ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

 அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து , நீண்ட நாட்க ளாக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் , ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவது தொடர்பாக , கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் , மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி , உரிய தீர்வு காணுமாறு , கல்வி அலுவலர்களுக்கு , பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments:

Post a Comment