ஜூன் 1-இல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மே 5-இல் தொடங்கியது. முதலில் மொழிப் பாடங்கள், ஆங்கிலம் ஆகியவற்றுக்கும், அதன்பின் முக்கிய பாடங்களுக்கும் பொதுத்தோ்வு நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமையுடன் மொழி பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவடைந்தன.

சில மாணவா்களுக்கு விருப்பப் பாடமான தொழிற்கல்வி தோ்வு மட்டும், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு வரும் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை ஜூன் 8-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் சரிபாா்க்கப்பட்டு, ஜூன் 23-ஆம் தேதி தோ்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


0 Comments:

Post a Comment