இல்லம் தேடி கல்வி-- 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வு (Baseline Survey) 6.5.2022 க்குள் முடிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை வரும் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இல்லம்‌ தேடிக்‌ கல்வி மையங்கள்‌ 1 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாவட்டங்களிலும்‌ அனைத்து கறப்பாக செயல்பட்டு வருகிறது. மையங்களுக்கு வரும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம்‌. எனவே அதனை அறிந்து கொள்ளும்‌ விதமாக கற்றல்‌ மாணவர்கள்‌ அடைவுகளின்‌ அடிப்படையில்‌ குறைந்தபட்சம்‌ அடையவேண்டிய அனைத்து பாடங்களுக்கும்‌ அடிப்படை ஆய்வு 16 கைப்பேசி செயலியில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.


தன்னார்வலர்கள்‌ மையத்திற்கு வரும்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ அடிப்படை ஆய்வினை மேற்கொண்டு 6.05.2022 க்குள்‌ முடிக்க வேண்டும்‌. அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம்‌ மற்றும்‌ அதனை மேற்கொள்ளும்‌ விதம்‌ குறித்த வழிகாட்டுதல்கள்‌ https://www.youtube.com/watch?v=b1RY8LkD84g&feature=youtu.be&ab_channel=TNSCERT காணொளியில்‌ கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தன்னார்வலர்களுக்கும்‌ ஆசிரியர்கள்‌, பயிற்றுநர்கள்‌ , மாவட்ட ஆட்சியர் ஒருங்‌கணைப்பாளர்கள்‌ மற்றும்‌ வட்டாச்சியர்‌ ஒருங்‌கணைப்பாளர்கள்‌ வாயிலாக தகவல்‌ தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment