ஸ்டெம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று கடைசி

 இங்கிலாந்தில் உள்ள 19 பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - ‘ஸ்டெம்’) ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள ஏதுவாக உதவித் தொகை தரப்படுகிறது.


நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) ‘ஸ்டெம்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்கான அவகாசம் இன்று (மார்ச் 31) முடிகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem என்ற இணையதள லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகி விஷு சர்மாவை vishu.sharma @britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.


Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் போட்டி - நடைமுறைகள்

 

கனவு ஆசிரியர் போட்டிக்கான நடைமுறைகள் - வீடியோ



Click here for latest Kalvi News 

மே முதல் வாரத்தில் 10ம் வகுப்பு -ரிசல்ட்?

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்த பணிகளை, மே, 4க்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர் என, மொத்தம், 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.


இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வு, கடந்த, 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 30 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராதது தெரிய வந்தது. அவர்களை, செய்முறை தேர்வில் பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்காக, செய்முறை தேர்வுக்கு, இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


அரசு தேர்வுத்துறை, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்.,25ல் துவங்கி, மே, 3 வரை நடக்கும். மதிப்பெண் பட்டியல், மே, 4ல், தேர்வுத்துறையின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்படும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதனால், மே மாதம் முதல் வாரத்திலேயே, 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கம்?

 பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன.


திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.


திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


கும்பகோணத்தை தலைமையிடமாக்கி புதிய மாவட்டம் உருவாக்கும்படி பா.ம.க., வலியுறுத்தி வருகிறது.


புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகவும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு புதிய மாவட்டங் களுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்


Click here for latest Kalvi News 

SSLC Examination April 2023 - Valuation Camp Schedule

 10th Exam - Paper Valuation Camp Schedule - April 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் கால அட்டவணை


Paper Valuation Camp Schedule - Download here

All Dt Venue List - Download here

Click here for latest Kalvi News 

SSLC Public Exam Apr 2023 - Paper Valuation Camp Schedule & All Dt Venue List

 

SSLC Public Examination Apr 2023 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் தமிழகம் முழுமைக்குமான விவரம் மற்றும் மதிப்பீட்டு அட்டவணை வெளியீடு!

Paper Valuation Camp Schedule - Download here

All Dt Venue List - Download here

Click here for latest Kalvi News 

2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்

 புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 2024-25 கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டு வருகிறது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின்

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


2024-25 கல்வி ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. புதிய கல்விக்கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click here for latest Kalvi News 

ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

Click here for latest Kalvi News 

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்துவோருக்கு திடீர் கட்டுப்பாடு

 எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும். இந்நிலையில், விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:


> முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.


> மாணவர்கள் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நேரிடுகிறது. இதன்மூலம், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் தங்கள் பணியை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.


> உதவி தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களை விட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.


> விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


> மதிப்பீடு செய்ததில் அதிகளவில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப் பேற்க வேண்டும். மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.


Click here for latest Kalvi News 

School Calendar - April 2023

 பள்ளி நாட்காட்டி - ஏப்ரல் 2023

💡17.04.2023 - 21.04.2023 வரை 1- 3 ஆம் வகுப்பு - எண்ணும் , எழுத்தும் SA தேர்வு 


💡20.04.2023 - 28.04.2023 வரை 4 - 9 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு

எண்ணும் எழுத்தும் பயிற்சி 

 💡24.04.2023 - 26.04.2023 

 எண்ணும் எழுத்தும் ( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி )  ( Ennum Ezhuthum ) பயிற்சி 


அரசு விடுமுறை நாட்கள் 

💡04.04.2023 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி 

💡07.04.2023 - வெள்ளி - புனித வெள்ளி

💡14.04.2023 - வெள்ளி - தமிழ் புத்தாண்டு 

💡22.04.2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை 


RL - மதவிடுப்பு


💡06.04.2023 -- வியாழன் -- பெரிய வியாழன் 

💡18.04.2023 -- செவ்வாய் -- ஷாபே காதர் 

💡28.04.2023 -- வெள்ளி -- பள்ளி இறுதி வேலை நாள்


Click here for latest Kalvi News 

கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை.

 தமிழக அரசின் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர பணியிடத்தில் முறையாக ஒப்புதல் பெற்று, (அப்போதைய பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012. க்கு முன்பு) பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அதிமுக அரசிடம் பலமுறை எடுத்துச் சென்றோம். ஆனால் பயன் ஏதுமில்லை.


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சிக் காலத்திய அரசாணைகளின் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரே காரணத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக TET லிருந்து விலக்கு அளிக்காமல் விட்டுவிட்டனர். மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் AIDED பள்ளி ஆசிரியர்கள் ஆட்சி விரைவில் மாற்றம் ஏற்படும், அப்போது நமக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆட்சிக்காக இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இன்று வரை தற்போதைய திமுக அரசும் எந்தவொரு தீர்வும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.

இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்   ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கொடுத்து உள்ளனர்.

 எதிர்வரும் சட்டமன்றக் கூட்ட, கல்வி மானிய கோரிக்கை நாளன்று ஒரு நல்ல முடிவு வரும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணியிட அரசு , அரசு உதவிபெறும்  சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் குடும்பங்களின் 11 வருட கால வேண்டுகோளை ஏற்று விடியல் ஏற்படுத்தித் தர திமுக அரசால் மட்டுமே இயலும் என்று பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click here for latest Kalvi News 

பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் 29.11.2022-ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  


தமிழ்நாட்டில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 

போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம்  500 அரசு நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தரப்படுமா எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதலமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், WiFi வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக  அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


Click here for latest Kalvi News 

Breaking : TET Paper 2 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இறுதி விடைக் குறிப்புடன் வெளியீடு

TET Paper 2 - Exam Result Published 

.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -11 ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.022023 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது . இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர் . தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative key Answer ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in- ல் 22.02.2023 அன்று வெளியிடப்பட்டது.


 தற்காலிக விடைக்குறிப்பிற்கு 22.02.2023 முதல் 25.02.2023 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை ( Objections ) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது . ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வு விடைத்தாளினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன . தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்படுகிறது.

Click here for Result (Individual Query)

Click here for Mark list of all candidates

Click here for Final Key

Click here for Status of Objections

Click here for With-held Candidates List


Dear Candidate,

The Scorecard for TNTET Paper II is available for download in the Candidate Dashboard.

Please download the Scorecard by following the steps given below:

1.Go to https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ 

2.Login with your Registered User ID and Password

3.Go to Candidate Dashboard

4.Click here to download Scorecard

Regards

TRB 

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் - நம்ம School - நம்ம ஊரு பள்ளி உறுப்பினர் செயலரின் வழிகாட்டுதல்கள்!

 



பள்ளிக் கல்வித் துறை “ நம்ம School - நம்ம ஊரு பள்ளி " இணையதளம் மற்றும் சமூக பங்களிப்பு நிதி ( CSR ) , பொருட்கள் மற்றும் தன்னார்வ சேவைகள் பெறுதல் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான பதிவுகள் ஊக்கப்பபடுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு செயலரின் வழிகாட்டுதல்கள்!

SPD - School Needs Updation & Alumni.pdf - Download here...

Click here for latest Kalvi News 

எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!

 எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் , மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக் கேற்றவாறு முடிவு செய்து , தேர்வு நேரத்தில் சலுகைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Click here for latest Kalvi News 

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது பணியில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


அதில் கூறியதாவது; பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.


Click here for latest Kalvi News 

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

 சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். 

சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

Click here for latest Kalvi News 

வரும் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம்: முதல் பருவ மாநில அளவிலான பயிற்சி ஏப்.5-ல் தொடக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலும் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் முதல் பருவத்துக்கான மாநில அளவிலான பயிற்சி மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது.


இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


2022-23-ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான (2023-24) எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி தொடர்பான தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கான முதல் பருவ பாடங்கள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.


இதைத்தொடர்ந்து, 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முதல் பருவத்துக்கான பயிற்சிகளை மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 5 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் ஏப்ரல் 4-ம் தேதி இரவு 8 மணிக்குள் வருகை புரிய வசதியாக அவர்களை பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து, மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஏப்ரல் 10 முதல் 12-ம் தேதி வரையும் அதன்பிறகு ஒன்றிய அளவிலான பயிற்சி ஏப்ரல் 24 முதல் 26-ம் தேதி வரையும் நடத்தப்படும்.


Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  

CEOs & DEOs அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் திடீர் மாற்றம் - பள்ளி கல்வி ஆணையர்

 


பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 28.03.2023 , 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால் 28.03.2023 அன்று நடைபெறுகின்ற கூட்டம் இரத்து செய்யப்படுகிறது தற்போது 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய இரு நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . 29.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மற்றும் 30.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) , APO's ( Elementary ) , DCs ( in DEO Elementary office ) , TamilNadu Education Fellows ( in DEO Elementary office ) ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் அலுவலர்கள் கலந்து கொள்வது சார்ந்து தகவல் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here for latest Kalvi News 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.


மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

Year End Submission Forms for Primary And Upper Primary Schools

Year End Submission Forms 2022 - 2023

கல்வி ஆண்டின் இறுதியில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய படிவங்கள்


Working Days - Download here

5+ - Download here

TRs Address - Download here

Teachers Leave Details - Download here

Census 2023 - Download here

Result Abstract - Download here

BEO Covering Letter - Download here

Free Book & Dress - Download here

Free Note Book - Download here

TC Request Letter - Download here

 EER 2023 - 2024 | Download here

Result 2023 - 2024 | Download here

 Click here for latest Kalvi News 

School Education - New Student Admission Form 2023 - 2024


பள்ளிக்கல்வித்துறை  - புதிய மாணவர் சேர்க்கை விண்ணப்பம்


School Education - New Student Admission Form 2023 - 2024 | Download here

Click here for latest Kalvi News 

EMIS POTENTIAL DROPOUT NEW UPDATE

 

EMIS POTENTIAL DROPOUT NEW UPDATE


நமது பள்ளியில் தொடர்ச்சியாக *3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு


காரணம்


மீண்டும் பள்ளிக்கு வருகை புரியும் தேதி


பதிவு செய்வதற்கான வழிமுறை


👇👇👇👇👇


Click here for latest Kalvi News