கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்..
1) சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்..
1) சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
இதுவரை நடந்த 6 அரசு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட 1 மதிப்பெண் வினாக்கள் குறித்த பகுப்பாய்வு:
1) இயக்க விதிகள் பாடத்தில் இருந்து ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் என்ற வினா மட்டுமே (மூன்று வினாத்தாள்கள்)கேட்கப்பட்டுள்ளது. இந்த அலகில் வேறு வினாக்கள் கேட்கப் படவில்லை.
2) அலகு *3,13 மற்றும் 23* ஆகியவற்றில் ஒரு 1 மதிப்பெண் வினா கூட கேட்கப்படவில்லை.
3) BB வினாக்கள் அலகு 12 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 5BB+1CR)
4) CREATIVE வினாக்கள் அலகு 14 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 1BB+5CR)
5) அலகு 5, 10 லிருந்து 1 வினா கேட்கப்பட்டுள்ளது.
6) 6 அரசு பொதுத்தேர்வுகளில் 47 BB + 25 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
7) அதிக பட்சமாக செப் 2020 வினாத்தாளில் 6 BB + 6 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
8) அலகு 22 இல் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுமே CREATIVE வினாக்கள்.
9) creative வினாக்கள் புத்தக கோடிட்ட வினாக்கள் மற்றும் மேலும் அறிந்து கொள்வோம், மின்னோட்டவியல் பாடத்தில் இருந்து தீர்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
நன்றி
ப.லோகநாதன்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி,
கெட்டுஅள்ளி.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் (Sainik schools) அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு,
இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க👇👇👇 வேண்டும்.
கட்டண விவரம்:
இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும்.
இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை என்டிஏ வலைதளத்தில்👇👇👇
அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் அவர்களால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி ( NDA - National Defence Academy) அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்
அமராவதி சைனிக் பள்ளி என்பது இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஒன்று ஆகும். இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.
இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர்.
அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக 16 ஜூலை 1962 இல் தொடங்கப்பட்டது. இது 1975 வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி, உருவாக்கப்பட்டது. என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ). இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இந்தப் பள்ளியில் சேர ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6ஆம் வகுப்பில் சேர, 10இல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
இந்தப்பள்ளியில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும் பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
என்.டி.ஏ-வில் சேருவது பெரும்பாலான மாணவர்களின் லட்சியமாகும். அதனால் இப் பிரிவில் பணி செய்ய விரும்பும் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.
மூன்று படைகளுக்கும் ஒரே போட்டித் தேர்வின் மூலம் என்.டி.ஏ தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணல் மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இப்பள்ளியின் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்த முறையில் நடத்தப்படுகிறது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
அறிவியல் பாடம் ( 6 - 10 ) கற்றல் விளைவுகள் எண்களுடன்...
6 - 10th Std - Science - Learning Outcomes Number Chart - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
திருக்குறள்
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
விளக்கம்:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
பழமொழி :
Habit is a second nature
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.
2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொன்மொழி :
உழைப்பின் சக்தியே
உலகிலே உயர்ந்த சக்தி..
அதை வெற்றி கொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.
பொது அறிவு :
1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: பானு அத்தையா
2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்
விடை: ஜவகர்லால் நேரு
English words & meanings :
Additional Assistance - கூடுதல் உதவி,
Adventure Sports - சாகச விளையாட்டு
ஆரோக்ய வாழ்வு :
பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
நீதிக்கதை
ஒன்றென்று உணர்ந்தால் நன்று
ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.
நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இன்றைய செய்திகள் - 29.11.2023
*பராமரிப்பு காரணமாக கடற்கரை தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து.
* மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு.
* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாம் தேதி புயலாக மாறுகிறது.
* நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்; அண்ணாதுரை பேட்டி.
* முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
Today's Headlines
*Chennai Beach to Tambaram night train canceled from tomorrow due to maintenance.
* Government decision to relax norms for burial in cemeteries.
* Chance of heavy rain in 10 districts. The depression becomes a storm on 2nd December
* Establish an International Space Station on the Moon; Interview with Annadurai.
* The first choice of investors is Tamil Nadu, Chief Minister M.K. Stalin.
* Bumrah unfollowed by Mumbai Indians; Fans are happy with the news that he is going to join CSK
Prepared by
Covai women ICT_போதிமரம்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.
நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா தேர்வு அரையாண்டு தேர்விற்கு முன் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான கால அட்டவணை👇
One Mark Test Time Table - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் – உபரி பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
மதுரை வருவாய் மாவட்டத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் வளமையத்தில் காலியாக உள்ள வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்தில் மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பக் கடிதத்தினை சார்ந்த ஆசிரியர்களிடம் பெற்று 28.11.2023 அன்று மாலை 04.00 மணிக்குள் அனுப்பவேண்டும் . விருப்பமின்மை எனில் ' இன்மை ' அறிக்கையினை இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் சமர்ப்பித்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சவேரியார் பேராலய கோட்டாறு தூய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 ( திங்கட்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு
வளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி அவசியமாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவளர்ச்சி நலன் மேம்படுவதற்காக வளரிளம் பருவத்தினர் மனவளர்ச்சி நலன் என்ற மாணவர் நல்வாழ்வு இணைய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட கலை சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் மனவளர்ச்சி நலனை மேம்படுத்தி வாழ்வியல் திறன்களை வளர்ப்பதை இந்த இணைய முகப்பு நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த இணைய முகப்பு பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 79,723 டேப்லெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது. பொதுவாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற எண்ம சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்தமுறை வெளி நிறுவனங்களிடம் நேரடியாக டேப்லெட்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்த கையடக்கக் கணினியில் பாடக்குறிப்பேடுகள், எண்ணும், எழுத்தும் சாா்ந்த பயிற்சி கையேடுகள், காணொலிகள் உள்ளிட்ட கல்விசாா்அம்சங்கள் பதிவேற்றப்பட்டு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.
JEE Mains 2024: தேசிய தேர்வு முகமை இந்த வாரம் கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கான (JEE) முதன்மை தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் — http://jeemain.nta.ac.in/ இல் தொடங்கியது. இந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் உள்ளது.
இந்தநிலையில், குறைவான பாடத்திட்டத்தை படித்து அதிக மதிப்பெண் பெறும் ரகசியத்தை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 98 அத்தியாயங்கள் உள்ளன. இதில் வெறும் 32 அத்தியாயங்களை மட்டும் தெளிவாக படித்தால் 150+ அல்லது 96%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறலாம். நீங்கள் 150+ மதிப்பெண்களை எடுத்தால், திருச்சி, வாராங்கல் உள்ளிட்ட முன்னணி என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.
இயற்பியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்
Current Electricity – 6.94
Gravitation – 5.42
Magnetic Effects of Current – 4.86
Electrostatics – 4.72
Ray Optics – 4.58
Work Power Energy – 3.61
Semiconductors – 3.47
Thermodynamics – 3.47
Dual Nature of Matter – 3.47
Motion in Two Dimensions – 3.33
Electromagnetic Induction – 3.33
Motion in One Dimension – 3.19
வேதியியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்
Coordination Compounds – 7.36
General Organic Chemistry – 5.69
S Block Elements – 5.28
Chemical Bonding and Molecular Structure – 4.86
Solutions – 4.31
Thermodynamics (C) – 4.17
Structure of Atom – 4.03
P Block Elements (Group 15, 16, 17, 18) – 3.75
D and F Block Elements – 3.61
Amines – 3.47
Chemical Kinetics – 3.47
கணிதத்தில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்
Three Dimensional Geometry – 10.00
Binomial Theorem – 6.81
Sequences and Series – 6.25
Vector Algebra – 5.83
Permutation and Combination – 5.69
Functions – 5.56
Definite Integration – 4.72
Matrices – 4.17
Probability – 3.75
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update