ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - முழுவிவரம் : ( Application Form Direct Link)


ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதள இணைப்பு.


Tamil Nadu Education Fellowship - Application Form - View here  

 ஃபெல்லோஷிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக , நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு , கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக " இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை " என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

 

இத்திட்டங்கள் அனைத்தும் , அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி , உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன . ஆர்வமும் , திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச , எழுத , படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்

விண்ணப்பம் செய்யும் காலம் : ஏப்ரல் 22 , முதல் ஜூன் 15 , 2022 வரை 

பணிக்காலம் : ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும்.

 மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் , பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட அரசு எடுத்து வரும் இச்சிறந்த முன்முயற்சியில் இணைந்து செயலாற்ற வாருங்கள் !

 


IMG_20220516_192722

IMG_20220516_192732

0 Comments:

Post a Comment