ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி உருவாகக்கப்பட்டது பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் - தகவல் தெரிவித்தல் சார்ந்து.



IMG_20220613_185754


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர் . அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது . எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.05.2022 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி TNSED - Schools ( இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி ) ஒன்று உருவாகக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் இணைப்பில் தரப்பட்டுள்ளது . எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : செயலி விளக்க குறிப்பு

STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள்.pdf - Download Here 

 



0 Comments:

Post a Comment