பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு தேர்ச்சி சாத்தியமா?

எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநின்ற மாணவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில்,'எமிஸ்' இணையதள வருகை பதிவேட்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பில் நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை நீக்கம் செய்யக்கூடாது.


அனைத்து பணிகளையும் முடித்து தேர்ச்சி ஒப்புதல் வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத குழந்தைகளையும் தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைப்பது எந்த வகையில் சாத்தியம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

அரசாணையின் படிசெயல்படணும்!



இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
கல்வித்துறையின் அரசாணை, 2017ன் படி, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால், ஆண்டு இறுதித்தேர்வாவது எழுதி இருந்தால் அல்லது ஆண்டு இறுதியில் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்தால் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவை கணக்கில் கொள்ளாமலே தேர்ச்சி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு மாணவர் தொடர்ந்து, 7 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் வகுப்பு ஆசிரியர் பெற்றோரை விசாரிக்க வேண்டும். அடுத்த 7 நாட்கள் வரைவில்லை எனில் தலைமையாசிரியர் தலையிட வேண்டும். அடுத்த, 7 நாட்கள் வரவில்லை எனில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் விசாரித்து குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்ந்து, 30 நாட்கள் வராத மாணவர்களை, இடைநின்ற மாணவர் பட்டியல் கொண்டு சேர்த்து நீக்கம் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்கு தொடர்ந்து தேர்ச்சி அளித்து அவர் இடைநின்ற மாணவர் என்ற கணக்கிற்கே கொண்டு வரப்படாமல் இருப்பது சரியல்ல.

ஊரடங்கில் 'ஆல்பாஸ்' நடைமுறை சரியாக இருந்தது. தற்போது பள்ளிகள் முழுமையாக இயங்குகின்றன. இந்நேரத்தில், பள்ளிக்கே வராத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை 'ஆல்பாஸ்' மூலம் அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்வது பல நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. மீண்டும், 2017 அரசாணையின் படி பழைய நடைமுறையினை கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு,அவர்கள் கூறினர்.

ஒரு மாணவர் யாரென்றே தெரியாமல், தொடர்ந்து பெயர் மட்டும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களை 'எமிஸ்' தளத்தில் இடைநிற்றல் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான், ஆசிரியர் பயிற்றுநர்கள், அதுபோன்ற மாணவர்களை மீண்டும், பள்ளியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொள்வர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது| Capacity Building Training





TNTP இணையதளத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் 4,5,6,7 மற்றும் 8 தற்போது மீண்டும்  செயல்பாட்டில் உள்ளது. பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள்  நிறைவு செய்யலாம்.

https://tntp.tnschools.gov.in/login

 


அரசு பள்ளி மாணவருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு :

அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி அளிக்கப்படும்

இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த, அனைத்து வகையான ஆசிரியர்கள், முதலில்அடையாளம் காணப்படுவர். அவர்களுக்கு 'ஆன்லைனில்' அரை மணி நேர தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, வரும் 30, 31ம் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையான, 25 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

SSLC Examination May 2022 - Valuation Camp Schedule

10th Public Examination May 2022 - Paper Valuation Camp Schedule 


EMIS Students TC Generation and Students promotion reg.

Kind Attention : 

EMIS Students TC Generation and Students promotion reg.

மாநில EMIS மையத்தில் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வரும் வரை youtube வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். தகவல் தெரிவிக்கப்படும்.

- State EMIS Team

 

Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 

(Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator...

English_20_21

Dear all, 

CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/

>>> Login Website Link...

ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

02.06.2022 முதல் 31.05.2023 வரை ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 


2022-2023 - ஆம் ஆண்டிற்கான , அனைத்துவகை ஆசிரியர் பணியிடங்களுக்கான. உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு தயார் செய்ய ஏதுவாக , 3105.2022 - ல் உள்ளவாறான காலிப்பணியிடங்கள் மற்றும் 2022-2023 - ஆம் கல்வியாண்டில் 02.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ளஅனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 ல் ( EXCEL Format ) தயார் செய்து இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் ( jdpcc2018@gmail.com ) முகவரிக்கு 18.05,2022 க்குள் அனுப்பிவைக்கும்படியும் , அதன் அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் இவ்வாணையரகத்திற்கு 20.05.2022 - க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் , இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) கட்டுப்பாட்டின் கீழ்வரும் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் எண்ணிக்கை விவரத்தினை படிவம் -2 ல் பூர்த்தி செய்து நேரடியாக இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) மின்னஞ்சல் ( dsew3sec @ gmailcom ) முகவரிக்கு அனுப்பிவைக்கும்படியும் , அவ்வாறே அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் 20.05.2022 - க்குள் அனைத்து அனுப்பிவைக்கும்படியும் முதன்மைக் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

 


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம். முதன்முதலில் - தமிழில்...

IMG_20220520_153655

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம். முதன்முதலில் - தமிழில்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்: தேர்வுத்துறை




தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.

மேலும், 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

 இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.