FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பதிவிறக்கம் செய்வது??

 




மூன்றாம் பருவ FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பார்ப்பது? பதிவிறக்கம் செய்வது?

👇👇👇👇

Emis Website

https://emis.tnschools.gov.in


👇

School Login 

👇

Registers

👇

Staff Registers

👇





EE Academic Register


& FA ( B ) Register 

👇

Download pdf


தகவல்

Marks for Third term Formative Assessment  are not published on EMIS website till now.  Currently only testing is underway.  Please wait friends .Thank you.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Medical Insurance: மருத்துவ காப்பீடு பெற புதிய வழிமுறைகள்! யாரெல்லாம் இனி தகுதியானவர்கள்?

 

5d5768a28762738483536d41afba63931713685533365589_original

இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


காப்பீடுகள் பல வகை என்றாலும் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசர நிலையில் உதவுவது மருத்துவ காப்பீடு தான். இன்று இருக்கும் சூழலில் பல நிறுவனங்கள் நமக்கு மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது. பாலிசி கவரேஜ் என ரூ. 5 லட்சம், ரூ.10 லட்சம் என கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைப்பது உண்டு. தற்போது மருத்துவ காப்பீடு பெறுவதற்கான புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீடு:

ஏப்ரல் 1, 2024 முதல் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கான வயது வரம்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நீக்கியுள்ளதால்,  இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. காப்பீட்டாளர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் தகுதிவாய்ந்த ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வேறு எந்தக் பிரிவிற்கும் இந்த மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.


வயது தடையில்லை:

முன்னதாக, 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பாலிசிகளை வாங்க முடியாது. ஆனால், ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள், வயதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு தனிநபரும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்தப் புதிய முடிவு, இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்கும், , காப்பீட்டு வழங்குநர் நிறுவனங்களைத் தங்கள் சலுகைகளைப் பன்முகப்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


சுகாதார கொள்கைகள்:

தற்போதைய அறிவிப்பின் படி, ​​பாலிசிதாரர் முதலில் அவருக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஏற்கனவே இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் 36 மாதங்களுக்குப் பிறகு பாதுகாக்கப்பட வேண்டும் அதாவது காப்பீட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த 36 மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் க்ளைம்களை நிராகரிப்பதில் இருந்து சுகாதார காப்பீட்டாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஈடுசெய்யும் இழப்பீட்டு அடிப்படையிலான சுகாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, அவை நன்மை சார்ந்த கொள்கைகளை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!!

 கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவில் 14417 - ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. 


இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் , தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இளங்கலை படிப்புகளில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

1234214

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-11 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் (2024-25) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் விவரம் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை.

 IMG-20221224-WA0000

ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை..


* 22.04.2024 - திங்கள் - அறிவியல் தேர்வு


* 23.04.2024 - செவ்வாய் - சமூக அறிவியல் தேர்வு.


* 22,23 வருகைப் பதிவு "Partially working" in TN Attendance App...


* 24,25,26 தேதி -- வருகைப் பதிவு FULLY NOT WORKING in TN Attendance App...


*26.04.2024 - வெள்ளி -- கல்வி ஆண்டின்  பள்ளி இறுதி வேலை நாள்...



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

5ம் வகுப்பு வரை அனிமேஷன் பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு.

 kalvi_240418172331000000

வரும் கல்வி ஆண்டில் இருந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வீடியோ பாடங்களை நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.


இதற்காக, மத்திய அரசின் நிதியில் கிராமப்புற பள்ளிகளிலும், ஆன்லைன் இணையதள இணைப்புகள் பெறப்படுகின்றன. இந்த பணிகள் வரும் ஜூனுக்குள் நிறைவு பெற்று விடும் நிலையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு டிஜிட்டல் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களாக நடத்துவதற்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மணற்கேணி என்ற செயலியில், இந்த வீடியோ பாடங்கள் உள்ளதாகவும், அவற்றை பதிவிறக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20240422_213552

பள்ளிக் கல்வித் துறை - 2023 - 2024 ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களை வெளிநாடுகளில் உலக அளவில் / இந்திய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை பெறப்பட்டது - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விவரம் தெரிவிக்க கோருதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Kanavu Asiriyar _ National Tour_ Intimation Proceedings - Download here

இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்!👇

 Kanavu Asiriyar List - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் மதிப்பெண் தேவையில்லை; இந்த மருத்துவ படிப்புகளை கவனிங்க!

 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். எம்.பி.பி.எஸ் பலரது கனவாக இருந்தாலும், அதற்கு நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மேலும் ஆயுஷ் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண்கள் அவசியமாகிறது. அதேநேரம் நீட் மதிப்பெண் தேவைப்படாத மருத்துவம் சார்ந்த நிறைய படிப்புகள் உள்ளன. அவை சிறந்த வேலைவாய்ப்புகளையும் வழங்குகின்றன. படிப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்கின்றனர், இது மருத்துவ இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவாயிலாகும். கடுமையான போட்டி காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், எம்.பி.பி.எஸ் படிப்பில் பலர் சேர முடியவில்லை. எனவே மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த படிப்புகளை முயற்சிக்கலாம்.

இளங்கலை தொழில் சிகிச்சை

இளங்கலை தொழில் சிகிச்சை என்பது ஒரு நபரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான சிகிச்சையின் படிப்பைக் கையாளும் 4.5 ஆண்டு படிப்பு ஆகும். ஒரு தொழில்சார் சிகிச்சையாளர் உடல், உணர்வு அல்லது அறிவாற்றல் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கிறார். சிகிச்சையாளர் இதை நிறைவேற்ற சாதாரண நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் பிற சிகிச்சைகளைப் பயன்படுத்துகிறார். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் (பி.டெக்)

பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் என்பது நான்கு வருட பொறியியல் படிப்பு. பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பு இயற்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புகளின் பெரிய பகுதியை உள்ளடக்கியது. பயோமெடிக்கல் இன்ஜினியரிங் என்பது பொறியியல் துறையில் வளர்ந்து வரும் தொழிலாகும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை பயோடெக்னாலஜி

பி.எஸ்சி. பயோடெக்னாலஜி மூன்று ஆண்டு படிப்பு. இந்த படிப்பு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதை இலக்காகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்க அல்லது கண்டுபிடிப்பதற்காக உயிரியக்கவியல் செயல்முறைகளைப் படிப்பதில் அக்கறை கொண்டுள்ளது. இயற்பியல், வேதியியல் உயிரியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களுடன் அந்த 12 ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை நுண்ணுயிரியல்

இது மூன்றாண்டு பட்டப்படிப்பு. இது நம்மைச் சுற்றியுள்ள மண், நீர், உணவு, தாவரங்கள் மற்றும் மனிதர்கள் போன்ற பல பொருட்களில் இருக்கும் நுண்ணிய உயிரினங்களின் ஆய்வில் அக்கறை கொண்டுள்ளது. நுண்ணுயிரியல் நிபுணர் நாம் உண்ணும் உணவு மற்றும் நாம் வாழும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதி செய்கிறார். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையில், பெடாலஜிஸ்ட், நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜிஸ்ட், ஆடியாலஜிஸ்ட், ஆப்டோமெட்ரிஸ்ட், பெர்ஃப்யூசிஸ்ட், கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட், நியூட்ரிஷனிஸ்ட் உள்ளிட்ட படிப்புகளும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகளாக இருக்கின்றன

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News