மகாகவி பாரதியார் பிறந்த தினம் ( 11.12.2021 ) poem

 


.com/img/a/

 .......... மகாகவி பாரதி வாழிய !
====================

எட்டைய புரத்தில்
எரிமலை சமைத்தார் - அவர்
எண்ணிய விடுதலை வரும்படி அமைத்தார் ,

கட்டிய கவியில்
கரைய வைத்தார் - நமைக்
கவர்ந்திடும் வரிகளில் உறைய வைத்தார் ,

கொட்டிய வார்த்தையில்
குரல்வளை நெரித்தார் -தன்
கொடூர அக்னி பரல்களை விரித்தார் ,

வெட்டிடும் பாடலில்
வீரத்தைப் பதித்தார் - அதில்
வெள்ளையர் அடிமை கோரத்தைச் சிதைத்தார் ,

தமிழின் பெருமையைத்
தன்கவியில் உரைத்தார் - அதில்
தன்மானம் உயிரென பொன்கவியில் கரைத்தார் ,

உமிழும் வரிகளில்
உணர்வைக் கூட்டினார் - நம்
உள்ளத்தில் எழுந்திடும் அயர்வை மாற்றினார் ,

கமழும் தமிழைக்
கவியில் காட்டினார் - தன்
கருத்தினை விளக்கியே புவிதனில் நாட்டினார் ,

சிமிழாய் உரிமையைச்
சிதையாமல் காத்தார் - நம்
சிந்தையில் பாரதி விதையாகச் சேர்த்தார் .

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment