19.08.2023 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் - Proceedings

 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் , ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கடந்த 21.07.2023 அன்று அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

 அந்நாளினை ஈடு செய்யும் விதமாக 05.08.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது . தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 05.08.2023 பதிலாக 19.082023 ( மூன்றாவது வாரம் ) அன்று பணி நாளாக அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வரும் 19.08.2023 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே , செங்கல்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் 19.08.2023 சனிக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.



Click here to join whatsapp group for daily kalvinews update 


 Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment