26.11.2022 அன்று நடைபெற இருந்த CRC வகுப்புகள் 03.12.2022க்கு ஒத்திவைப்பு - SCERT இயக்குநர்!

 


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து , 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் Phonetics ) சார்ந்தும் . 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு Spaken English சார்ந்தும் மாநில அளவிலான முதன்மை வதுவளளர் ( Chief Facilitator ) கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான வதுவாளர்களுக்கான கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

 குறுவளமைய ( CRC ) அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் 26.11.2022 அன்று நடைபெறவிருந்தது . அக்கூட்டம் 03.12.2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment