EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...




தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...


1.RTE WEB,TRANSFER COUNSELING WEB & I.T.K APP வழக்கம் போல செயல்படும்
2.UNIT TRANSFER APPLICATION பிற்பகல் 1.00மணி வரை பதிவு செய்யலாம்.
3.CEO Loginல் இன்று இரவு 10.00மணி வரை NOC பதிவேற்றம் செய்யலாம்
4.School & staff login ஐ கலந்தாய்வுப் பணிக்கு மட்டும் இன்று பிற்பகல் 1.00மணி வரை பயன்படுத்தலாம்.மற்ற பணிகளை கட்டாயம் செய்யக்கூடாது .
5.ALL OFFICIALS login இன்று இரவு 10.00மணி வரை மட்டுமே செயல்படும்.
6.அனைத்து செயலிகள்(Apps), மாணவர்களின் Quiz portal, நான் முதல்வன் Login,E-content ,question creation உள்ளிட்ட தளங்கள்  அனைத்தும் இன்று காலை 9.00 மணி முதல் 30.4.2022 இரவு 9.00மணி வரை செயல்படாது .

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், 'தமிழகத்தில் விளையாட்டு பாடத் தேர்வில் செய்முறை, எழுத்து முறை என தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது' என்று கூறியுள்ளது.

Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail

Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail



தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம்*

*இளைஞர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

*சென்னை, ஏப். 23: அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.

*இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்ததிட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளை ஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 'தமிழ்நாடு முதல்வரின்* *fellowship என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு* *fellowship கல்வி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கெனவே இல் லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல் வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' திட்டத்தில் இணைந்து பணியாற்றஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியி டத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப் பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

*மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்கள் உள்ளன.

*அதேபோன்று fellows என்று புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர் கள் மாதம்தோறும் ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக் கப்படவுள்ளனர்.

*இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக் காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

 இது தொடர்பான கூடுதல் தகவல்கள்.. & Apply Link

Cick here to download- pdf  

Click here to Apply


EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm

 EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm




ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்



முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் 2022-ம் ஆண்டுக்கான இளம் தொழில்முனைவோர் மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:


திமுக அரசு இளைஞர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவே ஒற்றைச்சாளர முறை உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன் பலனாக தமிழகம் இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.



தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே, இளைஞர்கள் காப்புரிமை பெறுவது குறித்து தெரிந்து கொள்வது அவசியம். மேலும், முதல் தலைமுறை தொழில்முனைவோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


அண்மைக் காலமாக பள்ளி ஆசிரியர்களிடம், மாணவர்கள் தவறான முறைகளில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனர். எனவே, மூர்க்கமாகச் செயல்படும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும்.


மேலும், கரோனா காலத்துக்குப் பின்பு பள்ளி மாணவர்களிடம் மனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யும் வகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோன்ற போலிச் சான்றிதழ் தயாரித்து, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ள வட மாநிலத்தவர் கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல, அரசு அலுவலகங்களில் இருந்து அதிக அளவிலான சான்றுகள் சரிபார்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்


SMC Meeting - EMIS - இல் பதிவேற்றம் செய்தல் - SPD Proceedings

SMC Meeting - EMIS - இல் பதிவேற்றம் செய்தல் - SPD Proceedings



Practical Exam Instructions | செய்முறைத் தேர்வு விதிமுறைகள்





அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!!

அரசுபள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெலோஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த புதியதிட்டம் செயல்படுத்தப்படுகிறது

மாவட்டத்திற்கு ஒரு Senior fellow என்கிற பணியிடத்துக்கு 5 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு




தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் இருந்து நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுக்கான பணிகல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமாக செய்முறைத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 200 மதிப்பெண்களை கொண்ட ஒரு பாடத்தின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களும் 50 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. 

எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். மதிப்பெண்கள் குறைந்துள்ள காரணத்தினாலும், கூடுதல் நேரம் இருக்கின்ற காரணத்தினாலும், தேர்வுகளை விரைவாக முடிப்பதற்காகவும் இந்த தேர்வுகள் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரம் குறைப்பினால், மாணவர்களுக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 27






இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 27 Version Available 

What's new • 

1. Added OoSC module 

2. Added Teaching Learning Materials module 

3. Updated Resource Materials module

App update Link - Download here...



SMC Selected Members Model Certificate

பள்ளி மேலாண்மைக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சான்றிதழ் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் பயன்படுத்திக் கொள்ளலாம்...

நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை..

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்.


நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும்  நாளை விடுமுறை..

 எப்போதும் போல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.

தொடக்கப் பள்ளிகள் செயல்பட வேண்டும். நாளை பள்ளி மேலாண்மைக்குழு என்பதால் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர அவசியம் இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் வர வேண்டும்.


6,7,8 -Social Science Model Questions -T/M & E/M pdf

Unit To Unit Transfer - Apply Option Now Available in EMIS Website

 அலகு விட்டு அலகு மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வசதி தற்போது EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!

மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!! TEACHERS INDIVIDUAL LOGIN -ID-

1 - 5th Standard - 3rd Term Model Question Paper

Latest 1st to 5th Study Materials - Tamil Medium ( Based on New Syllabus )

Latest 1st to 5th Study Materials

  • 1 - 5th Standard - 3rd Term Question Paper Model |  TNPTF - Download Here

SMC மறு கட்டமைப்புக்கு தேவையான படிவங்கள் அனைத்தும் ஒரே கோப்பாக...

பள்ளி மேலாண்மைக் குழு  ( SMC ) மறு கட்டமைப்புக்கு ( 2022 - 2023 ) தேவையான படிவங்கள் அனைத்தும் ஒரே கோப்பாக...

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு.


அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் - சட்டப்பேரவையில் இன்றைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அறிவிப்பு!

Housing Loan - TN Government Press News - Download here ( pdf) 

மூன்றாம் பருவத் தொகுத்தறி வினாத்தாள்கள் SA 60 MARKS - வகுப்பு 1 முதல் 5 வகுப்பு




1St Std SA QUESTIONS T/M - Download Here

RTE 2022_2023 Admission - Dir Circular





2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில  முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!


RTE 2022_2023 Admission Circular.pdf - Download here

Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published

 மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம்  சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.

Mutual & Union Transfer - Revised Counselling Schedule 



சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? பல்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என  தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப்பணியோடு சமூக அக்கறையுடன் கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியது:

ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான்.  மாணவா்களுக்கு ஆசிரியா்கள் இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனா். சமுதாயம் அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல்வா் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகவும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாகவும் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

நீட் தோ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம். அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 148 கோரிக்கைகளை பள்ளி கல்வித் துறையிடம் முன்மொழிந்துள்ளனா். இதில் 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக உள்ளன. முக்கியமாக அரசாணை 101, 108 ஆகியவற்றை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். அதை முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்; பரிசீலனையில் உள்ளது.

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

EMIS- APP - & WEBSITE NOW WORKING | EMIS APP மற்றும் இணையதளம் இன்று வேலை செய்கிறது

EMIS இணைய பயன்பாடு மற்றும் மொபைல் ஆப்ஸ் சேவைகள் ஏப்ரல் 13 முதல் 17 ஏப்ரல் இரவு 9 மணி வரை வேலை செய்யத நிலையில் இன்று வேலைசெய்ய தொடங்கியது.