School Morning Prayer Activities - 16.12.2022

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.12.2022

திருக்குறள் :

"பால் :அறத்துப்பால். 

இயல் : இல்லறவியல். 

அதிகாரம் : விருந்தோம்பல்.

 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

 விளக்கம்:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்."


பழமொழி :
"The resolved mind has no cares. 

 துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டுமே."


இரண்டொழுக்க பண்புகள் :

1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.



 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"


பொன்மொழி :

"தீர்வில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினையில் அல்ல. 

--ஜிம் ரோன்"


பொது அறிவு :

1.நமது உடலில் மிகப்பெரிய உள்உறுப்பு எது? 

 கணையம்

 2. செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால் வரும் நோய் எது? 

 பெப்டிக் அல்சர்.


English words & meanings :

discrete - individually seperate. adjective. வெவ்வேறான. பெயரடை. Discreet-careful and prudent. adjective. புத்தி கூர்மை உள்ள. பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வயதான தோற்றம் ஏற்படுத்துவதை தடுக்கிறது. சரும சுருக்கங்களை நீக்கும்.

பொதுவாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன்மூலம் பயோடின் உற்பத்தி அதிகரிக்கும். பயோடின் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.


NMMS Q 

1) 1, 4, 27, 16, 125, ____     

 ans 343                                        

2) 0.5, 0.55, 0.65, 0.8,  ___      

 ans 1


டிசம்பர் 16 இன்று

வெற்றி நாள்



வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.


நீதிக்கதை

பத்தாவது பாஸ்

ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான். 

ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். 

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். 

ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. 

என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். 

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர். 

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். 

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். 

நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான். 

ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர். 

இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

நீதி :
பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.


இன்றைய செய்திகள் - 16.12.22

* தமிழகத்தில் கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் ஆக நிதி அதிகாரம் உயர்வு.

* அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்.

* தமிழகத்தில் இவ்வாண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் தகவல்.

* பவானிசாகரில் இருந்து 6,500 கனஅடி நீர் திறப்பு: கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்.

* இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் திரும்பி சென்றது - இந்திய கப்பற்படை தீவிர கண்காணிப்பு.

* நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டம்.

* அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் நேசன்ஸ் ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.

* உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்.


Today's Headlines


* In Tamil Nadu, the financial authority has been increased to Rs.5 lakh, Rs.25 lakh and Rs.50 lakh for village, district and district panchayats respectively.

*  192 government college professors got voluntary transfer- information by Higher Education Department..

* Action to purchase 58 lakh metric tons of paddy in Tamil Nadu this year: Food Minister informed.

 * 6,500 cubic feet water release from Bhavanisagar: Vigilance intensified in coastal areas.

* Chinese spy ship returns from Indian Ocean - Indian Navy Keeps watching vigilantly. 

 * Central government plans to start 20 new nuclear power plants in the country by 2031.

 * Following the success of the resolution brought by the United States, it has been announced that Iran will be removed from the UN Women's Organization.

* Women's Nations Hockey: India beats South Africa

 * World Cup Football Final: France vs Argentina
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - அறிவுரைகள் மற்றும் உழைப்பூதிய விவரம் வெளியீடு!

 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்பு பள்ளிகளுடன் ) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


DGE - TRUST Instructions - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum - 3rd Term Teachers Module ( Tamil , English , Maths )

 மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு


Ennum Ezhuthum - 3rd Term Teachers Module - Tamil - Download here


Ennum Ezhuthum - 3rd Term Teachers Module - English - Download here


Ennum Ezhuthum - 3rd Term Teachers Module - Maths - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings

 

4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு , ஆசிரியர் கல்வியியல் பயிற்சி துறை தயாரித்த வினாத்தாள்கள் pdf வடிவில் , 15.12.2022 அன்று இணையவழியில் கிடைக்கும். பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அந்தந்த பள்ளி அளவில் அவர்களாகவே வினாத்தாள் ஏற்பாடு செய்து தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுகிறது.


இயக்குநர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை


4th &5 th std Exam proceedings.pdf - Download here...

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்


Click here to join whatsapp group for daily kalvinews update 

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



Click here to join whatsapp group for daily kalvinews update 


Ennum Ezhuthum - SA மதிப்பீடு குறித்த ஆசிரியர்களுக்கான தகவல்.

 ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் தொகுத்தறி மதிப்பீட்டில்...


முதல் வகுப்பு


1. முதல் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு நிலைக்குண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.


2 ஆம் வகுப்பு


1. இரண்டாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர்கள் அரும்பு நிலைக்குண்டான  அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு நிலை கொண்ட கேள்விகள் அவர்களுக்கு தோன்றும்.


2. அதே இரண்டாம் வகுப்பில் மொட்டு  நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மொட்டு நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.


3 ஆம் வகுப்பு


 1. மூன்றாம் வகுப்பில் அரும்பு  நிலையில் உள்ள மாணவர் அவர் நிலைக்குண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்ச த்தில் அதற்கு  அடுத்த நிலையான மொட்டு, மலர் நிலைக்கான கேள்விகள் அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும்.

 

2. அதே மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள மாணவர்கள் அவர்கள் நிலைக்கு உண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மலர்  நிலைக்குண்டான கேள்விகள் அவருக்கு தோன்றும்.


3. அதே மூன்றாம் வகுப்பில் மலர்நிலை குழந்தைகளுக்கு அவர்கள் நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்...


Click here to join whatsapp group for daily kalvinews update 

ITK Volunteers Training 17.12.2022 - Module 6

 

இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 அன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான  கையேடு

ITK Volunteers Training 17.12.2022 - Module 6 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 




மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு

 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது TNPSC

Applications are invited from eligible candidates only through online mode upto 13.01.2023 for direct recruitment to the vacancies in the post of District Educational Officer ( Group - I C Services ) in School Education Department included the Tamil Nadu School Educational Service


DEO Recruitment Notification 2022.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 



TNSED-Mobile App New Update

TNSED-Mobile App New Update
TNSED School App - New Version 0.0.60 - Updated on Mar 3, 2023

What's new

Bug fixing & performance improvements

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு மாநில திட்ட இயக்ககம் ( ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) ( SSA ) மூலம் உடற்கல்வித்துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


 எனவே , மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் , அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிடவும் , பள்ளிகளில் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும் , இதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று இருப்புகோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Term 2 - Summative Assessment ( 13.12.22 - 23.12.22 ) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலமாகவும் நடைபெறும் என்பதற்கான ஆணை.



1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.22 முதல் 23.12.22 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

 மே தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் ( தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும். 


செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்தப்பிறகு கடைசி மூன்று தினங்களான 21 , 22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ் , ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திக்கொள்ளலாம் . இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம் . இவ்வாறு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது ( Only Optional ) மட்டுமே . இம்மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத்தேவையில்லை.

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலருக்கான புதிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்

 வட்டாரக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் சேர்க்க வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்

👉ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த வரையில்

👉1.அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை/சிறப்பு நிலை/போனஸ் ஊதிய உயர்வை வழங்க அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2.அனைத்து ஆசிரியர்களுக்கும் எதிராக தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(a) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இறுதி உத்தரவுகளைத் அனுப்புவதற்கும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார். 

👉3.பணிமூப்புப் பட்டியல், தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக் கல்வி) பரிந்துரை செய்வதற்கும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉4.அனைத்து ஆசிரியர்களையும் உயர்கல்வித் தகுதிபெற அனுமதிக்கும் தகுதியான அதிகாரியாக அவர் இருப்பார்.

👉5.அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் பெறுதல் மற்றும் வழங்குதல், கடன் முன்பணங்கள் மற்றும் TPF முன்பணங்கள் தற்காலிக மற்றும் பகுதி இறுதி திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார் 

👉உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில்:

👉1. மறுநியமனமாகப் பணியமர்த்தப்பட்டவர்களின்  மறுநியமனத்திற்கான. ஒப்புதல் அளிக்க அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2.அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் செயல்படுத்தவும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்க) பரிந்துரைக்கவும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉பஞ்சாயத்து யூனியன் முனிசிபல் கார்ப்பரேஷனைப் பொறுத்தவரை, அரசு/உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை

பள்ளிகள்:

👉1. தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுப் பணியில் அதிகபட்சமாக 10 மாதங்களுக்கு அவரது அதிகார எல்லைக்குட்பட்ட தேவையான இடங்களில் தற்காலிக அடிப்படையில் நியமிப்பதற்கான தகுதியான அதிகாரியாக அவர் இருப்பார்.

👉2.தேவைப்படும் போதெல்லாம் வகுப்பு I முதல் VIII வரையிலான மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழின் மேலொப்பமிடும் அதிகாரியாக அவர் இருப்பார்.


பொது:

👉1. குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கைக்கு ஒரு மாதம் வரை வயது தளர்வு அளிக்கத் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2. வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கடன்கள், முன்பணங்கள் மற்றும் GPF/TPF முன்பணத்தை (தற்காலிக மற்றும் பகுதி இறுதி )திரும்பப் பெறுவதற்கு அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.


மாவட்டக்கல்வி அலுவலர் தொடக்கக்கல்வியைப் பொறுத்தவரை


👉அயல்மாநில சான்றிதழ் மதிப்பீடு செய்தல், 1-8 முடிய அயல் மாநிலத்தில் பயின்றோர் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்தல், 

👉அனைத்துப் பணியிடங்களுக்கும் பணிவரன்முறை, தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்த உத்தரவு வழங்குதல்.

👉ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்வது.

👉தகுதியில்லாத பள்ளிகளை மூடுவது சார்ந்த கருத்துரு அனுப்புவது.

👉உபரிப்பணியிடங்களை,கூடுதல் தேவைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது.

👉விருப்பார்ந்த ஓய்வில் செல்ல அனுமதி

👉இளையோருக்கு இணையாக மூத்தோருக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது.

போன்ற அதிகாரங்கள் மாவட்டக்கல்வி (தொ.க) அலுவலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ தொகுத்தறி (SA) தேர்வு பற்றிய சந்தேகமும் , அதற்கு உரிய விளக்கமும்.

 கேள்வி:1.

 TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா?


*ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online தேர்வு மதிப்பீடு மட்டுமே தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படும்*


கேள்வி:2.


 TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF எழுத்து தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமா? 


அப்படி வினாத்தாள்கள் வழியே வைக்கப்படும்  தொகுத்தறி மதிப்பீடு கணக்கில் தொகுத்தறி மதிப்பீடாக (SA) ஏற்றுக் கொள்ளப்படுமா?


* TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF வடிவிலான வினாத்தாள்கள் கொண்டு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வை கட்டாயமாக நடத்த தேவையில்லை...

 * Optional ஆக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழியே எழுத்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பும் ஆசிரியர்கள்  வினாத்தாள்கள் வழியே தொகுத்தறி தேர்வை Online தேர்வுடன் இணைந்து நடத்தி கொள்ளலாம்*


* அப்படி வினாத்தாள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு தொகுத்தறி தேர்வு நடத்தினாலும் அந்த மதிப்பீடை தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்பாடாது


கேள்வி:3. 


1 & 2 &3ம் வகுப்புக்குரிய தொகுத்தறி PDF வினாத்தாள்கள் BRC மூலம் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படுமா?


* BRC மூலம் விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்கப்படாது.... எழுத்து தேர்வை விரும்பும் 1 & 2 & 3ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் தாமே தமது சொந்த பொறுப்பில் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 19 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 




கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் -09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் -09) அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



1) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


2) சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


3) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


4) வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




5) கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


6) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை



7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


8) விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


9)திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை!

10) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

11) அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

12) பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை





அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்

 அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்  Click here to download pdf

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கான தேதி மாற்றம் - SPD Proceedings

 


அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு 05.12.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 


இதனை தொடர்ந்து . தற்போது மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன . 11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023 க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது . தற்போது , நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 க்குள் நடத்தப்பட உள்ளது . எனவே மாவட்ட அளவில் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும்.


 சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - டிசம்பர் 2022

 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

மாணவர்களுக்கு 146 வகை ஊட்டச்சத்து உணவுகள்: தேவையான பொருட்கள், செய்முறையை வெளியிட்டது தமிழக அரசு

 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் உடல்,மன ஆரோக்கியத்துடன் புத்திக்கூர்மையுள்ள மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன், அவர்களது கற்றல் திறனும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிறுதானியங்களின் பயன்பாடு கரோனா காலத்துக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து தலைசிறந்த சமையல் கலைஞர்கள் அரசுக்கு பரிந்துரை அளித்தனர்.


அந்த வகையில் மத்திய அரசின் முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் விரிவான திட்டம் மற்றும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இணைந்து கர்ப்பிணிகள், குழந்தைகள் ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 பக்கங்கள் கொண்ட 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது.


பலவகை பலகாரம்: இதில், சிறுதானிய உணவு வகைகள், அடுப்பில்லா சமையல், ஊட்டச்சத்துகளுடன் கூடிய இனிப்பு வகைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், கர்ப்பகால மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், மூலிகை உணவு வகைகள் ஆகிய தலைப்புகளில் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உணவையும் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள், அதன் செய்முறை விளக்கப்பட்டிருப்பதுடன், உணவின் வண்ணப் படங்களும் உள்ளன.


சிறுதானிய உணவு வகைகளில் கேழ்வரகு அடை, கம்பு கொழுக்கட்டை, ரொட்டி, சாமை புளி பொங்கல், தினைக் கொழுக்கட்டை, கம்பு பாலக் ரொட்டி, வரகு தக்காளி சாதம், சிறுதானிய புட்டு மிக்ஸ், தினை சைவ பிரியாணி, கம்பு பணியாரம், குதிரைவாலி அரிசி பிரியாணி, சோளப் பணியாரம், கம்பு அடை, கைக்குத்தல் அரிசி வடை குதிரைவாலி இட்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


அடுப்பில்லா சமையல் பிரிவில், வெள்ளரி வெங்காயம், வெண்பூசணி பச்சடி சாலட், சதைப்பற்று கலந்த பழங்கள், தேனுடன் மசித்த பழங்கள், ஆரஞ்சு பஞ்ச், தக்காளி பஞ்ச், பழத்தூள், பழப் பச்சடி, சிலு, சிலு ஜில் பானம், அஷ்டாவதானி ஜூஸ், மிக்ஸட் புரூட்ஷேக், முளைப்பயிறு கம்பு சாலட் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.


ஊட்டச்சத்துடன் கூடிய இனிப்பு வகைகளில் சாமை பொரி உருண்டை, தினை இனிப்பு பொங்கல், தினை அதிரசம், வெந்தய களி அல்வா, வரகு அல்வா, கம்பு பாயாசம், குதிரைவாலி இனிப்பு அடை, அருகம்புல் பாயாசம், கேழ்வரகு வேர்க்கடலை அல்வா, சாமை அரிசி சர்க்கரைப் பொங்கல், தினை அல்வா, சாமை பால் பாயாசம், கடலைப்பருப்பு இனிப்பு உருண்டை, தினை பாயாசம் ஆகியன வண்ணப் படங்களாக பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது.


ஆரோக்கியமான தாயும் சேயும்: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், போஷாக்கு கஞ்சி, சோள ஓலை கொழுக்கட்டை, சோள சுண்டல், மக்காச்சோளம் முந்திரி கொத்து, தினை புட்டு, கம்பு கொழுக்கட்டை, ராகி ரொட்டி, கூழ் தோசை என பட்டியல் நீள்கிறது. ஊட்டச்சத்து இட்லிகள், பருத்திவிதைப் பால், கோதுமை சேமியா கேசரியும் உண்டு.


கர்ப்பகால மற்றும் பாலூட்டும்தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், பன்னீர் டிக்கா, சாமை சிக்கன் பிரியாணி, சோள அடை, பூண்டு குழம்பு, பூண்டு சாதம், மதர்ஸ் ஸ்பெஷல் குழம்பு, ஏழு வகை எளிய பிரசவ கஷாயம், சுறா புட்டு, நெல்லிக்காய் தொக்கு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


மூலிகை உணவு வகைகளில் முடக்கத்தான் கீரை தோசை, பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல், முருங்கை சூப், சீரக சூப், ஆவாரம்பூ டீ, மணத்தக்காளி கீரை துவையல், உணவு வகைகளின் ருசியும், மணமும் அவற்றின் பயன்பாடும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு

 

GO NO : 219 , Date : 02.12.2022

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு


CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update