அகவிலைப்படி அரசாணை எப்போது வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! செய்தி குறிப்பு எண்-1421

 அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 75 - வது சுதந்திர தின உரையில் , ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று , கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.


இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

அரசாணைகள் விரைவில் தனித்தனியே அரசு இதற்கான வெளியிடப்படும் . 

  

Click here to Join WhatsApp group for Daily kalvi news

0 Comments:

Post a Comment