“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023

 " நான் முதல்வன் திட்டம் " - போட்டித் தேர்வுகள் பிரிவு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.



 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு " தொடக்க நிகழ்ச்சி இன்று ( 07.03.2023 ) சென்னை , கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித்தேர்வுகள் பிரிவின் கீழ் அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி ( SSC ) . ரயில்வே ( RAILWAY ) , வங்கி ( BANKING ) மத்திய ( UPSC ) தமிழ்நாடு அரசுப்பணி ( TNPSC ) , இராணுவம் ( DEFENCE ) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.



0 Comments:

Post a Comment