தமிழில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு

 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மூன்று பாடப்பிரிவுகள் தமிழில் துவங்கப்படும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்பாடுகள் மற்றும் வருங்கால புதிய திட்டங்கள் குறித்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.


இதில், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


கூட்டத்துக்கு பின் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


வரும் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி படிப்புகள் துவங்கப்படும்.


சிவில், மெக்கானிக்கல் பாடங்களில் தமிழ் வழி படிப்பில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment