ENNUM EZHUTHUM NOTES OF LESSON RECORD

 

ENNUM EZHUTHUM NOTES OF LESSON RECORD



CLASS- 4 & 5 - EE-LESSON PLAN EMPTY FORMAT &FA(A) & LEARNING OUTCOMES - ALL SUBJECTS - 107 PAGES - PDF


கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் - SCERT Proceedings

 

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் சார்பு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 002/இஇ-சிதி/ பிசி/ 2023, நாள்: 22-06-2023


SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் : வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனரிடம் அளித்துள்ள மனு:பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம், 2019 - 20ல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. 


அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருகிறது.எனவே, மாணவர்கள் நலன் கருதி, தியரியில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண் வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவர்களுக்கு, 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. 

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து, 7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறிவியல் வினாத்தாளில் அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண்கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை, இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


RTE - இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்காக மாநில அரசு செய்யும் செலவினம், வகுப்பு வாரியாக அரசிதழில் வெளியீடு!

 




இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்காக மாநில அரசு செய்யும் செலவினம், வகுப்பு வாரியாக அரசிதழில் வெளியீடு!

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply

 

மசூதியில் தொழுகைக்கு செல்லக்கூடிய முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை புத்தகம் பத்தி 1 - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு | தெரிவிக்கப்படுகிறது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


6,7,8-ஆம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகமா?


எண்ணும் எழுத்தும் திட்டம் , ஒரு விளம்பரத்திட்டம் . 4 , 5 வகுப்புகளுக்கே இந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கக் கூடாது. 6 , 7 , 8 வகுப்புகளுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிடுகிறார்களாம் ! CRC க்கு பதில் CPD என்கிறார்கள்.


 மாணவர்களின் கல்வி நலனை காக்க வீதிக்கு வந்து போராடினால் தான் கைவிடுவார்கள் . என்றால் , மக்கள் - அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.


 சுயநிதி பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்லத் திட்டமிட்டு செயல்படுவோரை அடையாளம் காட்டுவோம். 


வா . அண்ணாமலை , தேசியச் செயலாளர்- ஐபெட்டோ , மூத்தத் தலைவர் - தமிழக ஆசிரியர் கூட்டணி .


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


தலைமையாசிரியர்கள் TNSED parent app-ல் தன்னார்வலர்கள் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

 தலைமையாசிரியர்கள் TNSED parent app-ல் தன்னார்வலர்கள் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பதை குறித்த வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்

 

23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்:


*பள்ளி செல்லா குழந்தைகளை PARENT TNSED APP மூலமாக தெரிந்து கொண்டு, அந்த மாணவர்களை சேர்க்க அவர்களின் பெற்றோர் மற்றும் அந்த மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்க்க வேண்டும்


 *10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து அந்த மாணவர்களின் படிப்பை தொடரவும், அல்லது ITI போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த படிப்பை அரசு தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்


*சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு விருது வருகின்ற சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை SMC உறுப்பினர்களிடம் தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டை ஊக்கவிக்கவேண்டும்


 *5,8,10 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள்  அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவேண்டும்


*10,11,12 போன்ற வகுப்புகளை சேர்ந்த துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்


*பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்களா? என்பதை உறுதி செய்தல்; சேராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல்


 *நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், மறுதேர்விற்கு விண்ணப்பித்த தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர்க்கல்விக்கு செல்லாத மாணவர்கள் விவரங்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தல்


 *1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருவதை உறுதி செய்தல்


 *மேலும் பள்ளியின் தேவை சேர்ந்து திட்டமிடுதல்


 *முந்தைய தீர்மானத்தின் தற்போதைய நிலை பற்றி விவரித்தல்


*பள்ளியின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை விவாதித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் எடுத்து நிறைவேற்றுதல்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching " 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பயிற்சியில் அரசு நடத்துதல் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு . - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE Proceedings - Download here...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள்!


ள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 2706.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக சுட்டிட கூட்ட அரங்கில் சாலை D மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) toneand ascondi அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் அலுவலர்கள் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

All CEO's Meeting Agenda June 2023 - Download here 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED PARENTS APP NEW UPDATE VERSION - 0.10

 

TNSED PARENTS APP NEW UPDATE VERSION - Version 0.10 / 22.06.2023


What's new

CSR MODULE FEATURE ADDITION AND PDF DOWNLOAD FEATURE ADDITION ADDED.BUT FIXING & PERFORMANCE IMPROVEMENTS


TNSED PARENTS APP NEW VERSION 0.10 UPDATE LINK

👇👇👇👇👇

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News




School Morning Prayer Activities - 23.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.23


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாத சொற்களை சொல்ல கூடாது.

பழமொழி :
A good reputation is a fair estate

நற்குணமே சிறந்த சொத்து.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம், இழந்த அறிவை படிப்பால் திரும்பப் பெறலாம், இழந்த ஆரோக்கியத்தை பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம், ஆனால் இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான். --சாமுவேல் ஸ்மைல்ஸ்


பொது அறிவு :

1. நிலவில் முதன் முதலில் இறங்கியவர் யார்?

விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்

2. எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார்?

விடை: எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே


English words & meanings :

 Disease –sickness. நோய். 

Entrance –a passage or gate to go inside a place. வாசல்


ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள். முறையான பயிற்சி அவசியம்


ஜூன் 23 இன்று

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்



கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


நீதிக்கதை

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு  அரசு மருத்துவமனையில் 23 நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவரைக்காண அவருடைய குடும்பத்தினர் யாருமே வராத நிலையில் ஒரு புறா மட்டும் தினமும் வந்து அந்த முதியவர் சிகிச்சையிலிருந்த ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்ததாம். 



தொடர்ந்து ஓரிறு நாட்கள் இதைக்கவனித்த  நர்ஸ் பெண்மணி புறா வந்த நேரம் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விட்டாராம். அதற்கெனவே காத்திருந்ததைப்போல உடனே அந்தப்புறா உள்ளே வந்து இந்த முதியவரின் மேல் சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு பறந்து போய்விட்டதாம். அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில்  அந்தப் புறா வந்து ஜன்னலோரம் அமர்வதும் நர்ஸ்கள் ஜன்னலைத் திறந்து விடுவதும் சில நிமிடங்கள் அந்த முதியவரின் மேல் இருந்துவிட்டுப் புறா பறந்து செல்வதும் வழக்கமாகியிருந்ததாம். 



இந்த விசித்திரமான நடைமுறையைக் கேள்விப்பட்ட  தலைமை மருத்துவர் அந்த முதியவரின் பின்புலத்தை அறிந்துவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியரும் இந்த முதியவர் தங்கியிருந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாமல் தனிமையில் வாழ்ந்துவந்த அந்த முதியவர் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அங்கு சுற்றித்திரியும் புறாக்கூட்டத்திற்கு உணவும் தண்ணீரும் வைத்து வந்தவராம். அந்தக் கூட்டத்துப் புறாக்களில் ஒன்றுதான் தன் எஜமானனைத் தேடி தினமும் மருத்துவமனைக்கே வந்து சென்றுள்ளது.

நீதி: அவரவர் செய்த செயல்களின் பலனை ( நன்மையோ & தீமையோ) அனுபவிக்காமல் யாருமே இந்தப் பூமியை விட்டுப் போய்விட முடியாது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா…


இன்றைய செய்திகள் - 23.06. 2023

*அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள், கர்நாடக சந்தனக் கட்டை, பஞ்சாப் நெய், உத்தரகாண்ட் பாஸ்மதி அரிசி, மகாராஷ்டிரா வெல்லம் ஆகியவை வழங்கினார்.

*இந்திய விமானப்படைக்கு உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின்கள் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

*சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழை.

*பேனா நினைவு சின்னம் அமைக்க இறுதி அனுமதி வழங்கியது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம்.

*பூரன்-ஹோப் சதம் நேபாளம் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 339 ரன்கள் குவிப்பு.

*புதிய சாதனை படைத்த ரொனால்டோவுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்.

Today's Headlines

* Prime Minister Modi gave a historic speech in the US Parliament yesterday.  He provided white sesame brought from Tamil Nadu.Karnataka sandalwood, Punjab ghee, Uttarakhand basmati rice and Maharashtra jaggery 

 *A deal was signed with an American firm to indigenously manufacture fighter engines for the Indian Air Force.

 *Thunderstorm in Chennai and surrounding districts.

 * Coastal Regulatory Authority of the Central Government has given final approval for setting up Pena Memorial.

 * Pooran-Hope strike century. West Indies piled up 339 runs against Nepal.

 *Guinness Record certificate for Ronaldo who set a new record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6th Study Materials - Term 1

 6th - Term 1 - Guide - All Subjects - T/M - Download Here


6th - Term 1 - Guide - Science - T/M - Download Here

6th - Term 1 - Guide - Science - E/M - Download Here



6th - Term 1 - Tamil - Download Here

6th - Term 1,2,3 - Tamil Guide Combined - Download Here

6th - Term 1 - Maths - Term 1 - Mind Maps - Download Here

6th - Term 1 - Maths - Worksheets - Download Here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


ஜூன் மாத R.H விடுப்பு....

 

 இஸ்லாம் காலண்டரில் ஜுல் ஹேஜ் மாதத்தில் 9வது நாள் தான் அரபா . எனவே R.H விடுப்பு 28.6.23 புதன்கிழமை..


எனவே 26.6.2 3 திங்கட்கிழமை R.H இல்லை

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

 பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.


இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT New Proceedings

 


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ( Teacher Professional Development ) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி 19.06.2023 அன்று நடத்தப்பட்டது.


 இரண்டாம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி 21.06.2023 மற்றும் 22.06.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. பெறும் . பார்வை 3 இல் காணும் செயல்முறைகளின்படி 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 24.06.2023 அன்று குறு / வட்டார வளமைய கூட்டம் நடைபெறவுள்ளதால் , அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 825 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

 பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 825 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

SSLC Retotal List - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி அறிவிப்பு

 

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டுவருகிறது.

சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது , இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது.

 இப்பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.


State Level Training date & Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கும் - உயர்கல்வித்துறை

 

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கும்


கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 30 வரை நடைபெறும் : உயர்கல்வித்துறை.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

 சென்னை பல்கலையில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

+1 மறுமதிப்பீட்டில் 236 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

 +1 மறுமதிப்பீட்டில் 236 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம் செய்து தேர்வுத்துறை பட்டியல் வெளியீடு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BEO - வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு

 பள்ளிக்கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி பணியில், 33 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூன் 6ல் ஆன்லைன் பதிவு துவங்கியது.


ஜூலை 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, பொது பிரிவினருக்கு, 40ல் இருந்து, 42 ஆகவும்: மாற்று திறனாளிகளுக்கு, 50ல் இருந்து, 52 ஆகவும்; மற்ற பிரிவினருக்கு, 45ல் இருந்து, 47 ஆகவும், வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED SCHOOLS APP HEALTH & WELL- BEING MODULE UPDATE -2023 ( Video )

 TNSED SCHOOLS APP HEALTH & WELL- BEING MODULE UPDATE -2023


🌺 வகுப்பாசிரியர்கள்  தங்கள் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் பிற வகுப்பில் HEALTH SCREENING இதுவரை செய்யாத மாணவர்களுக்கும் UPDATE செய்ய வேண்டும்


🌺 மாணவர்களின் கண் பரிசோதனை

🌺 உடல் அளவீடுகள்

🌺 சுகாதாரப் பரிசோதனை   என்ற மூன்று தலைப்புகளில் கேள்விகள் கேட்கபட்டுள்ளன


அதனை UPDATE செய்யும் வழிமுறை👇👇👇


https://youtu.be/0OuMJStd9_Q


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News