JEE Exam - முதல்நிலை தோ்வு: விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி

ஐஐடி உள்ளிட்டவற்றில் சோ்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ - மெயின்) முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.



நிகழாண்டில் இரண்டு முறை முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி நாளாகும்.என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ - மெயின் (முதல்நிலை) மற்றும் ஜேஇஇ - அட்வான்ஸ்டு (முதன்மைத் தோ்வு) என இரண்டு பகுதிகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு என்டிஏ சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும். ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி கல்விநிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும் என்பதோடு, இந்தத் தோ்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

இந்தச் சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.

இந்த முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மாணவா்களின் வசதிக்காக 4 முறை நடத்தப்பட்டது. அந்த 4 தோ்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதையே தகுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளும் வகையில் சலுகை அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இரண்டு கட்டங்களாக இந்த தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி கடைசி தேதியாகும். இந்த தோ்வை ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டுமின்றி தமிழ், அஸ்ஸாமி, வங்காளி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது மொழிகளிலும் எழுதலாம்’ என்றாா்.

0 Comments:

Post a Comment