School Morning Prayer Activities - 30.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.


பழமொழி :
  A little stream will run a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்


பொது அறிவு :

1. மிகப் பெரிய மலர் எது? 

விடை: ரஃப்லேசியா அர்னால்டி 

2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 

விடை: டங்ஸ்டன்


English words & meanings :

 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை


ஆரோக்ய வாழ்வு :

பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது


ஜூன் 30 இன்று

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.


நீதிக்கதை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"

காற்றை கண்டதும்...

'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 

''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.

சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.


நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!


இன்றைய செய்திகள் - 30.06. 2023

*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.

*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.

*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  

*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.

*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.

*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.

Today's Headlines

* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.

 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.

 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.

 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.

 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.

 *Steve Smith's century:
 Australia scored 416 runs in the first innings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

TNSED PARENTS APP NEW UPDATE VERSION Version 0.0.11 - 27.6.23

 


TNSED PARENTS APP NEW UPDATE VERSION Version 0.0.11 - 27.6.23

What's new

Displaying of to be admitted and 10th absence list


TNSED PARENTS APP NEW VERSION 0.0.11 UPDATE LINK


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 புதிய தலைமுறை என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் , " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சியினை வழங்கி வருவதாகவும் , மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளைக் கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அறிமுகப்படுத்தி மேலும் , தமிழகத்தில் உள்ள மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற நாளைய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு அறிவிக்கின்ற உன்னத மேடை " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சி , இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களும் பங்கேற்க உரிய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


 எனவே , மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் பங்கு பெற தேவையான ஒத்துழைப்பினை தலைமை ஆசிரியர் வாயிலாக அளித்து உதவிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Unit To Unit Transfer Counselling Instructions - Dir Proceedings

 


ஆசிரியருக்கான பணி மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் வேறு துறைக்கு மாறுதல் கோரும் ஆசிரியர்கள்  EMIS  வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுரை.


Unit trsfr counselling instructions - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 3 Lesson Plan

 

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

June 2023


Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 3 Lesson Plan - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE|எண்ணும் ,எழுத்தும் ENNAI SUTRI|என்னை சுற்றி MAT| TERM 1|STD 1,2,3|வகுப்பு 1,2,3|KALVI TV|

EE|எண்ணும் ,எழுத்தும் ENNAI SUTRI|என்னை சுற்றி MAT| TERM 1|STD 1,2,3|வகுப்பு 1,2,3|KALVI TV| 

வாழ்க்கை தொடர்புடைய செயல்கள் மாணவர்களின் புரிதல் மேம்பாடடைய ஆசிரியரின் விளையாட்டு முறை கற்பித்தல், மாணவர்களே புரிந்து கற்றலுக்கு வழிகாட்டுகிறது என்பதனை ஆசிரியர் செயல்பாட்டு கல்வியாக தருகிறார்.





Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE| ENG T1 MOD 2 |STD 1,2,3|kalvi tv|

 

EE| ENG T1 MOD 2 |STD 1,2,3|kalvi tv|

In this activity students can learn the names of house hold things.






Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE| எண்ணும் ,எழுத்தும்|IENAI SEARPOM |இணை சேர்ப்போம் | வகுப்பு 1,2,3|STD 1,2,3|KALVI TV.|

 EE| எண்ணும் ,எழுத்தும்|IENAI SEARPOM |இணை சேர்ப்போம் | வகுப்பு 1,2,3|STD 1,2,3|KALVI TV.|

மாணவர் உற்றுக் கவனித்தலை மேம்படுத்த சைகைகள், படங்கள் வழியாக செயல்பாடுகள் வழங்கி ஆர்வத்தினை தூண்டுதல். சிக்கல்களுக்கு மாணவர்களே தீர்வு காண வைத்தல், ஆராய்வு ஊக்கத்தினை மேம்படுத்துதல் பற்றி ஆசிரியர் தெளிவாக விவரிக்கிறார்




EE|VADIVANGALAIYUM URUVANGALAIYUM ARITHAL|எண்ணும் எழுத்தும்|MAT|TERM1|STD1,2,3|வகுப்பு1,2,3|KALVITV|

 EE|VADIVANGALAIYUM URUVANGALAIYUM ARITHAL|எண்ணும் எழுத்தும்|MAT|TERM1|STD1,2,3|வகுப்பு1,2,3|KALVITV|

வடிவங்களையும்,உருவங்களையும் அறிவோம் பாடல்வழியாக பாடத்தலைப்பினை மாணவர்களே உணர்ந்து கொள்ளசெய்தல்.ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் வடிவங்களை மாணவர்களே வரைய தூண்டுதல்.மாணவர்களை அதைப்பற்றி விரிவாகஎடுத்துக்கூற வைத்து பாராட்டும், பரிசும் வழங்கி ஊக்குவித்தல். மாணவர்களுக்கு கவனச்சிதைவு ஏற்படாதவண்ணம் கற்றலை சிறப்புற அமைப்பது பற்றிஆசிரியர் விவரிக்கிறார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

'நீட்’ தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.


தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.


அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.


இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (ஜூன் 28) தொடங்குகிறது. இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று தெரிவித்துள்ளது. நீட் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.


நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கு 7 பேர் போட்டியில் உள்ளனர்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்களை நல்வழிப்படுத்த பள்ளிகளில் போதை விழிப்புணர்வு மன்றம்: பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அறிவுறுத்தல்

 


தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான மாதாந்திர அலுவல் ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:


முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் முறையாக பதில் அளிப்பது இல்லை என்று பல ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். அதை சரிசெய்ய வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாவட்டஅளவிலேயே முதன்மை கல்வி அலுவலர்கள் தீர்க்க வேண்டும்.


உள்ளூர் பண்டிகைக்கு ஏற்ப, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்கள் பரிந்துரைத்தால், மாவட்ட கல்வி அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட - முதன்மை கல்வி அலுவலர்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். கோடை விடுமுறையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்.


தமிழ் மொழி திறனறிவு தேர்வில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடனே நிதியுதவி வழங்க வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இலவச கட்டாய கல்வி திட்டம்குறித்த பிரச்சினைகளுக்கு உடனேதீர்வு காண வேண்டும். மலைப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான போக்குவரத்து, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.


விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்குவழங்கப்படும் காலை சிற்றுண்டிதரமாக உள்ளதா என ஆய்வுசெய்வதோடு, பள்ளிகளில் தண்ணீர், கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் , மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் முடித்துவைக்க வேண்டும். மாதந்தோறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பள்ளிகளில் போதை விழிப்புணர்வு மன்றம் அமைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒருசில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆங்கில பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


கருணை அடிப்படையிலான பணிநியமன மனுக்களை தாமதமின்றி பரிசீலிக்க வேண்டும். பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிர்வாக பணியில் சிறந்து விளங்கிய பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளி மாணவர் பல் பாதுகாப்பு திட்டம்: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு

 


பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழக சுகாதாரத் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் ‘புன்னகை' எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகிறது.


இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த விவகாரம் சார்ந்து சுகாதாரத் துறையின் மாவட்ட அலுவலர்கள் அணுகும்போது சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து புன்னகை திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பல் பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் மாணவர்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10 வரை அவகாசம்

 

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.


இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்ட நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

ஆங்கிலச் சொற்களை மாணவர்கள் சரியாக உச்சரிக்கும் வகையில் உரக்கப் படிக்கச் சொல்லி, ஆசிரியர்கள் கற்றுத் தர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

சென்னையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அதிகாரிகள் பங்கேற்று பேசினர்.

பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: சென்னையில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து 20 மணி நேரம் பேசினோம். இரு தரப்பிலும் கருத்துகளை பறிமாறி கொண்டோம். சங்கங்கள் சார்பில் சுமார் 147 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.


 டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். போட்டித் தேர்வுகளில் மாணவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள பிரச்னைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். 38 மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை, கற்றல் கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.


கற்றல் பணிகளில் தொய்வு இ ருக்கக் கூடாது. மாணவர்களுக்கு கற்றல் திறன் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர்களை உரக்க படிக்க சொல்ல வேண்டும். 


சில பள்ளிகளில் ஆங்கிலச் சொற்களை படிக்கத் தெரியாமல் மாணவர்கள் திணறும் நிலை இருக்கிறது. அதை போக்க அவர்களை உரக்கப் படிக்க சொல்லித் தர வேண்டும். சரியாக உச்சரிக்க கற்று தர வேண்டும். கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்றலில் சிறப்பாக உள்ள மாணவர்களையும் பாராட்ட வேண்டும். 


மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவிக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அடுத்த ஆண்டில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு தான் கல்வியில் சிறப்பாக உள்ளது என்று பாராட்டுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் துறைக்கு பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அங்கன்வாடி பணியாளர் காலி பணியிடங்களில் 10 ஆண்டு பணியில் இருந்த அங்கன்வாடி உதவியாளர்கள் நியமனம்: வயது வரம்பை தளர்த்தி அரசு உத்தரவு

 அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கான வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசு சார்பில் கடந்த 1975ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்தின் கீழ் அடித்தட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு, ஆரம்பகால கல்வி கிடைப்பதை இம்மையங்கள் உறுதி செய்கின்றன. இம்மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் 5 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஒரு பணியாளரே பல மையங்களை கவனிக்க வேண்டியுள்ளதாலும் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.


அதன் அடிப்படையில் தற்போது அரசு அங்கன்வாடி உதவியாளர்களாக 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை அங்கன்வாடி காலி பணியாளர் இடங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. அரசின் விதிமுறைப்படி அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கான நியமனத்துக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது நிறைவு செய்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு 25 வயது நிறைவு செய்தும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


அதேநேரத்தில் அங்கன்வாடி பணியாளர் காலியிடங்களில் 25 சதவீதத்தை 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களை கொண்டு நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 20 வயதில் பணியில் சேர்ந்த அங்கன்வாடி உதவியாளர் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பெற்றிருப்பின் அவர் 30 வயதை எட்டியிருப்பார். ஆனால் அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு 35 வயது என்று குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 இந்த இடர்பாட்டை களையும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் உதவியாளர்களுக்கு 10 ஆண்டு பணி நிறைவு செய்திருந்தாலே போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த உத்தரவில் வயது வரம்பிலும் தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 28.06.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.


பழமொழி :
A little learning is a dangerous thing

அரை குறை படிப்பு ஆபத்தானது.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.


பொது அறிவு :

1. ”வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?

விடை: தாய்லாந்து

2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?


விடை: சஹாரா பாலைவனம்


English words & meanings :

 fragrance – a pleasant, sweet smell. noun. நறுமணம். பெயர்ச் சொல். gather - come together, bring together. noun. ஒன்றுச் சேர். திரட்டு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.


ஜூன் 28 இன்று

பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.


நீதிக்கதை

நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது



ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே..என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...
இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று


புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.06. 2023

*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 

*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 

*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.

*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Today's Headlines

* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.

 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.

 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.

 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.

 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

 

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்....

 6th , 7th , 8th Std Tamil Teachers Workshop - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News