TNSED - Library Module All New Changes Demo Video

 TNSED LIBRARY MODULE ALL NEW CHANGES DEMO VIDEO


TNSED APP LIBRARY MODULE-ல் SCHOOL LOGIN-ல் புத்தகம் ADD மற்றும் DELETE செய்வதில் புதிய மாற்றங்கள்.


TEACHER'S LOGIN -ல் BOOK ASSIGN செய்வதில் கொண்டுவரப்பட்டுள்ள AUTOMATIC CREATION, MANUAL CREATION போன்ற புதிய மாற்றங்கள் குறித்த


 பள்ளிக் கல்வித்துறை Demo Video 

👇👇👇👇👇


https://youtu.be/a0Djz0DKch4


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 19.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.06.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 196

பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

விளக்கம்:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

பழமொழி :
A contented mind is a continual foot

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. டிசிடெரியஸ் எராஸ்மஸ்

பொது அறிவு :

1.உலகின் மிகப்பெரிய மலைக்காடு எது? 

அமேசான்.    

 2. முதல் செய்தித்தாள் தொடங்கிய நாடு எது? 

சீனா

English words & meanings :

 wrath - anger, கோபம். wiles - tricks,தந்திரங்கள்
ஆரோக்ய வாழ்வு :

நாம் உட்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர் வகைகள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

நீதிக்கதை

ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து இருந்தது.

அந்தப் பக்கமாகச் செல்லும் சிறுவர்கள், அவனைக் கூனன் என்று சொல்லி, கேலி செய்வார்கள். அதற்காக அவன் வருத்தப்படவில்லை. சிறுவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல், தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.

ஒரு நாள் சிறுவர்கள் சிலர் கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், ஆற்றில் குளித்தான். சிறிது தூரத்தில் இருந்த சூழலில் அவன் சிக்கிக் கொண்டு தவித்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. மற்ற சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாது. எதுவும் செய்ய முடியாமல் கூச்சலிட்டனர்.

அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்ட கூனன், வேகமாக ஓடி

ஆற்றில் குதித்து, மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பிடித்து இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்தான். சிறுவன் குடித்திருந்த நீரை வெளியேற்றினான். அவன் உயிர்

பிழைத்துக் கொண்டான்.

சிறுவர்கள் கூனனிடம் நன்றி கூறி, தங்களை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டனர். அது முதல் கூனன் என்று கேலி செய்வது இல்லை.


எவரையும் கேலியாகப் பேசக் கூடாது.

இன்றைய செய்திகள்

19.06. 2023

* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க 20 கோடி 
மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.

* சர்வதேச தந்தையர் தினமான இன்று, சூரத்தில் டீ மற்றும் சிற்றுண்டி வியாபாரம் செய்து வரும் தந்தை, தனது 3 பெண் குழந்தைகளை தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக உருவாக்கி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால்  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

* இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

*யோகாவை அன்றாட வாழ்வில் அங்கமாக மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி.

Today's Headlines

*  To prevent traffic congestion in Pattukottai, Thanjavur district 20 crores worth New bus station is designed.

* On International Father's Day , a father who runs a tea and snack business in Surat, has made his 3 daughters into national level wrestlers, spreading happiness.

* Due to the prevailing upper circulation in South-West Bay of Bengal, there will be thunderstorms in many places in Tamil Nadu, Puducherry and Karaikal.

*In the final round of the Indonesia Open Badminton Tournament, the Indian team defeated the Malaysian team and won the champion title.

* People should make yoga a part of their daily life - PM Modi.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Forums & Clubs in Govt Schools - CRC Meet June 2023

 

அரசு பள்ளிகளில் மன்றச் செயல்பாடுகள்

Forums & Clubs in Govt Schools - CRC Meet June 2023 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CPD Training (17.06.2023) ALL MATERIAL IN SINGLE FILE

 


CPD Training (17.06.2023)


ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது சனிக்கிழமை 17.6.2023 இன்று நடைபெற இருக்கிறது.


CPD TEACHER TRANING ALL LINK IN SINGLE FILE CLICK HERE

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக்கல்வி வளர்ச்சி தொடர்பாக சென்னையில் ஜூன் 22, 24-ல் கலந்துரையாடல் கூட்டம்

 


பள்ளிக்கல்வி வளர்ச்சி மற்றும் பணியாளர் நலன் குறித்து, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-ம் நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும்.


இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CTET Exam - Notification

 

The candidates registered for 17th edition of Central Teacher Eligibility Test ( CTET ) are hereby informed that the CTET examination will now be conducted in offline mode i.e. pen - paper ( OMR ) based on 20.08.2023 ( SUNDAY ) all over India in the specified cities . 

The detailed Information Bulletin containing details of examination , syllabus , languages , eligibility criteria and other relevant information is already available on CTET official website https://ctet.nic.in


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் 30.06.2023 மற்றும் 01.07.2023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு

 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மூன்று பாடப்பிரிவுகள் தமிழில் துவங்கப்படும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்பாடுகள் மற்றும் வருங்கால புதிய திட்டங்கள் குறித்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.


இதில், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


கூட்டத்துக்கு பின் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


வரும் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி படிப்புகள் துவங்கப்படும்.


சிவில், மெக்கானிக்கல் பாடங்களில் தமிழ் வழி படிப்பில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு மாதிரி பள்ளிகளுக்கு 422 ஆசிரியர்கள் நியமனம்

 அரசு மாதிரி பள்ளிகளுக்கு, 422 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில், 38 மாவட்டங்களில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தகுதியான, 'டாப்பர்' மாணவர்களை இந்த பள்ளிகளுக்கு மாற்றி, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாதிரி பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.


இதையடுத்து, பல்வேறு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கணக்கிட்டு, துறை ரீதியாக அனுபவம் பெற்ற பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 422 பேர், மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.


இவர்கள் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றுப் பணி அடிப்படையில், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

7,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை

 தமிழக அரசு பள்ளிகளில், 7,000 இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவற்றில், 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி பயிற்சி


மாநிலம் முழுதும் உள்ள, 24,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, இடைநிலை ஆசிரியர்களே விளையாட வைக்கின்றனர்.


அங்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. இந்த மாணவர்களுக்கு, மாநில, தேசிய போட்டிகள் கிடையாது.


அதே நேரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகள் உண்டு.


இதற்காக மாணவர்களை, பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வழியே, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.


இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:


ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வாரம் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த பாட வேளைகளை உடற்கல்வி ஆசிரியர்களால் நடத்த முடிவதில்லை.


பெயரளவுக்கு தேர்வு


கிட்டத்தட்ட, 7,000 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கவில்லை. உடற்கல்விக்கு என்று தனியாக பாட புத்தகம் கிடையாது. பெயரளவுக்கு தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்குனர், செயலர் மற்றும் அமைச்சர், ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்கல்வி பாடங்களை உரிய முறையில் நடத்த அனுமதிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Mutual Transfer Counselling Instruction - Download here



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு.

 

10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு :




 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

 SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்


SMC Meeting SPD Proceedings - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Schemes Updation in TNSED Schools App

🔶 அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் கவனத்திற்கு.


📌மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் இதர விலையில்லா பொருட்களின் (Uniform, Bag, etc.) விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல்  Schemes Module- இல், உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


➡️ இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கக் காணொளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

👇Video Link 👇

https://youtu.be/rQCSUv1sHf0


குறிப்பு:

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி


- EMIS Team 


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

முதுகலை ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 

முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

PG Teachers - CRC Training Classes - Proceedings - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 


மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை!

CoSE - Tamil Handwriting Competition - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 16.06.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

விளக்கம்:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

பழமொழி :
A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.


பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே . ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு :

1. உலகின் மிகச்சிறிய நாடு எது?

விடை: வாடிகன் நகரம்



உலகின் மிகப்பெரிய நாடு எது?

விடை: ரஷ்யா


English words & meanings :

 Affection - Love , Kind feeling அன்பு, கனிவு.

 Beacon - Light house கலங்கரை விளக்கம்


ஆரோக்ய வாழ்வு :

கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


நீதிக்கதை

1. அச்சம் கொள்ளாதே!

துடிதுடித்தவாறு அழுதுகொண்டே வந்தான் சிறுவன். தாய் அவனைக் கவனித்தாள்.

அவன் விரலில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

"என்னடா கண்ணே நடந்தது" என்று அன்னை பரிவோடு கேட்டாள்.

''அம்மா, முள் செடியிலே சின்னப் பழம் ஒன்று இருந்தது. அதைப் பறிப்பதற்காக முள் செடியைப் பயந்து பயந்துதான் தொட்டேன். ஆனால் முள் விரலில் குத்திவிட்டதும் இரத்தம் வந்துவிட்டது" என்று அழுது கொண்டே கூறினான் சிறுவன்.


"குழந்தாய், முள் செடியைப் பயந்து பயந்து தொட்டதனால்தான் விரலில் முள் குத்தி விட்டது. சற்றும் அஞ்சாமல் துணிச்சலாக ஆனால் லாவகமாக முள் செடியைப் பிடித்திருந்தால் முள் குத்தியிருக்காது. இது மட்டுமல்ல குழந்தாய்! நல்ல செயல்கள் எதைச் செய்ய நேர்ந்தாலும் தயக்கமோ. அச்சமோ கொள்ளாதே! துணிச்சலாகச் செயலில் ஈடுபடு. நிச்சயம் அந்தச் செயலில் வெற்றியடைவாய்" என்று அவனுக்கு உபதேசம் செய்தாள்.


இன்றைய செய்திகள் - 16.06. 2023

*5 கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 

*கோவை -  கரூர் சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு ரூபாய் 400 கோடி ஒதுக்கியுள்ளது.

*நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. - அமைச்சர்                    மா. சுப்பிரமணியன் 
 
*தமிழ்நாட்டில் சராசரியை விட 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம். 

*ஆகஸ்ட் 31 முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது.

Today's Headlines

 * 5 Education department officials have been transferred by school education department .

 *The Union Government has allocated Rs 400 crore for the Coimbatore-Karur road widening project.

 *65,823 students who did not clear the NEET examination are being given mental health counseling.  - Minister Ma.  Subramanian
 
 *Tamil Nadu to see 2-4 degrees Celsius warmer than average - Meteorological Centre.

 *Asia Cup cricket tournament is going to start from August 31.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் - ஆசிரியர்கள் பணிகள்

 

4,5-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எண்ணும்  எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் :


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News