மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download here


Click here for latest Kalvi News 

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 | இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு அறிவிப்பு.

 

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.


NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...



Click here for latest Kalvi News 

EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD

 EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD


ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள தங்களது LOGIN PASSWORD - னை (மொபைல் எண்ணின்‌ முதல் 4 இலக்கம் @ பிறந்த வருடம்) OTP முறையில் தங்களுக்கு பிடித்த STRONG ஆன PASSWORD ஆக மாற்றம் செய்து கொள்ளலாம். 


குறிப்பு:

விரைவில் இந்த வழிமுறையை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களது LOGIN PASSWORD மாற்றம் செய்து கொள்ளலாம்.


தற்போது முயற்சிக்கும் போது மாற்றம் செய்ய முடியவில்லை.


Click here for latest Kalvi News 

பள்ளிகளில் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடடுவோம் நிகழ்ச்சியினை பெற்றோர்களை அழைத்து கொண்டாட உத்தரவு.

 

மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் - மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துதல் - தொடர்பாக - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.



Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய காலணி வடிவமைப்பு மற்று்ம் மேம்பாட்டு நிறுவனத்தின் அகில இந்திய நுழைவுத்தேர்வு, ஐஐடி மற்றும் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வு, மத்திய அரசு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத்தேர்வு, நெஸ்ட் நுழைவுத்தேர்வு, சென்னை கணிதவியல் நிறுவன நுழைவுத்தேர்வு என பல்வேறு மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.


இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், நுழைவுத்தேர்வு கட்டணம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிப்பதுடன், அந்த நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Click here for latest Kalvi News 

‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரிப்பு! !!

 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.


அப்போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.


அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் 100 சதவீத வருகை பதிவாகியுள்ளது.


கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.


‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி நேற்று வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.



Click here for latest Kalvi News 

1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


அதே போல் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது, தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை, கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில்  இருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click here for latest Kalvi News 

EMIS - இல் மாணவர்களின் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதனை மாற்றம் செய்து கொள்ள புதிய முறை வெளியீடு

 EMIS - இல் மாணவரின் பிறந்த தேதியில் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றிக் கொள்ள EMIS இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..


அதற்கு  பெற்றோர்களின் தொலைபேசி எண் அவசியம் வேண்டும். காரணம் நாம் மாற்றம் செய்த பின்பு பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு  ஒரு OTP செல்லும் அந்த OTP எடுத்து உள்ளீடு செய்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்....


மாற்றம் செய்யும் வழிமுறை...pdf

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Click here to download EMIS-pdf 


Click here for latest Kalvi News 

உண்டு உறைவிட திறன்‌ மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு

 மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பாடக்கருத்துகளில்‌ விரிவுரைகள்‌, அறிவியல்‌ சோதனைகள்‌, செயல்பாடுகள்‌, பயிற்சி பட்டறைகள்‌, களப்பயணங்கள்‌ மற்றும்‌ குழு விவாதங்கள்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை ஆசிரியர்கள்‌ திறம்பட கற்பிக்க உதவும்‌ வகையிலும்‌, மாணவர்கள்‌ எளிதாக புரிந்துகொள்ளும்‌ வகையிலும்‌, இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும்‌, சிறந்த கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ திறமை வாய்ந்த மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக்‌ கொள்ளவும்‌, மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும்‌, மேற்படி கற்றல்‌-கற்பித்தல்‌ பணிகளை ஏப்ரல்‌-2023 முதல்‌ தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின்‌ உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும்‌, ஆணை வேண்டப்படுகிறது.


எனவே, அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌, ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில்‌. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது.



Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழிகள் ' திட்டம். இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது.

 எழுத்துக்களில் , வாக்கிய அமைப்பில் , உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம்.

 Press-Invite - Download here

 Click here for latest Kalvi News 

EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி!!!

 


EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது!


Click here for latest Kalvi News 

மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!

 மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!


Instructions - Download here...


Click here for latest Kalvi News 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.23


   

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் : 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

பொருள்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

பழமொழி :

He who eats crumbs will live a hundred years.

நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

பொது அறிவு :

1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 அட்மிரல் . 




 2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?

 பமீலா தேவி.

English words & meanings :

hammock – a hanging bed between two trees. noun. when I called him he was sleeping in the hammock. வழியிலான தொங்கு மஞ்சம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.

 எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.

கணினி யுகம்

Ctrl+Z: It is used to get back the deleted item. For example, if you have deleted the data by mistake, you can press Ctrl+Z to retrieve (Undo) the deleted data. Ctrl + P: Prints a note. 

மார்ச் 15


ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

கருப்பங்கழி!

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.

இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். 

அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

இன்றைய செய்திகள்

15.03. 2023

* முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

* கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

* டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.

* ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை.

* மீண்டும் ஏவுகணை சோதனை - தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.

* இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Education Minister Anbil Mahes has appealed to the headmasters to share their views on carrying out activities for the development of the school along with the former students.

 * Due to the increase in power consumption in Tamil Nadu, the daily power demand has reached a new high of 17,647 MW.  It is expected to increase further in the coming days.

 * Due to the increase in the spread of corona infection, it is necessary to wear face mask and observe personal distance: Information of Minister M. Subramanian.

 * Farmers strike again in Delhi - March 20 begins.

 * Rs 15,000 crore production of 200 BrahMos missiles: Ministry of Defense finalizes final phase

 * Missile Test Again - North Korea Threatens South Korea.

 * After 20 years, India and Australia will meet in the final of a series organized by the International Cricket Council.

 England Open Badminton - Indian player Pranai advances to next round.

 Pro Hockey League: India beat Germany again.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

Then chittu Monthly Magazine - March 2023

 பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட மார்ச் மாத தேன் சிட்டு மாத இதழ்

 March  - Then chittu Monthly Magazine - Download here


Click here for latest Kalvi News 

Kalvi Siragugal - Magazine - Edition-1

 தர்மபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக புதிதாக துவங்கப்பட்டுள்ள  ''கல்வி சிறகுகள்'' என்ற மாதாந்திர மின்னிதழ்


Kalvi Siragugal - Magazine - Edition-1.pdf - Download here


Click here for latest Kalvi News 

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & தமிழ் கதை சுருக்கம்

 

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & தமிழ் கதை சுருக்கம் 


Children's Movie - DSE Proceedings & Movie story - Download here

Click here for latest Kalvi News 

101 Chodyangal - School Children's Move - Direct Link

 

101 Chodyangal - School Children's Move - Direct Link

Download here...


Children's Move - Dir Proceedings - Download here


Click here for latest Kalvi News