here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 28.11.2023

 

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.2023


 திருக்குறள்


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:308


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.


விளக்கம்:


தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.


பழமொழி :

Great minds think alike


பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்


இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


வெற்றி வந்தால்

நம்பிக்கை வரும்.

ஆனால் நம்பிக்கை

இருந்தால் மட்டுமே

வெற்றி கிடைக்கும்..

அதனால் நம்பிக்கையை

மனதில் வளர்த்துக்கொள்


பொது அறிவு :


1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?


விடை: நெருப்புக்கோழி


2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 

சுப்பீரியர் ஏரி.


English words & meanings :


 Equipoise - equality of distribution சரி சம நிலை

Endear - to make dear ,beloved பிரியமுடையதாக்குதல்


ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ : பூசணி பூக்களை உட்கொள்வது எலும்பு தேய்மானம் அல்லது தாது சத்து இழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.


நீதிக்கதை


 அகந்தை ஆபத்தானது.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் யார் இரை தேடுவது என்பதில் இரண்டு சேவல்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதலில் தோற்றுப் போன சேவல் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொண்டது.


வெற்றி பெற்ற சேவலோ பெருமிதத்துடன் பறந்து ஒரு சுவர் மீது ஏறி நின்று இறக்கைகளைப் படபட என அடித்துக் கொண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தம் போட்டு மகிழ்ச்சி கொண்டாடியது.


அப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு அதன் மேல் பாய்ந்து கவ்விக் கொண்டு சென்றது. பதுங்கியிருந்த சேவல் மூலையை விட்டு வெளியே வந்து போட்டிக்கு யாரும் இல்லாததால் தன்னிஷ்டப்படி இரை தின்றது.


நீதி : அகந்தை கொள்வது எப்பொழுதும் ஆபத்தானது.


இன்றைய செய்திகள் - 28.11.2023


*வாக்காளர் பட்டியல் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்; சத்யபிரதா சாகு தகவல்.


*சுரங்கத்தில் சிக்கியவர்களுடன் உரையாடிய பிரதமரின் முதன்மைச் செயலர்.


* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை- காவல்துறை தலைமை.


* வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.


* ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள்: ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா; குஜராத்துக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிப்பு.


Today's Headlines


*15.33 lakh applications for voter list;  Satyaprada Sakhu information.


 *Prime Minister's Principal Secretary interacts with mine victims.


 * War on terrorism is not completely over in Jammu and Kashmir- Police chief.


 * A low pressure area has formed in the Bay of Bengal, there is a chance of rain in Tamil Nadu till the 3rd.


 * Players for IPL Cricket Tournament: Auction will be held on 19th December.  Hardik Pandya in Mumbai team;  Subman Gill announced as new captain for Gujarat.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 27.11.2023

  .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை


குறள்:307


சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


விளக்கம்:


நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.


பழமொழி :

Grasp all, lose all


பேராசை பெரு நட்டம்


இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


தோல்வி அடைவதற்கு

பல வழிகள் காரணங்களாக

அமையலாம்.. ஆனால்

வெற்றி பெறுவதற்கு

ஒரே காரணம் தான்

அது உன் “உழைப்பு”.


பொது அறிவு :


1. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?


விடை: மௌசின் ராம் ( மேகாலயா)


2. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்


English words & meanings :


 Distort-pull or twist out of shape.சிதைக்க. Dough-thick mixture of flour and other ingredients that can be kneaded, baked, and eaten.மாவை


ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ: பூசணிப் பூக்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது மற்றும் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. பூசணி பூக்கள் ஈறுகள் மற்றும் பல் இனாமல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.


நீதிக்கதை


 நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் –             ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.


அது எப்பவும் தன்னோட அம்மாவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடேயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும்.

சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி.


ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தளைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு.


அப்படி சுவாரசியமா சாப்பிட்டுகிட்டு இருந்த ஆட்டுக்குட்டி தன்னோட அம்மாவையும் தன்னோட ஆட்டு கூட்டத்தையும் மறந்துடுச்சு.


சாயந்திரம் ஆனதால அந்த ஆட்டு கூட்டம் தங்களோட கிராமத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க


ஆனா இது தெரியாத ஆட்டு குட்டி தன்னோட சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு.


அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு. அத பார்த்த ஆட்டுக்குட்டி ரொம்ப பயந்து போச்சு.இருந்தாலும்


கொஞ்சம் தைரியமா இருந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு யோசனை வந்துச்சு.


உடனே அந்த ஓநாய்கிட்ட ஐயா நீங்க எப்படியும் என்ன சாப்பிட போறீங்க, அதனால என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துங்கனு சொல்லுச்சு.


அந்த ஓநாயும் உன்னோட கடைசி ஆசை என்னனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஆட்டுக்குட்டி சொல்லுச்சு, எனக்கு டான்ஸ் ஆடணும்போல இருக்கு நீங்க ஒரு பாட்டு பாடுங்கனு சொல்லுச்சு.


உடனே அந்த ஓநாய் பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த சத்தம் கேட்ட ஆட்டு கூட்டத்தை சார்ந்த வேட்டை நாய்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சு.


உடனே அந்த வேட்டை நாய்கள் எல்லாம் ஓநாய் சத்தம் வர்ற இடத்துக்கு ஓடி வந்துச்சுங்க.


வேட்டை நாய்கள பார்ததும் ஓநாய் அங்க இருந்து ஓடி போய்யிடுச்சு, அங்க வந்த அந்த ஆட்டு குட்டியோட அம்மா நடந்த எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு ,ஆட்டு குட்டியோட புத்திசாலித்தனத்தை பாராட்டுச்சு.


இன்றைய செய்திகள் - 27.11.2023


*பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று கோவை சூலூர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் என்பவரின் சேவையை பாராட்டினார்.


* உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு; முதலமைச்சர் மு க ஸ்டாலின்

வாழ்த்து.


 *15 வது ஆண்டு தினம்: நேற்று மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.


* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. தமிழகத்தில் 29ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.


*சேத்தியாதோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு.  வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றம்.


* 17 வது ஐபிஎல் கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் திடீர் விலகல்.


Today's Headlines


* In Prime Minister Modi's Man Ki Baat program yesterday, he appreciated the service of Loganathan from Sulur area of ​​Coimbatore.


 * Inauguration of Ambedkar Statue in Supreme Court Complex;praised by  Chief Minister M.K Stalin


  *15th death Anniversary: ​​Tributes to those who lost their lives in the Mumbai attacks .


 * A new low pressure area is forming today.  Chance of heavy rain in Tamil Nadu on 29th.


 * Chethiyathoppu dam, release of water from Veeranam lake.  Release of 1200 cubic feet water per second.


 * 17th IPL Cricket: England player Joe Root makes a sudden exit.


 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Kala Utsav 2023-24 National level Programme Schedule Day Wise

 Screenshot_2023-11-26-08-17-49-290-edit_com.android.chrome

Kala Utsav 2023-24 National level Programme Schedule  Day Wise 

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

DAILY ROUTINE - ONLY ENGLISH PDF