School Morning Prayer Activities - 04.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 04.11.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால், 

அ‌திகார‌ம் :அறன் வலியுறுத்தல்,

 குறள் :32 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை 

பழமொழி :

All art is but imitation of nature.

அனைத்து கலைகளும் இயற்கையின் பிரதிபலிப்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.

 2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்


பொது அறிவு :

1. மத்திய தரை கடலின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது எது ? 

 ஜிப்ரால்டர்

 2. ரோஸ் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுவது எது? 

 ஜெய்ப்பூர்.

English words & meanings :

Radiology - study of x-ray and it's medical applications. Noun. ஊடுகதிர் அல்லது எக்ஸ்ரே குறித்த மருத்துவ படிப்பு 
ஆரோக்ய வாழ்வு :

யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.



NMMS Q :

இரண்டாம் உலகப்போரின் போது பாராசூட்டுகளுக்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை ______________ஆகும். 

 விடை: நைலான்

நீதிக்கதை


நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். 

நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். 

அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். 

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

இன்றைய செய்திகள் - 04.11.22

* சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

* பருவமழையின்போது எவ்வித தடையும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரம்ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

* 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா, நந்திதாவுக்கு தங்கம்.

* உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
 
Today's Headlines


 * 4.5 cm of rain has been recorded in 30 minutes in Chennai - Anna Nagar.  Specifically, 2 cm of rain has been recorded in 10 minutes.

 * Electricity Minister Senthil Balaji  said  11 thousand additional workers have been appointed across Tamil Nadu to ensure smooth power distribution during monsoons.

* The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in the delta districts of Tamil Nadu for the next 2 days.

*  Linking of Aadhaar Number with Electoral Roll:  Details of 55 Percent peoples were collected - Tamil Nadu Chief Electoral Officer Informed

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்



கனமழை காரணமாக ,

* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)

* திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 




* சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya

 

Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya


Topic  : Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya


File type   :   PDF


Medium  : Tamil Medium


Prepared By  : Surya Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download pdf file





4th STANDARD TERM II ALL SUBJECTS ALL UNIT FA(B) ACTIVITIES WORKSHEET (PDF) | 4 ஆம் வகுப்பு பருவம் 2 அனைத்துப் பாடங்கள் அனைத்து அலகுகளும் வளரறி மதிப்பீடு (ஆ) செயல்பாடுகள் பயிற்சித்தாள்கள்

 தமிழ் :


1. காவல்காரர் - CLICK HERE

2. எல்லாரும் இப்படியே இருந்து விட்டால்- CLICK HERE

3. யானைக்கும் பானைக்கும் சரி- CLICK HERE

4. நன்னெறி - CLICK HERE

5. பனிமலைப் பயணம் - CLICK HERE

6. ஆராய்ந்திட வேண்டும் - CLICK HERE

7. திருக்குறள் கதைகள் - CLICK HERE

8. பசுவுக்குக் கிடைத்த நீதி - CLICK HERE

9. வேலைக்கேற்ற கூலி - CLICK HERE

ஆங்கிலம் :

1. AFFECTION - CLICK HERE

2. SAVINGS - CLICK HERE

கணிதம் :

1.வடிவியல் - CLICK HERE

2.எண்கள்- CLICK HERE

3.அமைப்புகள் - CLICK HERE

4.அளவைகள் - CLICK HERE

5.காலம் - CLICK HERE

6.பின்னங்கள் - CLICK HERE

7.தகவல் செயலாக்கம் - CLICK HERE

அறிவியல் :

1.உணவு -CLICK HERE

2. நீர் - CLICK HERE

3. தாவரங்கள் - CLICK HERE

சமூக அறிவியல் :

1. சங்க கால வள்ளல்கள் - CLICK HERE

2.தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புகள் - CLICK HERE

3. போக்குவரத்து - CLICK HERE


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6th To 10th - 2nd Mid Term - Time Table & Exam Portions

நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 வரும் நவம்பர் 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


வருகின்ற நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.


மேலும், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

SCERT - Carrier Guidance Training

 




உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உண்டு, உறைவிடப் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - SCERT - Carrier Guidance Training - Proceedings - Pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

கனமழை காரணமாக இன்று (3.11.22) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டம்

1) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (3.11.22) விடுமுறை

2) மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

3) விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -(3.11.2022)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -(3.11.2022)





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022

_20180701_211806


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.




பழமொழி :

Action speaks louder than words.

சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.


இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 




பொன்மொழி :

நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்

பொது அறிவு :

1. இந்தியாவின் பட கேமராவை முதலில் தயாரித்தவர் யார்? 

 ஆனந்த் ராவ் .

 2.கிளிசரைல் மற்றொரு பெயர் யாது ?

 நைட்ரோ கிளிசரின்.

English words & meanings :

Pa-le-o-bo-ta-ny - study of ancient plants. பண்டைய தாவரங்கள் குறித்த அறிவியல் படிப்பு 

ஆரோக்ய வாழ்வு :

ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

NMMS Q :

வலுவான இழை __________ஆகும்.

 விடை: நைலான்

நீதிக்கதை

ஆந்தை பெற்ற சாபம்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. 

நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். 

ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர். 

அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. 






அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. 

நீதி :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

இன்றைய செய்திகள்

02.11.22

* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.

* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.

* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி அளித்ததே விபத்துக்கு காரணம்.

கனமழை காரணமாக இன்று(02.11.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

IMG_20221102_063442_850
கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.11.2022

கனமழை காரணமாக



* சென்னை
* திருவள்ளூர்
* வேலூர் ( பள்ளிகளுக்கு  )
* இராணிப்பேட்டை




* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )
* விழுப்புரம் ( பள்ளிகளுக்கு  மட்டும்)
* செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )
ஆகிய  மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை அறிவிப்பு




*திருப்பத்தூர் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


*திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 
*

ENNUM EZHUTHTHUM| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 1,2,3 |CLASS 1,2,3| ENG | EP 01|T2 | KALVI TV|

 ENNUM EZHUTHTHUM| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 1,2,3 |CLASS 1,2,3| ENG | EP 01|T2 | KALVI TV|

The teacher introduces the basic expressions in conversation




ENNUM EZHUTHUM|எண்ணும் எழுத்தும் | T2| ENG|CLASS 1,2,3 |வகுப்பு 1,2,3| EP 02| KALVI TV |

 The teacher introduces the basic expressions in conversation.


👉🏻Click here to Join WhatsApp group for Daily kalvi news 

EE TAM| EP 11|. எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3|CLASS 1,2,3.|KALVI TV|.

பாடல்கள் வழியாக பாடங்களை மாணவ்ர்கள் கவனிக்கவும், ஆர்வமூட்டவும், கதைகள் சொல்லியும் ,எழுத்துக்கள் எழுதி மாணவர்கள் உச்சரிப்புடன் எழுத வைத்தல் பற்றியும் ஆசிரியர் இப்பகுதியில் மிக தெளிவாக விவரிக்கிறார்.



 


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TAM EP 10| எண்ணும் எழுத்தும் |ENNUM EZHUTHUM| KALVI TV|

 மாணவர் ஆசிரியர் உரையாடல் மாணவர்களின் மன உணர்வை வெளிப்படுத்த செய்தல். ஒருமை, பன்மை, திட்டமிட்ட செயல்பாடு ,திட்டமிட்டு செய்யும் துணைகருவிகள் , மாணவர் நடிப்பு திறன் வெளிப்பாடு மாணவர் தமக்குரிய தவறுகளை தாமே திருத்துதல் பற்றியும் ஆசிரியர் இப்பகுதியில் மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறார் எண்ணும் எழுத்தும்





5th Standard - Term II - Mind Map for All Subject

கனமழை காரணமாக இன்று (01.11.2022) பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் - 8

 கனமழை எச்சரிக்கை காரணமாக  இன்று 01.11.2022

 
  1. சென்னை, 
  2. திருவள்ளூர்,  
  3. காஞ்சிபுரம், 
  4. செங்கல்பட்டு 
  5. தஞ்சாவூர்  
  6. மயிலாடுதுறை
  7. திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி)
  8. நாகை ( பள்ளி,  கல்லூரி)
 
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.



பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் - PDF

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள்
Screenshot_2022-10-31-08-23-17-77_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f


CLICK HERE TO DOWNLOAD PDF  


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material

 

E E - Term 2 - Module 3 Study Material 

 Tamil - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here


English - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here


Maths - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

 

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படும்.


இதன்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 200 தலைமை ஆசிரியர்; உயர்நிலைப் பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டே பணிக் காலம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு டிச., 31 வரை பணி நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ஆசிரியர் பணி: பாடத்திட்டம் விரைவில் மாற்றம்

 

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக நியமனங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்திருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு பி.எட்., படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.


இந்த போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் உருவாக்கி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


இதற்காக, பாடத்திட்ட மாற்றம் குறித்து, அடுத்த மாதம் தேர்வு வாரிய ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

School calendar - November 2022

 நவம்பர் 2022 - பள்ளி நாட்காட்டி 


01.11.22, செவ்வாய்:

சிறப்பு கிராம சபா கூட்டம்


02.11.22, புதன்:

கல்லறைத் திருநாள் (RL) 


05.11.22, சனிக்கிழமை :

குறைதீர் நாள்


08.11.22, செவ்வாய்:

குருநானக் ஜெயந்தி (RL) 


12.11.22, சனிக்கிழமை:

CRC பயிற்சி


19.11.22, சனிக்கிழமை:

ஈடு செய்யும் வேலைநாள்


முக்கிய தினங்கள்:


11.11.22, வெள்ளி:

தேசிய கல்வி தினம்


14.11.22, திங்கள்:

குழந்தைகள் தினம்


21.11.22, திங்கள்:

உலக மீன்வள தினம்


22.11.22, செவ்வாய்:

தேசிய மாணவர் படை தினம்


வாக்காளர் சேர்ப்பு

சிறப்பு முகாம் நாள்கள்:


12.11.22, சனிக்கிழமை 

13.11.22, ஞாயிறு

26.11.22, சனிக்கிழமை

27.11.22, ஞாயிறு


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊக்க ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும்? - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதி தேர்ச்சி பெற்றமைக்காக வழங்கப்பட்ட வந்த ஊக்க ஊதிய உயர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.


 இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பார்வை 2 ல் காண் அரசாணையில் வழங்கப்பட்ட தெளிவுரையின்படி 10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அரசிடமிருந்து பெறப்படும் ஆணையின் அடிப்படையில் மனுதாரர்க்கு உயர்கல்வி தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.





2nd Std- Term - 2- 4 in 1 Ganga Guide - tamil medium

 2nd Std- Term - 2-  4 in 1 Ganga Guide  - tamil medium


Click here to download pdf file


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

5th STD -2nd TERM-GANGA GUIDE-T/M- PDF FILE - ALL Subjects

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

 புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:


புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது.


இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைதளத்தில் http://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இவ்வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.


அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிவரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.


மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.


மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை -9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

2ஆம் அலகுத் தேர்வு / இடைப் பருவத் தேர்வு - கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் வெளியீடு!

 

சென்னை மாவட்டம் - 2ஆம் அலகுத் தேர்வு / இடைப் பருவத் தேர்வு - கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் வெளியீடு!


2nd midterm Time Table & Syllabus - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

மாநிலம் முழுக்க CRC மைய வாரியாக வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவரம்.

மாநிலம் முழுக்க CRC மைய வாரியாக வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவரம்.


CRC wise School Mapping BEO New list - Download here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news