10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? சிபிஎஸ்இ அறிவிப்பு

 


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 55 நாள்கள் பொதுத் தேர்வு நடைபெறும் எனறு தெரிவித்துள்ளது.


சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்ட அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும். தேர்வு அட்டவணை, பல்வேறு மாநிலங்களிடமிருந்து வரும் பரிசீலனைகளை ஏற்ற மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத் தேர்வுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும்.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான தேர்வுகளும், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெறவிருக்கின்றன. தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு ஏற்ற வகையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். முக்கிய பாடத்திட்டங்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும் என்பதால், மாணவ, மாணவிகள் அதற்கேற்ற வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடங்களுக்கான நேரங்களை உரிய முறையில் ஒதுக்கி, அன்றைய பாடங்களை அன்றைய நாளிலேயே படித்து தேர்வுக்குத் தயாராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment