பள்ளி காலை வழிபாட்ணு செயல்பாடுகள் - 06.02.2024

 

இந்திய அறவியற் கழகம்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விளக்கம்:

 ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.


பழமொழி :

It is the pace that kills.

வேகம் விவேகம் அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். --தலாய் லாமா

பொது அறிவு :

1. இந்திய அறிவயற் கழகம் அமைந்துள்ள நகரம்?

விடை: பெங்களூர்

2. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

English words & meanings :

 when an ant becomes a spy we call him/her - inform-ant-informant

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு கண்ட மருந்துகளைத் தடவத் தேவையே இல்லை. கோவைக்காயின் இலையை அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீதிக்கதை

 வலிமை மட்டும் போதாது

எருது ஓரிடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அது வழியாக நகர்வலம் வந்த எலிக்குஞ்சு ஒன்று, ஓடி வந்து எருதின் மீது விழுந்தது. இதனால் தூக்கம் கலைந்து பார்த்தது.

"டேய். எலிப் பயலே என் மீது விழுந்தா தூக்கத்தைக் கலைத்தாய், உன்னை என்ன செய்கின்றேன் பார்" என்றது.

பலசாலியான எருது முன்னால் பயந்தபடி நின்றது எலி. "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று எந்தத் தவறும் செய்யவில்லை" என வேண்டியது.

"அதெல்லாம் முடியாது! என் பலம் தெரியாமல் என்னுடன் நீ விளையாடி விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்", என மிரட்டியதும், பயந்து எலி அருகில் இருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதுவும், எலியை விடுவதாக இல்லை. தன் கூரிய கொம்புகளால், எலி வளையைக் குத்தி பெயர்த்து எடுத்தது.

எருதின் கோபம் அதிகமானது. எலி வளையை இடிக்க இடிக்க வளர்ந்து கொண்டே சென்றது.

எலி அதன் வளையை மிகவும் நீளமாக அமைத்து இருந்தது. அதனால் எருது, எலியைப் பிடிக்க முடியாமல் போனது.

வீரமாக மோதிப் பார்த்து விட்டு மிகவும் களைப்புடன் படுத்து விட்டது எருது. இந்த நேரத்தில் எலி வளையை விட்டு வெளியில் வந்து பார்த்தது.

எதிரில் எருது களைப்பால் படுத்திருந்ததைப் பார்த்தது. மீண்டும் எலி வந்து, எருதின் மீது ஏறி விளையாடியது. எருதுக்கு கோபம் அதிகமானது. கோபம் வந்து என்ன செய்ய, எலியைத் தான் அதனால் பிடிக்க முடியவில்லையே.

எருது முன்னால் தாவிக் குதித்து நின்றது எலி. "நான் தெரியாமல் செய்த தவறுக்கும். உன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நீ பெருந்தன்மையாக என்னை மன்னித்திருக்கலாம் அல்லவா.

உனக்கு எவ்வளவு தான் பலம் இருப்பினும் அவமானம் அடைந்தாயே! உடல் பலத்தால் மட்டும் யாரையும், வென்று விட முடியாது புரிந்து கொள்" என்றபடி எலி தாவிக் குதித்து வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதும் தன் தவறை உணர்ந்து வருந்தியது.


நீதி : எளியவரை எப்பொழுதும் வென்று விடலாம் என தவறாக நினைத்து விடக் கூடாது. உடல் வலிமையை விட மனவலிமையே வெற்றி பெறும்.

இன்றைய செய்திகள்

06.02.2024

*அரசியல் கட்சி பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு.

*ஜார்க்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி.

*பெண் விவசாயிகள் கருத்தரங்கு; 8ஆம் தேதி சின்னமனூர் வருகிறார் கவர்னர்.

*இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ், ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்; வானிலை ஆய்வு மையம்.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி.

Today's Headlines

*Prohibition of using children in political party campaigns;  Election Commission order.

 *Jharkhand Assembly- Sambhai Soren won the trust vote.

 *Women Farmers Seminar;   Governor is coming to Chinnamanur on  8th.

 *Varun Ghosh, of Indian origin, has been appointed as an Australian MP.

 *Dry weather likely to prevail in Tamil Nadu till February 11;  Meteorological Centre.

 *Second Test against England: Indian team got tremendous victory
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - T/M & E/M

  IMG_20220718_111704

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

February - 2024

Unit - 4

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - T/M. - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - E/M. - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆதிதிராவிட மாணவர்களுக்கு தனி கல்வி இணையதளம்

 

 

ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அனைத்து கல்வி உதவி திட்டத்தை ஒருங்கிணைத்து 14 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் தனியாக கல்வி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

IMG-20240202-WA0024


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு

 1193238

அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற பெயரில் இயங்கும் ஆய்வகங்களுக்கு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் (நடமாடும் அறிவியல் ஆய்வகம்) 2022 நவம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 13,210 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.


தற்போது 710 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு 2, 3-ம் பருவத்துக்கான அறிவியல், கணிதக் கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட வேண்டும்.


இதற்கான பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதியும் மாவட்ட வாரியாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. உபகரணங்களைக் கொள்முதல் செய்யும்போது அதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவித புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NMMS 2024 - SAT & MAT Original Question Paper

 .com/

NMMS 2024 EXAM Original Question Paper

NMMS 2024 - SAT Original Question Paper - Download here


NMMS 2024 - MAT Original Question Paper - Download here

Pre Matric / Post Matric - Scholarship 2023 - 2024 | Website Open Now

 PRE MATRIC /POST MATRIC 

IMG_20240202_061132

2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கை பெற்ற FRESH STUDENTS  SC/ST/SCA மாணவர்கள்  PRE MATRIC /POST MATRIC கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளம் 01.02.2024 முதல் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Press Release - Download here


ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சிரமமின்றி கல்வி பயில பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதில் , ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் " போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் " , " ப்ரிமெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் " , " மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் " , " உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம் " , " பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தலையாய திட்டங்களாகும் . 2023-2024 ஆம் கல்வியாண்டில் , மேற்காணும் திட்டங்களின் கீழ் தோராயமாக 14 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் பயன் அடைவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளியில் பழுதான கட்டடம்: பட்டியல் தயாரிக்க உத்தரவு

 ஒவ்வொரு ஆண்டும், அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி வழங்குவதோடு, கூடுதல் வகுப்பறை, கழிப்பிடம், சுற்றுச்சுவர் கட்ட மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.வரும், 2024 - 25ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதற்கான செலவினங்களை பட்டியலிட ஏதுவாக, தற்போது பள்ளிகளில் உள்ள பழுதான கட்டடங்கள், இடித்து அகற்றப்பட வேண்டியவை குறித்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் பட்டியலிட்டு, பள்ளிகல்வித்துறையின் செயலியில் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியர்கள் வழங்கிய விபரங்களை கொண்டு, இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் உறுதித்தன்மை, ஆயுட்காலம் குறித்து வல்லுநர் குழு ஆய்வு நடத்தப்படும். அதன் பின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய பணி குறித்து முடிவெடுக்கப்படும்.

 உறுதித்தன்மையுடன் கட்டடங்கள் இருந்தால், தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க ஒப்புதல் வழங்கப்படும், என்றனர்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Vocational Teacher Pay Order GO Published.

 

IMG_20240202_135043


49 தொழிற்கல்வி ஆசிரியர் ( கணினி அறிவியல்) பணியிடங்களுக்கு 31.12.2025 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!


Vocational Teacher Pay Order GO - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்த பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்.

 

IMG_20240202_142905

தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளாகவும் Footwear ) 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளாகவும் Shoes ) வழங்கப்பட்டு வருகின்றன.


 இவ்வாறு வழங்கப்படும் காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்த பார்வையில் காணும் அரசுச் செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . பள்ளி மாணவர்களின் கால் அளவுகளை எடுப்பதற்காக ITK தன்னார்வலர்களை உட்படுத்தி அளவுகளை துல்லியமாக எடுத்து அதன் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்டப் பொருள்களான காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி ) , வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



 Footwear& Shoes Entry DSE & DEE Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Unit - 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - T/M. - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 4 ) February 1st Week Lesson Plan - E/M. - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நாளை (03.02.2024, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - எந்த மாவட்டங்களுக்கு?

 நாளை (03.02.2024, சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு  முழு வேலைநாளாகும்.

DEO (Primary)




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

01.01.2024 முதல் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்கிறது!

 


1002804998

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும்.


கடந்த டிசம்பர் 2023 வரை, விலைவாசி உயர்வின் அடிப்படையிலான AICPIN குறியீடு நேற்று (31.01.2024) வெளியிடப்பட்டது. இதன்படி கணக்கீடு மேற்கொள்ளப் பட்டதன் படி, அகவிலைப் படி 4% உயர்ந்து, 46% லிருந்து 50% ஆக அகவிலைப் படி உயர்கிறது.

இந்த கருத்துருக்கள், பிப்ரவரி இறுதியில், ஒன்றிய நிதி அமைச்சகம் மூலம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப் படும்.


ஒன்றிய அமைச்சரவை, மார்ச் இரண்டாம் வாரம், இந்த அகவிலைப் படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கி, மார்ச் இறுதியில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்.


ஜனவரி மாதம் முதல், மார்ச் மாதம் வரை 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல், ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும்.


இது வழக்கமான நடைமுறை என்பதால், தேர்தல் ஆணையம் இந்த அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கும்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?


2024 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு, 01.01.2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்கப் படும்.


எனவே ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 To 5thStd - EE TERM III - ASSESSMENT SCHEDULE

 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை – TermIll

EE TERM-3 ASSESSMENT SCHEDULE👇

Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க நடவடிக்கை

 


1191995

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 26 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 2,100 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் 1,700 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 வகுப்பில் 1,600 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 5,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன. பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற, மேற்கண்ட 3 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இம்மாதத்தில் ( பிப்ரவரி ) இருந்து சிறப்பு வகுப்புகள் மாநகராட்சி நிர்வாகத்தின் வரும் சார்பில் நடத்தப்பட உள்ளன.


பொதுவாக, இச்சிறப்பு வகுப்புகள் மாலை பள்ளி முடிந்த பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் மேற்கண்ட மூன்று வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படக் கூடாது, பசி ஏற்படுவதால் படிப்பின் மீது இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் சமயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பாண்டுக்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்து கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் கூறும்போது, ‘‘கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வகையில், முக்கிய வினாக்கள் குறித்த வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுத்தேர்வு நெருங்குவதைத் தொடர்ந்து இவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.


மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படாமல் இருக்க மாலை நேர சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சிறு தானிய வகைகள், சுண்டல், பச்சை பயிறு போன்ற உடலுக்கு சத்து அளிக்கக் கூடிய சிற்றுண்டி உணவுகள், திரவ வகைகள் வழங்கப்படும். பொதுத் தேர்வு நடக்கும் வரை, தினசரி நடத்தப்படும் மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது இந்த சிற்றுண்டி வழங்கப்படும்,’’ என்றார்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

 images(23)

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்


தமிழகத்தில் கரோனா காலக்கட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.


இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டன.


தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 நவம்பரில் ரூ.50 கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ.114.17 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ.52.85 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான மையங்கள் 1.8 லட்சத்தில் இருந்து 1.25 லட்சமாக குறைக்கப்பட உள்ளது. அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை கவனமாக ஆராய்ந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடப்படுகிறது.


மேலும், கற்றல் இழப்புகளை சரிசெய்ய கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்ததன் காரணமாக 2024-25-ல் இதற்கான மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Budget 2024 - வருமான வரி - மாற்றமில்லை

 IMG-20240201-WA0009

Budget 2024 -  வருமான வரி - மாற்றமில்லை

* கடந்த ஆண்டு அறிமுகமான மேற்கண்ட புதிய திட்டம் மற்றும் பழைய வரிவிதிப்பில் மாற்றமில்லை 


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News