மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download here
Education and Information
மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download here
Click here for latest Kalvi News
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.
NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...
Click here for latest Kalvi News
EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD
ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள தங்களது LOGIN PASSWORD - னை (மொபைல் எண்ணின் முதல் 4 இலக்கம் @ பிறந்த வருடம்) OTP முறையில் தங்களுக்கு பிடித்த STRONG ஆன PASSWORD ஆக மாற்றம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு:
விரைவில் இந்த வழிமுறையை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களது LOGIN PASSWORD மாற்றம் செய்து கொள்ளலாம்.
தற்போது முயற்சிக்கும் போது மாற்றம் செய்ய முடியவில்லை.
Click here for latest Kalvi News
மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் - மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துதல் - தொடர்பாக - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
Click here for latest Kalvi News
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
Click here for latest Kalvi News
பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் 100 சதவீத வருகை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி நேற்று வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
Click here for latest Kalvi News
பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அதே போல் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது, தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை, கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Click here for latest Kalvi News
EMIS - இல் மாணவரின் பிறந்த தேதியில் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றிக் கொள்ள EMIS இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
அதற்கு பெற்றோர்களின் தொலைபேசி எண் அவசியம் வேண்டும். காரணம் நாம் மாற்றம் செய்த பின்பு பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு ஒரு OTP செல்லும் அந்த OTP எடுத்து உள்ளீடு செய்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்....
மாற்றம் செய்யும் வழிமுறை...pdf
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Click here to download EMIS-pdf
Click here for latest Kalvi News
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல் முறைகள், சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள் மற்றும் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள் உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டங்களில் பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பாடக்கருத்துகளில் விரிவுரைகள், அறிவியல் சோதனைகள், செயல்பாடுகள், பயிற்சி பட்டறைகள், களப்பயணங்கள் மற்றும் குழு விவாதங்கள் ஆகியவற்றின் மூலம், ஆழமாக சிந்தித்து செயல்படவும், பாடத்தை ஆசிரியர்கள் திறம்பட கற்பிக்க உதவும் வகையிலும், மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும், சிறந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும், மேற்படி கற்றல்-கற்பித்தல் பணிகளை ஏப்ரல்-2023 முதல் தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின் உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும், ஆணை வேண்டப்படுகிறது.
எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும், ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில். கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
Click here for latest Kalvi News
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழிகள் ' திட்டம். இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது.
எழுத்துக்களில் , வாக்கிய அமைப்பில் , உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம்.
Click here for latest Kalvi News
EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது!
Click here for latest Kalvi News
மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!
Instructions - Download here...
Click here for latest Kalvi News
திருக்குறள் :
He who eats crumbs will live a hundred years.
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம்.
2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
பொது அறிவு :
1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
அட்மிரல் .
2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?
பமீலா தேவி.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கணினி யுகம்
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
Click here for latest Kalvi News
பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட மார்ச் மாத தேன் சிட்டு மாத இதழ்
March - Then chittu Monthly Magazine - Download here
Click here for latest Kalvi News
தர்மபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக புதிதாக துவங்கப்பட்டுள்ள ''கல்வி சிறகுகள்'' என்ற மாதாந்திர மின்னிதழ்
Kalvi Siragugal - Magazine - Edition-1.pdf - Download here
Click here for latest Kalvi News
மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & தமிழ் கதை சுருக்கம்
Children's Movie - DSE Proceedings & Movie story - Download here
Click here for latest Kalvi News
101 Chodyangal - School Children's Move - Direct Link
Children's Move - Dir Proceedings - Download here
Click here for latest Kalvi News