இன்று இங்கெல்லாம் விடுமுறை அறிவிப்பு!!

 கனமழைகாரணமாககன்னியாகுமரிமாவட்டத்தில்உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறன. தற்போது கன்னியாகுமரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை கரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்படும் 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு நிவாரண முகாம் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட சிவன்தாங்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசபுரம் அரசு அரசினர் நடுநிலை பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment