தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


24 விருதுகளுக்கு வகையான  திருவள்ளுவர் விருது 2023 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது (3 விருதுகள்). பேரறிஞர் அண்ணா விருது. பெருந்தலைவர் காமராசர் விருது. பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, வி.க விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது.


உமறுப்புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது. அம்மா இலக்கிய விருது. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்). சிங்காரவேலர் விருது. அயோத்திதாசப் பண்டிதர் விருது. மறைமலையடிகளார் விருது. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது. காரைக்கால் அம்மையார் விருது, சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, தமிழ்ச் செம்மல் விருதுகள் (38 விருதுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்).

விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணைய வழி வாயிலாகவோ அல்லது இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை அவர்களுக்கு 23.12.2022-க்கு முன்பாக விண்ணப்பம் வாயிலாகவோ அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 


விருதுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் விருது வழங்கப்படும். (தொ.பே.எண். 044-28190412, 044-28190413.


Click here to join whatsapp group for daily kalvinews update 

4 & 5 - CRC (26.11.2022) Training Videos and Facilitator Guidance PDF


CRC (26.11.2022) Training Videos and Facilitator Guidance PDF

CRC (26.11.2022) Training Videos and Facilitator Guidance PDF

 
CRC - Time Slot & Agenda - Download here

CRC - Video Link 1 - Download here


CRC - Video Link 2 - Download here


CRC - Video Link 3 - Download here


1,2,3 CRC Guidance for Facilitator_26th Nov_6.0.pdf - Download here


4&5 CRC Guidance for Facilitator_26th Nov_6.0.pdf - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு வகைகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு!

 

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு வகைகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு!

Click here to join whatsapp group for daily kalvinews update 

CEO, DEO பள்ளிப்பார்வையின் பொழுது மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான OMR விடைத்தாள் மாதிரி

 CEO, DEO பள்ளிப்பார்வையின் பொழுது மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான OMR விடைத்தாள் மாதிரி 


Sample OMR Answer Sheet for Exam During CEO, DEO School Visit - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு Bridge Course பயிற்சி - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

 அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge Course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


SCERT - Bridge Course Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

SMC - அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு....

 அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:


❇️ அனுப்பப்பட்டுள்ள மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


❇️ உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல் , SMC தலைவர் மட்டுமே , ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, 

Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER)


🔺TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே , அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


🔺 உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை, ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


❇️அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


❇️ உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.


❇️ பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:  

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்

2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை

4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி

5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்

7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்

8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 ( மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


🎯மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட  மாநில திட்ட இயக்குநர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

R.H-2023- வரையறுக்கப்பட்ட விடுமுறை

 R.H-2023- வரையறுக்கப்பட்ட விடுமுறை






SCHOOL MORNING PRAYER ACTIVITIES 23.11.2022

2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..

 


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 19 மற்றும் 25 ன் படி அமைந்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படியும் , அதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் கண்டவாறு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படியும் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதனடிப்படையில் , தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் , உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக , பார்வை 3 இல் காணும் அரசாணையின்படி , சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக்கல்வி ) தகுதிவாய்ந்த அலுவலராக உள்ளார்.


எனவே இதனடிப்படையில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் ( தொடக்கக்கல்வி ) நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான கூட்டம் 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , மேற்படி கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் , மேற்படி கூட்டத்தில் சரிபார்ப்பு பணிக்கான பணியினை மேற்கொள்ள 15 குழுக்கள் அமைத்திடவும் , இக்குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர் -1 , கண்காணிப்பாளர் -1 , உதவியாளர் -2 ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் , மேற்படி பணியினை மேற்கொள்ள பணியாளர்கள் தேவைப்படின் , அருகாமை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர் / அலுவலகப் பணியாளர்களை உட்படுத்தி கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


 மேலும் , இக்குழுவானது 05 குழுக்கள் துவக்கப்பள்ளிக்கானதாகவும் , 10 குழுக்கள் நடுநிலைப்பள்ளிக்கானதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

gen

Staff fixation 2022-2023 circular.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

திறனறி தேர்வுகள் - வட்டார அளவிலான ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி - ( NMMS / TRUST / NTSE ) - தொடர்பாக CEO செயல்முறைகள்

 மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :

2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.


 இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ( பொ ) ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்திட தெரிவிக்கப்படுகிறது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

29 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: நவ. 26 வகுப்பு தொடக்கம்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.


இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம்வழங்கப்படுகிறது. ஒரு பிளாக்கிற்குஒரு மையம் என 414 மையங்கள் நீட் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் என தமிழகம் முழுவதும் 29,000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தோறும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்


.இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது: நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 100 முதுகலை ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாணவர்களுக்கு இதற்கான பாடகுறிப்புகள் வழங்கப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

ஈரோடு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SMC Meeting Circular 25.11.2022.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

SMC - November Agenda for CwSN

 

இந்த மாதத்திற்கான மாற்றுத்திறன் மாணவர்கள் சம்பந்தப்பட்ட SMC செயல்பாடுகள் :


SMC - November Agenda for CwSN - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: என்எம்எம்எஸ் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டு இருக்கிறது.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில்ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வுசெய்ய்படுகிறார்கள். இதில், தமிழகத்துக்கான மாணவர் ஒதுக்கீட்டு எண்ணிக்கை 6,695 ஆகும். இவ்வாறு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிதாகவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் பதிவுசெய்ய வேண்டும். அந்த வகையில், நடப்பாண்டு என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

கலைத் திருவிழா -திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை (பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது )


கலைத் திருவிழா -திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை

(பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள்

தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது )






2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! மாவட்ட வாரியாக பள்ளிகள் & பாட விவரம் - Attached


2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

மாவட்ட வாரியாக பள்ளிகள் & பாட விவரம் - Attached






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 21.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.


பழமொழி :
Nothing so bad but it might have been worse.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. 


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்


பொது அறிவு :

1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 

 1914 ஆம் ஆண்டு . 

 2. உலக சமாதான சின்னம் எது ?

 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :

ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.


ஆரோக்ய வாழ்வு :

ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, ப்யூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


NMMS Q

0.04, 0.09, 0.25, 0.49, ________ 

 விடை: 0.121 

 விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.


நவம்பர் 21 இன்று

சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.


நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.


இன்றைய செய்திகள் - 21.11.22

* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.

* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.
* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.

* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.

* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.

* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Today's Headlines

* Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation

 *Dharna on Dec. 23 in 7 mandals including Chennai: Government Employees Association announcement.
 *Archeology Minister Thangam Thennarasu said that the ongoing excavations on behalf of the Tamil Nadu government are providing new data and information to history.

 *Central Govt declares Bharathi's birthday as National Languages ​​Day: Plans to build Bharati Memorial in Varanasi

* It has been announced that the Winter Session of Parliament will begin on December 7.

 * UN  France supports India's permanent membership in the Security Council.

 * 2nd T20I - India win by beating New Zealand easily.

 * International T20 Cricket: Suryakumar Yadav who achieved many records in a single match.

 * The  World Cup football festival started yesterday in Qatar with 32 teams
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




Team Visit Google Form for Primary And Middle School

கலைத் திருவிழா - Students Entry in EMIS Portal

 


கலைத் திருவிழா

 

📚Students Entry in EMIS Portal


கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை *Emis இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி* தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது 


Steps to update the students list👇


 School Login ---> School ---> Competition --> Programs ---> Select Program ---> Class ---> Type of Competition ---> Select Event ---> Category ---> Types of Event ---> Add Participants ---> Select ✅ Students ---> Submit


 Click here to join whatsapp group for daily kalvinews update 

New Medical certificate & Medical fitness Form

 மருத்துவ விடுப்பிற்கான மருத்துவ சான்று பெறுவது தொடர்பாக புதிய நடைமுறைகளை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்துள்ளது...! புதிய Medical certificate & Medical fitness படிவம் வெளியீடு


இனி Blood test  ECG போன்ற test அவசியம்.  Out patient என்றாலும் ஆஸ்பத்திரி வரிசை பதிவு எண் அவசியம்


New Medical certificate & Medical fitness Form - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum - THB English book தமிழாக்கம்

 

EE THB English book தமிழாக்கம்.


Google translate மூலம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது....

 

 Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum Lesson Plan- November 4th Week Lesson Plan



 Ennum Ezhuthum -  November 4th Week Lesson Plan - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் [ நவம்பர் 18 முதல் 24 வரை ] கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணைச் செயல்முறைகள் [ 17/11/22 ]


 Click here to join whatsapp group for daily kalvinews update