4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 2.எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! -வினா - விடைகள்

 பக்கம் - 11

வாங்க பேசலாம் 

"பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?

விடை : 

 நான் கூறும் விடை :

 பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன். 

 சிந்திக்கலாமா? 

 நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?

 விடை : சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

பக்கம் - 12

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. ‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………… 

அ) பாய் + தோடும் ஆ) பாய்ந்து + ஓடும் இ) பயந்து + ஓடும் ஈ) பாய் + ஓடும்

 விடை :  ஆ) பாய்ந்து + ஓடும்

 2. காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது………………. 

அ) காலைப்பொழுது ஆ) காலைபொழுது இ) காலபொழுது ஈ) காலப்பொழுது

விடை : அ) காலைப்பொழுது  

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?…………………….. 

அ) மலை ஆ) காடு இ) நெகிழி ஈ) நிலம் 

விடை :  இ) நெகிழி 

4. குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்…………………… 

அ) வியந்து ஆ) விரைந்து இ) துணிந்து ஈ) வளைந்து 

விடை :  ஈ) வளைந்து 

5. தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………………………………….. 

அ) தன்னுடைய ஆ) தன்உடைய இ) தன்னுடைய ஈ) தன்உடையை 

விடை :  அ) தன்னுடைய 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 விடை :  நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன. உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன. மண் வளம் அழிக்கப்படுகிறது. 

2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன? 

விடை : நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

 3. ‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?

விடை : இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார். அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான். 

 சொந்த நடையில் கூறுக

 உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்? 

விடை :  எனக்குப் பிடித்த காய்கள்

  •  கத்தரிக்காய், 
  • வெண்டைக்காய், 
  • அவரைக்காய், 
  • பாகற்காய், 
  • முள்ளங்கி, 
  • காரட், 
  • பீன்ஸ், 
  • உருளைக்கிழங்கு,
  •  பீட்ரூட், 
  • பூசணிக்காய்,
  •  எல்லா வகையான கீரைகள்,

 பழங்கள் 

  • அன்னாசிப்பழம், 
  • கொய்யாப்பழம், 
  • மாம்பழம், 
  • திராட்சைப்பழம்,
  •  பப்பாளிப்பழம் 

ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை. இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது. 

 பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். 

நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும். 

பக்கம் - 13

அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக 

 மாசு – ……………………….. 

வேளாண்மை – …………………… 

விடை : மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு

 வேளாண்மை – உழவு

 சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக

நிறுத்தக் குறியிடுக 

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள். 

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

 விடை :  ‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. 

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

விடை :  ஆகா, பயிர் அழகாக உள்ளதே! 

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது? 

 புதிய சொற்களை உருவாக்கலாமா?


பக்கம் - 14

படத்தை பார்த்து விடுகதைகள் உருவாக்குக 


 

அகர வரிசைப்படுத்துக:



கூடுதல் வினாக்கள் :
வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. இளமாறன் மாடியிலிருந்து பார்த்தக் காட்சிகள் யாவை? 

விடை : மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது. தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு பசு, “ம்மா…” எனக் குரலெழுப்பியது.

2. இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்? 

விடை :  இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வயலுக்குச் சென்றான். Question 3. நெல்மணிகள் எவ்வாறு இருந்தன? Answer: நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன. 

 4. இளமாறன் எதைப் பார்த்து வியப்படைந்தான்? 

விடை : வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து, தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்தன. அதைப் பார்த்து இளமாறன் வியப்படைந்தான். 

 5. நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?

 விடை :  வயலில் வேலை செய்ததால்தான் தன் உடல் வலிமையாக உள்ளது என்றும், வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார். 

6. வயலைப் பற்றி இளமாறனின் தாத்தா கூறியது யாது?

விடை : வயல்தான் தமக்குச் சொத்து. இங்கு விளைகின்ற பயிர்கள் மக்களை வாழவைக்கின்றன. உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் தம்மைப் போன்ற உழவர்களின் உழைப்பின் மூலமாகவே கிடைப்பதாக தாத்தா கூறினார்.

 7. உழவர்கள் விளைவிப்பவை யாவை?

 விடை :  நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய்வித்துகள், காய்கள், பழங்கள். 

 8. ஈடு இணை இல்லாதது என்று தாத்தா குறிப்பிட்டது என்ன? 

விடை : உழவர்களின் தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என தாத்தா குறிப்பிட்டார்.

சிறுவினா: 
 1. தாத்தா இயற்கை உரம், செயற்கை உரம் பற்றிக் கூறியனவற்றை எழுதுக.

விடை : 

இயற்கை உரம்:

ஆடு மாடுகளின் சாணத்தை ஒன்று சேர்த்து எருவாக்கி, நிலத்தில் போடுதல். தாவரங்களின் தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்தல். இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாம் நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிர்ப்புச் சக்தியோடும் வாழலாம்.

 செயற்கை உரம்: செயற்கை உரங்களைத் தெளிப்பதனால் தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழு போன்றவை அழிந்து விடுகிறது. அதனால் மண் மாசடைகிறது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளிப்பதனால் தண்ணீர் மாசடைகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடிநீர் மாசடைகிறது. இவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து புதிய புதிய நோய்கள் வருகின்றன.


EE - Second Term - Learning Outcomes ( pdf)

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்தில் குழந்தைகள் பெறவேண்டிய கற்றல் விளைவுகளின் தொகுப்பு - pdf


EE - Second Term - Learning Outcomes - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Diksha App -Direct link Available!!!

 

Diksha App -Direct link Available!!!





TNEMIS CLUB REGISTER (PDF)

ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

 ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பணிமாறுதல் - ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு நாள்:17-10-2022.




Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!!!

 அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!!!






எண்ணும் எழுத்தும் KIT - CATALOGUE

 

ஒவ்வொரு பள்ளியிலும் எண்ணும் எழுத்தும் KIT - CATALOGUE பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தரப்பட்டுள்ளது.... பெட்டியில் உள்ள பொருட்களின் விவரம் பள்ளிக் கல்வித் துறைகளின் சார்பாக படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது....

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இனி வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

 தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இனி வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று [ PSTM ] Online வாயிலாக மட்டுமே இனி வழங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆணையரின் செயல்முறைகள்...




 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப் பட்ட ஆணை

 


பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை


BEO Office RC Post Proceeding - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி

 


TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் புதிய செயல்முறைகள்

 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...


leadership training to HeadMasters Proceedings - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ENNUM EZHUTHUM NEW LOGOS | எண்ணும் எழுத்தும் புதிய சின்னங்கள்

 

ENNUM EZHUTHUM NEW LOGOS | எண்ணும் எழுத்தும் புதிய சின்னங்கள்



எண்ணும் எழுத்தும் ஆசிரியர்  கையேட்டில் உள்ள துணைக்கருவிகள் (படங்கள்)




ENNUM EZHUTHUM TERM II THB MATHS PICTURES

5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ் சொற்களஞ்சியம் (அனைத்துப் பாடங்கள்)

 5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ் சொற்களஞ்சியம் (அனைத்துப் பாடங்கள்)


Click here to download


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ் அலகு 1 துணைக்கருவிகள் | ENNUM EZHUTHUM TERM II TAMIL UNIT 1 TLM (PDF)

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ் அலகு 1 துணைக்கருவிகள் | ENNUM EZHUTHUM TERM II TAMIL UNIT 1 TLM (PDF)


Click here to download pdf file

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ENNUM EZHUTHUM ENGLISH TLM WITH COLORFUL PICTURES

TTSE Exam Tentaive Answer Key 15th October 2022 | தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு விடை குறிப்பு !

 TTSE Exam Tentaive Answer Key 15th October 2022 | தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு விடை குறிப்பு !


Click here to download 


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Minority scholarship - Last Date Extended

 Minority scholarship NSP pre matric last date extended to 31 October 2022.





TNPSC - யின் 4 வகை தேர்வு முடிவுகள் அறிவிப்பு

 

டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:


டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.


*கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.




தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது


* நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது


*தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது


* தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ஆசிரியர்கள் வருகைப்பதிவு செயலியிலேயே லீவுக்கும் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியிலேயே, விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் வசதியுடன், புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அரசுப்பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு பிரத்யேக செயலியில் பதிவேற்றப்படுகிறது. இதில், ஆசிரியர்களுக்கான வருகையை செயலியில் பதிவிட்டாலும், பழைய நடைமுறைப்படி, பதிவேட்டிலும் கையொப்பிமிட உத்தரவிடப்பட்டுள்ளது.


தலைமையாசிரியர் மேற்பார்வையில், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியில் பதிவேற்றப்படும். இதனால், தாமதமாக பள்ளிக்கு வந்தாலும், முழு சம்பளம் பெறும் நிலை நீடித்தது.

இதற்காக, 2019ல், பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.


இந்நிலையில், ஆசிரியர்களுக்கான செயலியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே, விடுமுறை விண்ணப்பிக்க, செயலியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.


ஆனால் தொழில்நுட்ப குளறுபடிகளால், விடுப்பு குறித்த தகவல்கள் பதிவேற்ற முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், விடுப்பு தகவல்களும் பதிவேற்றும் வகையில், செயலியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஆசிரியர்கள் வருகைப்பதிவு காலை 9:30 மணிக்குள், செயலியில் கட்டாயம் பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மகப்பேறு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட, 14 வகையான காரணங்களுக்காக எடுக்கப்படும் விடுப்பு குறித்த தகவல்களை, செயலியில் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்கள் தாமதமாக வருகைப்பதிவேற்றினால், அரைநாள் விடுப்பாக அறிவிக்கப்படும்' என்றனர். 


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!

 

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!


தமிழ் : 360

ஆங்கிலம் : 354

கணிதம் : 242

இயற்பியல் : 182

வேதியியல் : 262

தாவரவியல் : 165

விலங்கியல் : 184

வணிகவியல் : 584

பொருளியல் : 428

கணினி அறிவியல் : 55

புவியியல் : 21

வரலாறு : 138

மனையியல் : 3

அரசியல் அறிவியல் : 3

உடற்கல்வி இயக்குநர் : 63

மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை மாற்றம்?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்., 18 ஆக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன், அரசு விடுமுறை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விடுமுறையை மாற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை, ஒரு நாள் முன்னதாக விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து, பஞ்சாங்க கணிப்பாளர்கள் கூறியதாவது: வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்., 18ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பஞ்சாங்கத்தின் படிதான் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில், செப்., 19ல்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழக அரசு, எதன் அடிப்படையில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விடுமுறையை, செப்., 17ல் அறிவித்தது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு தனி கவனம் செலுத்தி, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறையை செப்., 18க்கு மாற்றி வெளியிட வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர்.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!

 07.10.2022 அன்று காணொலி கூட்டம் வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் தொடர்ந்து நடத்துதல் சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அனுப்பலாகிறது.