இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி அறிவிப்பு

 

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டுவருகிறது.

சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது , இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது.

 இப்பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.


State Level Training date & Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment