ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஏப்ரல் 2023 மாத இதழ்
School Education - Monthly Magazine - April 2023 - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஏப்ரல் 2023 மாத இதழ்
School Education - Monthly Magazine - April 2023 - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்
நம்ம School நம்ம ஊரு பள்ளி Module-ல் தேவையல்லாத Needs ஐ Delete செய்யும் Option Enable செய்யப்படட்டுள்ளது. இப்பணியினை உடனடியாக மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளுப்படுகிறார்கள்.
(school login ---> schools---> click--> namma school namm ooru palli -> Open and delete the unwanted needs )
Click here to join whatsapp group for daily kalvinews update
மே - 2023 துறைத் தேர்வுகளுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.
TNPSC - Department Exam May 2023 - Hall Ticket - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு,
தங்கள் individual login ல் Seniority challenge என்ற மெனு வழியாக Seniority எண் பார்த்துக்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் seniority, priority, ஆகியவற்றில் தவறுகள் இருப்பின் challenge button ஐ அழுத்தி தேவையான விபரத்தை பதிவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிய அலுவலர்கள் அவற்றை சரிபார்த்து approve or reject செய்து seniority ஐ சரிசெய்து விடுவார்கள்.
கலந்தாய்வு அன்று முறையீடு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
EMIS team.
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி?
பட்டய ஆசிரியராக மாறு வதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் Diploma in Teacher Education (D.T.Ed).
ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லாது போனாலும், ஆண்களைவிட பெண்கள் மத்தியில் இந்தப் படிப்பில் சேருவதற்குப் போட்டி நிலவுகிறது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இதற்குக் காரணம். இதற்கான டிப்ளமா (D.T.Ed.) படிப்பில் சேர்வதும் எளிது. பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் சேர்க்கைக்குத் தகுதியுண்டு.
கல்வித் தகுதி
1. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
2. மேலும், பொதுப் பிரிவினர் (OC) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200 அல்லது 300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு (540 / 1200 அல்லது 270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
3. விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை +2 வரை மொழிப் பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும்.
4. வயது வரம்பு: 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது | பிற்படுத்தப்பட்டோர் | மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் கலப்புத் திருமணத் தம்பதியினரில் ஆதி திராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினத்தவருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.
5. சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது . இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 'மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்' எனப்படும் 'டயட்/ DIET' மையம் செயல்படுகிறது. இது தவிர்த்து ஏராளமான தனியார் பயிற்சி நிறுவனங்களும் உண்டு. உங்கள் பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் குறித்த அங்கீகாரம் உள்ளிட்ட தகவல்களை அருகிலுள்ள 'டயட்' நிறுவனத்தில் உறுதி செய்துகொள்ளலாம்.
இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதி, அதில் பெற்ற 'கட் ஆப்' மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி வாய்ப்பு பெறலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத் தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் முகவரியில் வெளியிடப்படவுள்ளது. இவ்விணைய தளத்தில் உரிய கட்டணத் தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
கட்டணம் செலுத்துவதற்குத் தங்களது பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card ) மற்றும் இணைய வங்கிச் சேவை ( Internet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு | பிற்படுத்தப்பட்ட வகுப்பு | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ .500 / - , மாற்றுத் திறனாளிகள் / தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ .250 / - நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பங்களை Online மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (Save) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Click here to join whatsapp group for daily kalvinews update
Due to scheduled maintenance activity most of the EMIS web application and mobile application services will not be available from May 15th 11 AM to May 22nd 11 AM. The services which are available will be announced later.
Click here to join whatsapp group for daily kalvinews update
How to promote the students from one class to another class?
▪️மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யும் வசதி emis portal-லில் enable செய்யப்பட உள்ளது.
▪️ தங்கள் பள்ளியில் உள்ள இறுதி வகுப்பு மாணவர்களுக்கு tc generation செய்து common pool-லுக்கு அனுப்பி இறுதி வகுப்பில் 0 என வைத்துக் கொள்ளவும்.
▪️பிறகு இறங்கு வரிசையில் அதாவது உங்கள் பள்ளி நடுநிலைப்பள்ளி எனில் 7 ஆம் வகுப்பு மாணவர்களை 8 ஆம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️தற்போது ஏழாம் வகுப்பில் 0 என இருக்கும் .தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களை ஏழாம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️இவ்வாறு அனைத்து வகுப்பு மாணவர்களையும் promote செய்தபின் முதல் வகுப்பில் 0 என வரும்.
▪️அதன் பிறகு தங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களை new entry செய்து கொள்ளலாம்.
▪️மிக முக்கியமான ஒன்று முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களையும் new entry செய்யக் கூடாது.
▪️அந்த மாணவன் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ LKG & UKG படித்திருக்கிறாரா? என பார்த்த பின்பு இல்லை எனில் new entry செய்யவும்.
▪️LKG & UKG மாணவர்களுக்கும் emis id உண்டு.
மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயரிவுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.
ஆணை பெற்றுக்கொளள்லாம் மேற்காண் காலஅட்டவணைப்படி நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் ( Within District ) விண்ணப்பித்துள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் முன்னுரிமைப்படி ( Seniority wise ) அம்மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினை விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து மாறுதல் மேலும் அடுத்ததாக தங்களுக்குரிய சுழற்சி ( turn ) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம் . பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள ( Resultant Vacancy ) காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்a Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் ( One Cycle ) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குவதாக இருந்தது; நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருத்திய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பதவி நிலையிலேயே கவுன்சிலிங்கை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே பாணியில், உபரியாக உள்ள பணியாளர்களையும் இடமாறுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.
கணிதத்திறனுடன் பிழையின்றி எழுத படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வரும் கல்வியாண்டில் 4,5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக அந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு (2023-2024) முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து பாடப் பொருள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பாடப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி மே 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் மாவட்ட அளவிலான பயிற்சி மே 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளும் வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணி விடுப்பு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here to join whatsapp group for daily kalvinews update
கனவு ஆசிரியர் Level 2 க்கான Tamil Paper Syllabus and Model questions
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 01.08.2023-படி பணியாளர் நிர்ணயம் சார்ந்த அறிவுரைகள் pdf. - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்கக்கல்வி துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம் பெறாதவை:
1. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்).
2. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).
3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
5. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).
6. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click Here to Download PDF - EE Teachers Hand Book
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here to join whatsapp group for daily kalvinews update
Click Here to Download PDF - EE Teachers Hand Book
Click here to join whatsapp group for daily kalvinews update
எண்ணும் எழுத்தும் - முதல் பருவம் - தமிழ் - ஆசிரியர் கையேடு PDF
லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி, உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
அறிவியல் படிப்புகள் :
B.Sc ( physics) : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல் M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.
B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும். CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.
B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன. வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.
IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics) படிப்பதற்கு JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics) படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும். வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு phd படிக்கலாம். phd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.
M.Sc (physics, Chemistry, Mathematics) முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம். இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம், ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (physics, chemistry) படிக்கலாம், கல்வி துறை (Teaching) , ஆராய்ச்சி துறை (Research) , தகவல் தொழில் நுட்பம் (IT) , உற்பத்தி துறை (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.
கலை படிப்புகள் :
B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி துறையை தவிர்க்கவும்). M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.
B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் : குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள். மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.
B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை. B.Com படித்து CA (charted accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.
மேலாண்மை படிப்பு :
B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill) இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.
தகவல் தொழில் நுட்ப துறை (IT) :
மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை. B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து, Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programming language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும். கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும்.
தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும். MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான். இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான். இதற்க்கு NEET தேர்வில் குறைந்தது 430 மார்க் எடுக்க வேண்டும் (அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 430 மதிப்பெண் எடுக்க வேண்டும்).
படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான், நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.
எனவே பெற்றோர்களே! மாணவர்களே!, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here for latest Kalvi News