School Morning Prayer Activities - 14.10.2022

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.10.2022



திருக்குறள் :

"பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

பொருள்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்."

பழமொழி

"Nothing is impossible to a willing mind. 

 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு." 

இரண்டொழுக்க பண்புகள் :



1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 



2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.



பொன்மொழி :

தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்

பொது அறிவு :

1. பலூனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜேக்கஸ் ஜோசப் மாண்ட்கோல்பையர்.



2.தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது? 

தஞ்சாவூர்.

ஆரோக்ய வாழ்வு :

"கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. எனவே பச்சையாக கேரட்டை சாப்பிடுவது, முகப்பருவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சருமத்தை சுத்தமாகவும், செல் உருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்." 

English words & meanings :

Ento-mo-logy - study of insects. Noun. My friend is much interested in entomology as he is a farmer. பூச்சிகள் குறித்த ஆய்வு. பெயர்ச் சொல் 

NMMS Q 75 :

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 3, 4, 12, 48,_________. விடை: 576. விளக்கம்: 3x4 = 12; 4X12 = 48; 12x 48 = 576

நீதிக்கதை:


ஒட்டகத்தைக் கொன்ற காகம்

ஒரு மிகச் சிறிய காட்டில் மதோற்கடன் என்ற பெயரை உடைய சிங்கராஜா தனக்கு மந்திரிகளாக நரி, புலி, காகம் ஆகிய மூன்றையும் வைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தார். 

ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழி தவறி ஓர் ஒட்டகம் வந்தது. காககம் ஒட்டகத்தைப் பார்த்து அதிகாரமாக யார் நீ என்று கேட்டது. ஒட்டகம் பயந்து போய் வழி தவறி இந்த காட்டுக்குள் வந்து விட்டேன் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று காகத்திடம் கேட்டது. 

உடனே காகம் ஒட்டகத்தை சிங்கராஜாவிடம் அழைத்துச் சென்றது. சிங்கராஜா! ஒட்டகத்திடம் இனி நீ இந்த காட்டில் வசிக்கலாம் என்றும், உன்னை என் மந்திரிகளுள் ஒருவராக நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றும், இனிமேல் உன்னுடைய பெயர் மந்தானகன் என்றும் பெயர் வைத்தது. 

ஒரு நாள் சிங்கராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. இன்று நீங்கள் நால்வரும் சென்று வேட்டையாடி எனக்கு உணவு கொண்டு வாருங்கள். நான் உண்ட பின்னர் மீதமுள்ள உணவினை நீங்கள் உண்ணுங்கள் என்று கட்டளையிட்டது. நான்கும் ராஜாவுக்கு உணவு தேடி காட்டுக்குள் அலையோ அலை என்று அலைந்தன. ஆனால் ஓர் இரையும் அகப்படவில்லை. 

உடனே, காகம் ஒரு திட்டம் போட்டது. இந்த ஒட்டகம் சைவம். நாம் ஏன் இந்த ஒட்டகத்தையே இன்றைய இரையாக வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசித்தது. பின் ஒட்டகத்தை மட்டும் ஒரு வேலை கொடுத்து தனியே அனுப்பி விட்டு காகம், நரியிடமும் புலியிடமும் தன் திட்டத்தைக் கூறியது. ஒட்டகம் திரும்பி வருவதற்குள் காகமும் நரியும் புலியும் சிங்கராஜாவிடம் சென்றன. ராஜா! இன்று இந்தக் காட்டுக்குள் எங்கு தேடியும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்றது காகம். 

மேலும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு யாராவது நெய் தேடுவார்களா? என்றது காகம். அந்த வெண்ணெய் வேறு யாருமில்லை நமது புதிய மந்திரியான ஒட்டகம்தான் அது! என்றது காகம். ஆ! அது எப்படி முடியும்? அது என்னுடைய அடைக்கலப் பொருள் என்றது சிங்கம். 

அதற்கு காகம், ராஜா! ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்ற அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற அந்த நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம். ஆதலால், இது தவறில்லை என்று அதே சாஸ்திரங்கள்தான் சொல்லியுள்ளன! என்றது காகம். 

சிங்கராஜா ஒட்டகத்தைக் கொல்ல சம்மதிக்கவில்லை. ராஜா அவர்களே! அந்த ஒட்டகமே தங்களிடம் வந்து, என்னைக் கொல்லுங்கள் என்று கூறினால், தாங்கள் அதனைக் கொல்லச் சம்மதிப்பீர்கள் தானே! என்றது காகம். 

ஆமாம் என்றார் சிங்கராஜா. அப்போது, இவர்களைத் தேடி அந்த ஒட்டகம் வந்தது. ஒட்டகம் அருகில் வந்ததும் காகம் தந்திரமாக, ராஜா! இன்று உங்களுக்கு எங்குமே இரை கிடைக்கவில்லை. தாங்கள் இன்று பசியுடன் இருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஆதலால், தாங்கள் என்னைக் கொன்று தங்களின் பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று காகம் கூற சொன்னதும் ஒட்டகமும் அதை கூறி தழுதழுத்தது. 

நீ எனக்கு ஒருவாய் உணவாக அல்லவா அமைந்து விடுவாய் என்றது சிங்கராஜா. உடனே, நரி, ராஜா அப்படியானால் தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்று போலிப் பணிவு காட்டியது. மிகவும் சிறியவன். என் பசிக்கு நீ பயனற்றவன் என்று அதையும் மறுத்தது சிங்கராஜா. உடனே புலி, அப்படியானால் ராஜா, தாங்கள் என்னைக் கொல்லலாமே! என்று நடித்தது. நீ பருத்தவனாக இல்லை. ஆதலால், நீயும் என் பசிக்கு ஏற்றவனில்லை என்றது சிங்கராஜா. 

மூவரும் ராஜாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைத் தர முன் வந்ததில் மனம் நெகிழ்ந்து போன ஒட்டகம், ராஜா! இந்தக் காட்டில் நான்தான் உயரமானவன். பருத்தவன். நான் உங்களின் பசிக்கு ஏற்றவன். தாங்கள் தான் இந்தக் காட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். தங்களின் பசியைப் போக்கும் நல்ல காரியத்தை, நான் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன். ஆதலால், தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்றது. உடனே நரியும் புலியும் ஒட்டகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொன்றன. 



நீதி :

தீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் அதனோடு சண்டையிட்டு மடிவதே சிறந்தது.

இன்றைய செய்திகள் - 14.10.22

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு.

கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித் தகுதியில் சமரசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

எம்பிபிஎஸ் வகுப்புகளை நவம்பர் 15-ம் தேதி தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

பருவமழையால் பாதிக்கப்படாத வகையில், 11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மெய்டன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம் - ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ.6,600 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய அதிகாரி எச்சரித்துள்ளார்.

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.

ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு - ஒப்பந்தம் கையெழுத்து.

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Today's news

Crackers restriction on Diwali: Chennai Police important announcement.

 No compromise on academic qualification in appointment of college professors: High Court orders.

 National Medical Commission orders to start MBBS classes on November 15.

 Food Minister Chakrapani has said that the warehouses are ready to store 11 lakh tonnes of paddy so that it is not affected by monsoon rains.

 Maiden Pharma Stops Cough Medicine Production - Haryana Health Minister Notification

 The Union Cabinet yesterday approved the allocation of Rs 6,600 crore for development projects in the North Eastern states.

 A Russian official has warned that if Ukraine joins NATO, World War III is certain to break out.

 Women's Asia Cup Cricket: Team India enters the final for the 8th time.

 T20 World Cup Cricket Matches Live Broadcast at INOX Cinemas - Signing of Agreement.

 Tamil Nadu team registered their first victory in the Syed Mushtaq Ali Cup cricket tournament.



Prepared by

Covaiwomenict_ போதிமரம்

  Click here to Join WhatsApp group for Daily kalvi news

EE Training Feedback and Quiz - Direct Link

 Dear Teachers,

Steps to fill Training Feedback and Quiz

1. Click on this link - https://exams.tnschools.gov.in/exam.

2. Log in using your EMIS ID and password

3. Click on “Start Quiz” 

4. The questions are in the following order: 

Tamil - Questions 1-10 

English - Questions 11-20

Maths - Questions 21-30 

5. Click “Complete Quiz” once you answer the questions

Screenshots and procedure given in the above PDF.


  Click here to Join WhatsApp group for Daily kalvi news

Ennum Ezhuthum - Term 2 - October 3rd Week Lesson Plan

மீதமுள்ள RL நாட்கள்! -2022

 24/10/2022 தீபாவளி நோன்பு


02.11.2022-புதன் - ஆல் சோல்ஸ்டே
08.11.2022 - செவ்வாய் – குருநானக் ஜெயந்தி  


06.12.2022-செவ்வாய் - கார்த்திகை தீபம்

2023ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

 

2️⃣0️⃣2️⃣3️⃣

*ஜனவரி- 1 (ஞாயிறு) -நியூ இயர்* 

*ஜனவரி -15 ( ஞாயிறு ) பொங்கல்*

 *ஜனவரி-16 (திங்கள் ) திருவள்ளுவர் தினம்*

 *ஜனவரி -16 (செவ்வாய் ) உழவர் திருநாள்*


 *ஜனவரி -26 (வியாழன் ) குடியரசு தினம்.* *ஹி.தவ்லத் உசேன் பிறந்த தினம்* 

*பிப்ரவரி -5 (ஞாயிறு)*
*தைப்பூசம்*


*மார்ச்-23 (புதன்)*
*தெலுங்கு வருட பிறப்பு*

*ஏப்ரல் -1 (சனி ) நிதி ஆண்டு முடிவு*

*ஏப்ரல்-4 (செவ்வாய் ) மகாவீர் ஜெயந்தி*

*ஏப்ரல் -7 (வெள்ளி) புனித வெள்ளி*

*ஏப்ரல்-14 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்*

*ஏப்ரல்-22 (சனி) ரம்ஜான்*


*மே- 1 (திங்கள் ) மே தினம்*


*ஜூன்-29 (வியாழன்) பக்ரீத்*


*ஜூலை -29 (சனி ) முஹரம்*


*ஆகஸ்ட் -15 ( செவ்வாய் ) சுதந்திர தினம்*

*செப்டம்பர்- 6 ( புதன் ) கிருஷ்ண ஜெயந்தி.*

*செப்டம்பர் -17 (ஞாயிறு ) விநாயகர் சதுர்த்தி.*


*செப்டம்பர்-28 ( வியாழன்) மிலாதுன் நபி*


 *அக்டோபர் -2 (திங்கள் )காந்தி ஜெயந்தி*

 *அக்டோபர்- 23 (திங்கள் ) ஆயூத பூஜை*

*அக்டோபர்- 24 ( செவ்வாய் ) விஜயதசமி*

*நவம்பர்-12 (ஞாயிறு ) தீபாவளி.*


*டிசம்பர்- 25 (திங்கள்) கிறிஸ்துமஸ்.*

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022

 

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

பழமொழி :

Quality is more important than quantity.

அளவைவிட தரமே அதிமுக்கியம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா

பொது அறிவு :

1. இந்தியாவில் விமான தொழிற்சாலை எங்கு உள்ளது? 

பெங்களூரில் உள்ளது.

 2.இந்தியாவில் தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 

உத்திரபிரதேசம்.

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், ஒருவேளை கேரட் சாப்பிடுவது உங்கள் தினசரி ஊட்டச்சத்து மதிப்பில் 184% வழங்குகிறது. U.S. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், பெரியவர்கள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 900 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ பரிந்துரைக்கிறது. ஒரு முழு பச்சைக் கேரட்டில் FDA பரிந்துரையைப் பூர்த்தி செய்ய போதுமான வைட்டமின் A உள்ளது.




NMMS Q 74 :

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5, 4, 9, 13, 22, _________ 

விடை : 35. விளக்கம்: 5+4 = 9; 4+9 = 13; 9+ 13 = 22; 13 + 22= 35;

நீதிக்கதை

சொந்த இடம்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.

இன்றைய செய்திகள்

13.10.22

* மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைகிறது ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ - தமிழக அரசு அறிவிக்கை.

* தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* மாதவரத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்காக சுரங்க கட்டுமானப் பணிகள் தீவிரம்: 52 அடி ஆழம், 492 அடி நீளத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது.

* ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு.

* பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

* சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.

* தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

* தேசிய விளையாட்டில் டிரையத்லான் அணிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.

* செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வந்த தேசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.


Today's Headlines

* The Madras High Court has ordered the Tamil Nadu government to respond in a case seeking to provide free laptops to differently-abled students.

*  'Kadavur Devangu Sanctuary' to be India's first Devangu Sanctuary - Tamil Nadu Govt.

*  MBBS graduates can apply for 1,021 Assistant Doctor vacancies in government hospitals in Tamil Nadu, Medical Staff Selection Board has announced.

 * The intensity of tunnel construction work for metro rail operation at Madhavaram: 52 feet deep, 492 feet long railway station.

 * Diwali Bonus for Railway Employees: Central Government Notification

*  A spaceship sent by NASA has successfully deflected an asteroid that was coming to hit the Earth and created a historic record.

 * India overturned China's resolution at the International Atomic Energy Agency - Union External Affairs Minister Jaishankar Information.

*  A Chennai school girl won 3 bronze medals in the national gymnastics competition.

*  Tamil Nadu won gold in the triathlon team category in the national games.

* The national sports competition which started on September 29 in Gujarat ended yesterday.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to Join WhatsApp group for Daily kalvi news

1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 15.10.2022 CRC பயிற்சி கிடையாது.

 



CRC TRAINING - 15.10.2022


ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (15.10.2022) நடைபெற உள்ளது.


 🪴 CRC பயிற்சிக்கு,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6-12 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.


🪴 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 15.10.2022 CRC பயிற்சி கிடையாது.

School Morning Prayer Activities - 12.10.2022

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.10.2022



திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம் : வான் சிறப்பு. 

குறள் 12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொருள் :
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

பழமொழி :

Never cast the oar till you are out

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ? 

நெல் . 

2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ? 

1953 ஆம் ஆண்டு.

English words & meanings :

Catenation - bonding of atoms of the same elements to form a chain. Carbon atoms tend to form catenation. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வேர் காய்கறியை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.



நீதிக்கதை

குகையுடன் பேசிய நரி

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டுத் திரும்பி மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து உண்டுவிடலாம் என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தப்போது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 

நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 

சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 

நீதி :
எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.

இன்றைய செய்திகள் - 12.10.22

* அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 * 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது  என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை பார்க்க இருக்கின்றனர்.

* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி.

Today's Headlines

*  Even if there is heavy rain, the power supply will not be affected: Minister Senthilbalaji assures.

*  17 instructions have been issued to the ration shops on behalf of the Cooperative Department to avoid damage to the products during the Northeast Monsoon season.

  * After 5 years, Tamil Nadu has received permission to set up 25 primary health centers and 25 urban health centers, Minister M. Subramanian said.

 * Higher Education Minister Ponmudi has said that the number of students enrolling in engineering courses has increased this year.

*  Chennai Meteorological Department has informed that 16 districts of Tamil Nadu are likely to receive heavy rain today.

* National Vocational Training Mela was held yesterday at 280 locations across the country under Prime Minister Narendra Modi's Skill India program.

*  The Jharkhand government has provided a TV and inverter to the family of India captain Astam Oran in the FIFA U-17 World Cup football tournament.  With this, the family and the villagers are witnessing their daughter playing on the field for the first time.

 * NASA has released a photo of the eye-catching bubble-covered nebula 7,100 light-years away from Earth.

* UN  In an emergency session of the General Assembly, Ukraine has registered its strong condemnation, criticizing Russia as a terrorist state.

* Tamil Nadu is ranked 5th in the medal list in the national sports competition.

 * The 16-team Junior Women's World Cup started in India yesterday.

* Women's Asia Cup Cricket: The Thailand team made surprising progress to the semi-finals for the first time.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்

 


தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள் 

தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - Download here

பள்ளிகளில் இம்மாதம் அக்டோபர் 13 , 2022 அன்று " தி ரெட் பலூன் " சிறார் திரைப்படம் திரையிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை

 


பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் சார்ந்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு . சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கை தொடர்பாக , இம்மாதம் அக்டோபர் 13 , 2022 அன்று " தி ரெட் பலூன் " திரைப்படம் திரையிடப்படும். இப்படம் பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாகும்  படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.


SPD - Movie Screening Instructions.pdf - Download here...


13.10.22 அன்று அனைத்து நடுநிலை,உயர்நிலை,மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம்


 THE RED BALLOON

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


https://www.mediafire.com/file/ydc777p2vruzvry/THE_RED_BALLOON_HD_.mp4/file