குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு..!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வகையில் வண்ண 'பேனர்கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறை இறுதியில், பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

அங்கன்வாடி குழந்தைகளில் ஐந்து வயதானவர்களை கண்டறிந்து அவர்களையும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று, அரசுப் பள்ளிகளின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்து பெற்றோரிடம் எடுத்துக் கூற வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம். நூறு சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 'பாஸ்': பள்ளிக்கல்வித்துறை முடிவு

 ள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கோவிட் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது.

10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம்: தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

தமிழகத்தில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 27ம் தேதியும் அரசு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 2022- 23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில்‌ 5+ வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

இடைநின்ற மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்ப்பது தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ உதவி ஆசிரியரின்‌ தலையாயக் கடமையாகும்‌.

பள்ளியின்‌ சாதனைகள்‌, வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ வாயிலாக பெற்றோர்களிடம்‌ எடுத்து கூறலாம்‌.

பள்ளிகளில்‌ உள்ள திறன்‌ வகுப்பறைகளின்‌ (Smart Class) செயல்பாடுகள்‌ பற்றியும்‌ விரைவுத்‌ துலங்கல்‌ குறியீடு (QR Code) வழியாக பாடக்‌ கருத்துகள்‌ எளிமையாக்கப்பட்டு கற்றல்‌ செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.

தனியார்‌ பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிப் பாட கற்பித்தல்‌ பற்றியும்‌ வாட்ஸப் வழியாகவும் ஆசிரியர்‌ மாணவர்‌ பாடப் பரிமாற்றங்கள்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாகவும்‌ தெளிவாகவும்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌.

மாணவர்கள்‌ சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில்‌ ஆடியோ / வீடியோ பதிவுகள்‌ இடம்‌ பெறச்‌ செய்யலாம்‌.

பள்ளியில்‌ சேரும்‌ குழந்தைகளுக்கு ஊக்கப்‌ பரிசு வழங்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை மேலும்‌ அதிகரிக்கலாம்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு: 

பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளை பிரித்துக்‌ கொண்டு, ஒவ்வாரு குடியிருப்பில்‌ உள்ள பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ ஆசிரியர்களோடு இணைந்து அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ பள்ளியின்‌ சிறப்புகளை எடுத்துக்கூறி மாணவர்‌ சேர்க்கைக்கு உதவுதல்‌

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தங்களது குழந்தைகளின்‌ சிறப்பான செயல்பாடுகளை அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ நேரடியாக உரையாடச் செய்து அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல்‌.

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களுக்கு மேலாண்மைக் குழுவில்‌ உள்ள உறுப்பினர்கள்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களை வரவழைத்து பள்ளி தொடர்பான புகைப்படங்கள்‌ மற்றும்‌ காணொளிகளை திரையிட்டு அரசு வழங்கும்‌ நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்துதல்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர்‌, ஆசிரிர்கள்‌, பெற்றோர்கள்‌ உள்ளாட்சி பிரதிநிதிகள்‌, இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்‌ ஆகியோர்‌ ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு பள்ளியில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்‌ பற்றி கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள்‌ எடுக்கலாம்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ பங்கு

ஆசிரியர்கள்‌ எவ்வளவு தான்‌ பள்ளி பற்றிய சிறப்புகளைப் பொதுவெளியில்‌ எடுத்துக்‌ கூறினாலும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தாங்கள்‌ வசிக்கும்‌ இடத்தில்‌ உள்ள சக பெற்றோர்களிடத்தில்‌ பள்ளி பற்றி கலந்துரையாடும்‌போது அவர்களால்‌ அதிக தாக்கத்தினை ஏற்படுத்திட முடியும்‌.


பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று அரசுப்‌ பள்ளியின்‌ சாதனைகள்‌, கட்டமைப்பு வசதிகள்‌, நலத்திட்டங்கள்‌ கல்வி உதவி தொகைகள்‌ பற்றிப் பெற்றோரிடம்‌ நோடியாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள்‌ எடுத்துச் செல்லலாம்‌ மற்றும்‌ துண்டுப் பிரசுரங்கள்‌ வழங்கலாம்‌.

நம்‌ பள்ளி நம்‌ பெருமை வலைதள செயலியை பொது மக்களிடம்‌ எடுத்துக் கூறி அதன்‌ தனித்துவம்‌ சார்ந்து விளக்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்கலாம்‌.

பள்ளியில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ சார்பில்‌ பரிசுகள்‌ வழங்கி ஊக்கப்படுத்தலாம்‌.

இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ பங்கு

தன்னார்வலர்கள்‌ தங்களது குடியிருப்பில்‌ உள்ள பள்ளி வயதுக்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ பள்ளியில்‌ சேர்ந்துள்ள விவரத்தை உறுதிப்படுத்துதல்‌

பள்ளி செல்லாக்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ இருப்பின்‌ அதிக கவனம்‌ செலுத்திட வேண்டும்‌.

தன்னார்வலர்கள்‌ வசித்து வரும்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ புதிதாக பள்ளி வயது குழந்தைகள்‌ உள்ள குடும்பம்‌ குடிபெயர்ந்து வந்திருந்தால்‌ தலைமை ஆசிரியருக்கு தகவல்‌ தெரிவித்துப் பள்ளியில்‌ சேர்த்திட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ வீடு வீடாகச் சென்று கண்டறிந்த 5+ குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உதவிட வேண்டும்‌.

மேற்கண்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றி 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்''‌.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 வயது ஆன மாணவர்களின் சேர்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்ந்த 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும். அத்துடன், அவர்கள் சிறப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விளையாட்டுத் துறையில் சிலம்பம் போட்டிக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் வழங்கியுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


TNSED (TN EMIS) SCHOOLS ATTENDANCE APP NEW UPDATE AVAILABLE | 11.06.2022

 

TNSED SCHOOLS ATTENDANCE APP*

தற்போது PLAYSTORE-ல் download செய்து கொள்ளலாம்.

▪️Now  TNSED  mobile app available in play store.👇👇👇





தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் POWER POINT 1,2,3 / எண்ணும் எழுத்தும் APP DEMO


எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் POWER POINT 1



எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் POWER POINT 2 ( MODEL CLASS ) 


எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் POWER POINT 3 



எண்ணும் எழுத்தும் APP DEMO - Training PPT 


SBI Upschool: கதைகள் மூலம் கணிதப்பாடம் - எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் upschool என்ற இணைய வழி இலவச கல்வித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம் கணிதம் மற்றும் மொழி பாடங்களுக்கான தரமான முறையில் கற்பிக்கப்படும் . பெற்றோர் மற்றும் மாணவர்கள் learn.khanacademy.org/upschool என்ற  இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள், பாடத் திட்ட அணுகலுக்கான வாட்ஸ்அப் இணைப்பை பெறுவார்கள்.

1 முதல் 10 வகுப்புக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என  எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்தார்.  வசதி வாய்ப்பற்ற, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கணிதறிவு, மொழியறிவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கதைகள் மூலமாகவும், மகிழ்ச்சியான விளையாட்டு அனுபவங்கள் மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு கல்வியுடன் கூடிய நடனம், யோகா போன்ற பிற செயல்பாடுகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் அதீநவீன 'பிஎம் ஸ்ரீ பள்ளிகள்' தொடங்கப்படும் : கல்வி அமைச்சர்

எஸ்பிஐ நிதி மேலாண்மை லிமிடெட் நிர்வாக அதிகாரி வினய் எம். டான்சே இதுகுறித்து கூறுகையில், " இது மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். கான் அகாடெமி (khan Academy) நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.



ஜூலை 1 முதல் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

ஜூலை 1-ம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் படிபுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " இணையவழி பதிவு எண் 1.7.2022 அன்று தொடங்கப்படவுள்ள அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் 1.7.2022 முதல் பெறப்படுகிறது. இது முதலாம் ஆண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது தொடங்கும். அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான மாணவர் சேர்க்கை தொர்பான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.

பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கொஞ்சம் குறைந்துதான் இருந்தது, தற்போது ஓரளவு பரவாயில்லாமல் இருக்கிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அந்த 10 புதிய பாடத்திட்டங்களும் குறிப்பாக வேலைவாய்ப்பை அதிகரிக்கிற வகையில், மாணவர்கள் விரும்பும் வகையில் அவை அமையவிருக்கின்றன.

நீட் தேர்வு முடிவுக்குப் பின்னர் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிப்பது மாணவர்களுக்கு கடினம். எனவே ஆன்லைனில் அனைவரும் விண்ணப்பிக்க அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அதற்கான வசதிகளை செய்துதர பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர 100 இடங்களில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே முறைகேடுகள் நடக்காத வகையில், மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் .