EE - Empty Format, FA ( a ) & Learning Outcomes ( Single file )

 

🗯️CLASS- 4 & 5 


📌EE-LESSON PLAN EMPTY FORMAT 


📌FA(A) Activity list


📌LEARNING OUTCOMES 


ATTACHED IN SINGLE FILE-107 PAGES-FOR ALL SUBJECTS - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 22.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

விளக்கம்:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.


பழமொழி :
A good face needs no paints

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்

பொது அறிவு :

1. பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் பெயர் என்ன?

விடை: சந்திரன்

2. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

விடை: செவ்வாய்


English words & meanings :

Beaming-shining brightly, ஒளிரும். courteous - pleasant,மரியாதையான


ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமலும் நோய் இருந்தால் கட்டுக்குள் இருக்கும். முறையான பயிற்சி அவசியம்.


நீதிக்கதை

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். அந்த ஓநாயை ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதனை இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ஏன், இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்? என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்தது ஆட்டுக்குட்டி. பார்த்த உடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? நாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும் என்று மெல்லிய குரலில் கேட்டது. பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிட்டால் யார் கலக்கியிருப்பார்கள்? உங்களை  எல்லாம் சும்மா விடக்கூடாது!" என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மௌனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.


இன்றைய செய்திகள் - 22.06. 2023

*டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு டெல்லியில் நாளை ஆலோசனை.

*கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தண்ணீரில் அமர்ந்தபடி யோகாசனம் செய்த ராணுவ வீரர்கள்.

*மோசடி அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்.

*கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் திரில் வெற்றி.

*கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிஸ் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Today's Headlines

* As DGP Shailendrababu retires on June 30, the selection of a new DGP will be held in Delhi tomorrow.

 *Soldiers did yoga, by sitting on water in Thiruvananthapuram, Kerala.

 *Introduction of the new feature in WhatsApp to avoid fraudulent calls.

 *Thriller win for Dindigul Dragons up to the last ball.

 * Kontaveit has announced her retirement from tennis with next month's Wimbledon Grand Slam in London.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum 4th , 5th Std - FA ( b ) & SA Test - New Schedule

 


எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து மாற்றி அமைக்கப்பட்ட வளரி மதிப்பீடு FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) அட்டவணை


மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அடிப்படை திறனாய்வு குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பு...மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கத்தின் புதிய செயல்முறைகள்

Scert dir proceedings & schedule - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Library Module - Auto Shelf Creation Option Enabled Now

LIBRARY MODULE-AUTO SHELF CREATION OPTION ENABLED NOW


வகுப்பாசிரியர்கள்  தங்களது INDIVIDUAL LOGIN மூலம் AUTO SHELF CREATION OPTION-யை பயன்படித்தி 1 நிமிடத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் BOOKS Assign செய்ய முடிகிறது


அதற்கான வழிமுறை👇👇👇

https://youtu.be/hRA7u8utVzo






Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

5-ஆம் வகுப்புக்கான Baseline survey தேதி மாற்றம்!

 

2023-24 ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு (21.06.23 முதல் 30.06.23 வரை) நடத்தப்பட இருந்த, அடிப்படைத் திறனாய்வுத் தேர்வு Baseline survey மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 21.06.23 க்குப் பதிலாக 26.06.23 அன்று முதல் 05.07.23 வரை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

     

 Baseline survey to be conducted from 26.06.23 to 05.07.23.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 21.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

விளக்கம்:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.


பழமொழி :

A friend in need is a friend indeed

ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்

பொது அறிவு :

1. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காமல் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியும்?

விடை: ஒட்டகம்

2. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 300

English words & meanings :

 Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.

Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம்:உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, நல்லசெயல் திறன் உண்டாகும். முறையான பயிற்சி அவசியம்.


ஜூன் 21 இன்று

உலக இசை நாள்


உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.


பன்னாட்டு யோகா நாள்

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். 


நீதிக்கதை

தள்ளாடி ஒரு முதியவர் தன்வீட்டு வாயில் வரை வருவதையும், வாயிலருகில் வந்ததும் ஒரு பேரிடி ஓசை கேட்டுக் கீழே வீழ்ந்ததையும் கண்டார். அவரை உள்ளே அழைத்துவர வாயிலுக்கு ஓடினார். பணி யாட்கள் உதவியுடன் உள்ளே கொணர்ந்து ஒரு அறையில் கிடத்தி அவருக்குச் சூடாகக் காபி கொடுத்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண் திறந்து பார்த்தார். அதற்குள் தமிழ் மகனும் அவரை அடையாளங் கண்டு கொண்டார். அவர் வேறு யாருமல்லர். தனக்கு இளமை யில் உதவிய பெரியவர்தான் என்பதை அறிந்து துணுக்குற்றார்! "ஐயா! தங்க ளுக்கு இந்த நிலை எவ்வாறு வந்தது?'' என வருந்தி வேண்டவே, அம்முதியவர் தமது கடைசி அறச்செயல் தமிழ் மகனுக்கு உதவியதுதான் என்றும், பின்னர், தீயோர் கூட்டத்தில் சிக்கி அறமற்ற செயல்களில் விரும்பி ஈடுபட்டு இந்நிலைக்குத் தள்ளப் பட்டதாகவும் கூறி முடித்தார். தமிழ் மகனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. "ஐயா! நீர் விரும்பிச் செய்த அறச் செயல் வீண் போகவில்லை என்றான்


இன்றைய செய்திகள் - 21.06. 2023

*உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.

*சென்னையில் 295% அதிக மழைப்பொழிவு தற்போது 162 மி.மீ மழைப் பதிவானதாக சென்னை வானிலை மையம் தகவல்.

*சென்னைக்கான புதிய போக்குவரத்து திட்டம் 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு.

* ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களை சந்தித்தார் -  இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

*உலகிலேயே முதன்முறையாக மாடல் வாரியாக கார்கள் வெளியிடும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்.

*ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியது.


Today's Headlines

* Prime Minister Modi emphasized that all countries of the world should respect international laws and the sovereignty of other countries.

 Chennai Meteorological Department informed that 295% more rainfall has been recorded in Chennai now with 162 mm of rain.

 *Decided to get feedback from 50,000 people on the new transport plan for Chennai.

 * Railway Minister Ashwini Vaishnav meets local people at the site of the train accident.

 *For the first time in the world, the Chinese government has published the carbon emissions of cars by model.  A program to create awareness among people about environmental pollution.

 *The first Test match of the Ashes series reached its final stage.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது கொண்டாடப்படும்? - அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு.

 தமிழகத்தில் வரும் 29 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

June 2023 - Then chittu Magazine ( 16 to 30th )

 

Then Chittu Magazine Collections

தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு 


June 2023 - Then chittu Magazine ( 16 to 30th ) - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 4th,5th - Term 1 - Syllabus

 


4,5- ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் முதல் பருவ பாடப்பொருள்

Ennum Ezhuthum - 4th,5th - Term 1 - Syllabus - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS Team Announcement

Kind Attention to All Type of Schools


 Head Masters and EMIS Work related Incharges at the school level are requested to process the *Students-Pending Request for Online EMIS TC  everyday without any delay. 


 This option can be found at your School EMIS Login ➡️ Students ➡️ Students - Pending Request


 Kindly ensure no Pending Requests to move Students to the Common Pool at your School Level. Thank You.


- Team EMIS


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர் மனசு அறிய பள்ளிகளில் பெட்டி

 புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்னை என்னவென விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற்றோர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்டோர் கொண்ட 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது. 

இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்படும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படும்.நடப்பு கல்வியாண்டு, கடந்த 12ம் தேதி துவங்கியது. ஒரு வாரம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே, இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார், அதற்கு காணப்பட்ட தீர்வு குறித்து, ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் விபரம் கேட்டறியப்படும் என்றார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

RL List & Government Holidays List - 2023

 2023ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களும்- ஒரே தொகுப்பில்...


RL List & Government Holidays List - 2023 | Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 20.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.06.23

திருக்குறள்  :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

விளக்கம்:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

பழமொழி :

A drawing man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்! காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல! 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்

பொது அறிவு :

1. இந்திய தேசிய சின்னத்தின் பொன்மொழி என்ன?

விடை: சத்யமேவ ஜெயதே

2. இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நிதி அமைச்சர் யார்?

விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


English words & meanings :

 withered - become dry and shriveled, காய்ந்துபோகுதல். pursue - chase,தொடர

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் :யோகா என்பது ஒரு வாழ்க்கை கலை. விஞ்ஞானம், மெஞ்ஞானத்தை பெருவதற்குரிய நடைமுறைப் பயிற்சி, மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு இது உதவும். முறையான பயிற்சி அவசியம்.

ஜூன் 20 இன்று

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

நீதிக்கதை

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து" எந்த பொம்மை வேண்டும் என்றான் . அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா ", என்றான். அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு அந்த சிப்பிகள் தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம் தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள் அவன் பெரியவன்


ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கபட வேண்டும் என்றார்.

இன்றைய செய்திகள் - 20.06. 2023

*தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்

* சென்னையில் பகலில் 40. கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் கடந்து ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதிவு செய்யப்படும்.

*தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீட்டிக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழை.

*கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு.

*பூண்டி - சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் கரைகளில் விரிசல். விரிசலை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை.

*TNPL தொடரில் மதுரை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி சொந்த மண்ணில் வெற்றி.

Today's Headlines

*12 IAS Officers transferred - ordered Tamilnadu Government.

 * In Chennai, if you drive over 40 Km during the day and 50 km at night, a case will be registered as fast driving.

 *Rains will extend in Tamil Nadu for the next 3 days.  Heavy rains in Chennai due to upper air cyclonic circulation.

 *Salt production is affected by summer rains in Vedaranyam.

 *Broken banks in Bundi - Sathyamurthy Reservoir.  People appealed that the crack should be repaired.

 * Dindigul defeated Madurai by 7 wickets in the TNPL series at the hometown
 Prepared by

Covai women ICT_போதிமரம்

ENNUM EZHUTHUM BASELINE REPORT DOWNLOAD 2023-24

 வகுப்பு 2,3 & 4 மாணவர்களின் சென்ற கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வினை அடிப்படையாகக் கொண்டு 2023-24 கல்வி ஆண்டிற்கான மாணவர் வாரியான EE (Baseline Assessment Report) அடிப்படை நிலை அறிக்கையை DOWNLOAD செய்வதற்கான வழிமுறை ....

👇👇👇


https://youtu.be/6NmPbBu5yLw




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News