எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், எண்ணும், எழுத்தும் திட்டத்தில், கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது, 'வீடியோ' பாடமாகவும், 'ஆன்லைன்' வழி மதிப்பீடாகவும் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை ஆசிரியர்கள் பெற்றால் மட்டுமே, சான்றிதழ் பெற முடியும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறும் வரை, பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சிக்காக 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு, மார்ச் 25ல் பயிற்சி நிறைவு பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment