HS HM Promotion Case Judgement:
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
HS HM Promotion Case Judgment Copy - Download here
Education and Information
HS HM Promotion Case Judgement:
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
HS HM Promotion Case Judgment Copy - Download here
Click here for latest Kalvi News
2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.
ஒன்றிய அளவிலான பயிற்சி
24-04-2023
25-04-2023
26-04-2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
SCERT Proceedings - Download here
Click here for latest Kalvi News
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2- ல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்.
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு தொகுத்தறி தேர்வு தேதி & தேர்வுகள் நடத்துதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
Assessment Proceedings for Term - III - 23.03.2023.pdf - Download here
Click here for latest Kalvi News
.
கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது.
இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.
தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
Click here for latest Kalvi News
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி, உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.
Click here for latest Kalvi News
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2023 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.
சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.
இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 " என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
காசோலை மூலமாக (By sending Demand Draft):- கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடுன் அவர்களுக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல் பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576) உத்தரகாண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
இணையவழி மூலமாக (online payment) : இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின் ) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2011 க்கு முன்னதாகவும் 01-07-2012 - க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01-01-2024- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில்(Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in பார்க்கவும் என்று தெரிவித்துள்ளது.
Click here for latest Kalvi News
National Curriculum Framework for the Foundational Stage: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும். இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (அங்கன்வாடி மையங்கள் மூலமாக கற்றல் நடைபெறும்) 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும்.
இந்த 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான தேசியப் பாடத்திட்ட கற்பித்தல் கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கியது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், நாட்டிலுள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில், நர்சரி வகுப்பு முதல், இரண்டாம் வகுப்பு வரையில் ஐந்து வகுப்புகளுக்கு இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அமல்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது . நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த புதிய கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடதிட்டங்களை தனியார் பதிப்பகங்கள், பாடபுத்தகங்களாக அச்சிடலாம். இதை பின்பற்றி தனியார் பதிப்பகங்கள், பாட புத்தகங்களை தயாரித்து வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அந்தந்த மாநில மொழி பாடம், இந்தி , ஆங்கிலம் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Click here for latest Kalvi News
💥SMC/SNA ACCOUNT NEW UPDATE
🟪 PRIMARY
🟢 1.6.1.11.7 என்ற component code -யில் Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.10 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....
🟨 UPPER PRIMARY
🟢 1.6.1.11.7 என்ற component code -யில் *Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.60 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....
🟢 F.03.08 என்ற component code- யில் LEP Class IX - XII என்ற component name - யில் ₹.1392 வரவு வைக்கப்பட்டுள்ளது...
▪️LEP - Learning Enhancement Program / Remedial Teaching
இதுபோன்று நமது பள்ளியின் SNA Account- யில் வரவு வைக்கப்படும் தொகை விரவங்களை component code , name wise தெரிந்து கொள்வது எப்படி?
கீழே உள்ள காணொளி யை காணவும்
👇👇👇👇👇👇👇👇👇
Click here for latest Kalvi News
தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.
இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Click here for latest Kalvi News
நடைபெறவுள்ள ஏப்ரல் பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் வகுப்பினை உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறையில் இருக்க வேண்டிய தகவல்கள்
எண்ணும் எழுத்தும் கள ஆய்வு படிவம்.
Ennum Ezhuthum Class Room - Inspection Form - Download here
Click here for latest Kalvi News
கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 31.03.2023 தேதி நடைபெறும் என அறிவிப்பு
Click here for latest Kalvi News
6 முதல் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கி, தேர்வன்று பள்ளிகளிளேலே பிரிண்ட் எடுத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பபட்டுள்ளன. வெளி இடங்களில் பிரிண்ட் எடுப்பதன் மூலம் வினாத்தள் லீக் ஆவதை தடுக்க கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
Click here for latest Kalvi News
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் ( Pdf )
Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here
Click here for latest Kalvi News
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி
* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி
* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி
தமிழக பட்ஜெட் 2023 - 2024 | கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்
* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்
* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்
* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்
* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்
* திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்
TN BUDGET - EDUCATION ANNOUNCEMENT - Download here pdf
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்
Ennum Ezhuthum Celebration Invitation - Download here
Click here for latest Kalvi News
Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Colleges of Education forthe year 2023-2024
Total Vacancies 4136
Trb notification 18.03.23 - Download here
Click here for latest Kalvi News
வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்
Rainbow Forum - Winners List - Download here...
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்..pdf file செய்தியின் கீழ் உள்ளது....
எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,
✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கி எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி அளவில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் என்ற நிகழ்வு 20.3.23 & 21.3.23 ஆகிய தேதிகளில் 1,2 & 3 வகுப்பு மாணவர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற வேண்டும்.
✏️இந்நிகழ்வை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் 20.3.23 அன்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 20.3.23 மற்றும் 21.3.23 ஆகிய நாட்களில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்வு அட்டவணையில் உள்ளபடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
✏️இது சார்ந்த தகவல்களை 1,2 & 3 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய முறையில் தெரிவித்து அவர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் நாளில் தங்கள் பள்ளியில் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
✏️எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை கையாளும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தாங்கள் செய்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களின் படைப்புகள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட TLM ஆகியவை கொண்டு வகுப்பறையை இன்றே (17.3.23) அழகு படுத்த வேண்டும். இதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்
✏️மேலும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெறும் நாளன்று 9:45 மணி முதல் 11 மணி வரை என் மேடை என்ற நிகழ்வு நடைபெறும். இதில் மாணவர்கள் தங்கள் எண்ணும் எழுத்தும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடல்களை தனியாகவோ குழுவாகவோ ஆடல் பாடல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் . ஆகவே இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஆடல் பாடல்களுக்கான எண்ணம் எழுத்தும் பாடல்களை
தேர்வு செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
✏️மேலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டை பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளளதால் அது சார்ந்தும் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Click here -விழிப்புணர்வு வாசகங்கள்..pdf
Click here for latest Kalvi News
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!
⚘நாள்:19.03.2023
⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை
⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி
⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்
⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்
⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.
⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)
⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி, விடைத் தாள் களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்
⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).
Click here for latest Kalvi News
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!
Library Books List - Download here
Click here for latest Kalvi News