10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது.

முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment