6 - 12 தமிழ் முதல் பருவத்தேர்வு - ஆகஸ்ட் 2022 மாதிரி வினாத்தாள்கள்

 6th Std தமிழ் : Click here

7th Std தமிழ் : Click here

8th Std தமிழ் : Click here

9th Std தமிழ் : Click here

10th Std தமிழ்: Click here

11th Std தமிழ்: Click here

12th Std தமிழ்: Click here

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் 6 பேர் பரிந்துரை

 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதிபெற்ற நபர்களை விதிகளின்படி அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.


அதன்படி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிகல்வித்துறையின் மாநில தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு:


ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி (தலைமை ஆசிரியை, திருப்பூர் ஜெய்வாய்பாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ராஜலட்சுமி ராமசந்திரன் (தலைமை ஆசிரியை, குண்டூர் சுப்பையா பிள்ளைதி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஏ.முருகன் (பட்டதாரி ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.ஜெரால்ட் ஆரோக்கியராஜ் (பட்டதாரி ஆசிரியர், கரூர் மாவட்டம், பில்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி), கே.பிரதீப் (பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கே.ராமச்சந்திரன் (இடைநிலை ஆசிரியர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான மதிப்பீடு நேர்காணல் தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 1,030 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவை ஜூலை 4-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. இது தேர்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 2022 - 2023 | தேர்வுத்துறை அறிவிப்பு

 

பள்ளி மாணவ , மாணவியர்களின் அறிவியல் , கணிதம் , சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.


இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.


இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.


2022-2023 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது 


இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . எனவே , மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 09.09.2022 .


TTSE 2022 - Press Release - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news



Click here to Join WhatsApp group for Daily kalvi news

EMIS - ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய புதிய வசதி!

 

The School Education Department has rolled out a new module. This module has the provision to enter the Annual Exam, Half Yearly Exam, Quarterly Exam marks of Class 6 to 9 students. Class Teachers of 8th standard  are requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks of the 8th class students as priority.

TN SED


பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது.  6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது.  8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

_TN SED.

பிளஸ் 2 வரை அலகு தேர்வை பொதுத்தேர்வு போல் நடத்த உத்தரவு

 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பருவ தேர்வுக்கு முந்தைய அலகு தேர்வை, பொது தேர்வு போல நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வி பாட திட்டம் அமலில் உள்ளது. இந்த பாட திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்று பருவ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் பருவ தேர்வும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும் செப்., 23ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களை தயார்படுத்தும் வகையில், அலகு தேர்வு என்ற பெயரில், முன் பருவ தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுகளை, இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள், மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இந்த தேர்வின் மதிப்பெண்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக கற்பித்தல் முறையை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

Ennum Ezhuthum - August 2nd Week Lesson Plan

பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 

01.01.2022 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர்  பட்டியல் தயாரித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

 தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...




ஆசிரியர்கள் ஓய்வு குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து விடுவிப்பது அல்லது அந்த கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic session ) மறு நியமனம் அளிப்பது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை







ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமான நிரப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்!

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்  அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் 

Temporary Teacher Post School Education New Instructions - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

 அனைத்து மாவட்டங்களிலும்  புதிதாக  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது


 புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது


  ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தற்போது புதிதாக துவங்கப்பட உள்ள அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்  பணியிடங்கள் புதிதாக  அனுமதிக்கப்படவுள்ளது. (சுயநிதி பள்ளி  மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு பிரிவுகள் மட்டும் அனுமதிக்கப்படும் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதிக்க படாது)


Click here to Join WhatsApp group for Daily kalvi news

EE FA ( b ) Friday Activities - TNSED SCHOOLS செயலியில் எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான முழுமையான விளக்கம்

 எண்ணும் எழுத்தும் வெள்ளிக்கிழமை மாதாந்திர மதிப்பீடு


FA B FORMATIVE ASSESSMENT | வளரறி மதிப்பீட்டை ஆசிரியர்கள் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு ஆங்கிலம் , தமிழ்  பாடத்திற்கு வளரறி மதிப்பீடு TNSED SCHOOLS செயலியில் எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான முழுமையான விளக்கம்.






கனமழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 04.08.2022

கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :



தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை.
சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை


கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை



கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! 



SCHOOL MORNING PRAYER ACTIVITIES 04.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022 




செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள், செப்., 1 - 11 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. 'மத்திய பல்கலைகள் மட்டுமின்றி விருப்பமுள்ள மாநிலங்கள் மற்றும் தனியார் பல்கலைகளும், இந்த க்யூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. 


இந்நிலையில், நடப்பாண்டு இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு ஜூலை 15 - 20 வரை நடந்து முடிந்தது. மீதமுள்ள மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு ஆக., 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான, தேர்வு அனுமதி சீட்டுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுகள் செப்., 1 - 11 வரை நடக்க இருப்பதாக, பல்கலை மானிய குழுவின் தலைவர் மமிடலா ஜெகதீஷ் குமார் நேற்று அறிவித்தார்.உள்நாட்டில் உள்ள 500 நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் உள்ள 13 நகரங்களில் இருந்தும், மொத்தம் 3.57 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளியைக் களைய வகுப்புநிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல் விளைவுகளை மையமிட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில் குழந்தைகள் எத்தகைய விளைவுகளைப் பெற்றுள்ளனர் என்பதை அறியும்வகையில் வளரறி மதிப்பீடு வாரந்தோறும் செயலி மூலம் நடத்தப்பட வேண்டும் என பார்வை 2 இல் கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் விளக்கப்பட்டிருந்தது.


6,7, 8th Std - Time Table ( New )

 


இக் கல்வியாண்டின் 6,7,8 வகுப்புகளுக்கான புதிய கால நேர அடிப்படையிலான கால அட்டவணை - pdf file


கீழே உள்ள link ஐ click செய்து download செய்து கொள்ளுங்கள்...


👇👇👇👇👇👇👇👇👇👇


Click here -6th std


Click here -7th std


Click here -8th std


1 To 5th Std - Time Table ( New )

 



NEW TIME TABLE -CLASS-1st TO 5th - Download here...


உபரி ஆசிரியர்களை மற்ற அதிரடி உத்தரவு


 

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு

 கொரோனா நோய்த் தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துரை தெரிவித்துள்ளது. மேலும், தாய், தந்தையரை இழந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அரசாணை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் (ncpca) ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை அந்த மாணவர்களின் பள்ளி கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன்மூலம் கொரோனா காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் பயின்ற தனியார் பள்ளிகளிலேயே கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டம்; வெளியானது சூப்பர் அறிவிப்பு

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழ்நாடு அரசிடம்  கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கையினை ஏற்று, உயர்கல்வித் துறை தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

எனவே, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..

Click here to Join WhatsApp group for Daily kalvi news

TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை, செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் உறுதி செய்வது செயல்பாட்டில் இருந்தாலும், அது கட்டாயமாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் செல்போன் செயலி மூலமான வருகைப்பதிவேடு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, TNSED எனப்படும் செயலியை கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த செயலியில், தலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் செயலி மூலம் வருகை பதிவேடு எடுக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்கு வராமல் வருகைப் பதிவேட்டை பதிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TNSED எனப்படும் அந்த செயலியில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே வருகையை குறிக்கும் P எனும் எழுத்தும், விடுப்பை குறிக்கும் A எனும் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை உறுதி செய்துகொண்டு அதில் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தி விட்டு, திரையின் அடியில் தோன்றும் SAVE AND SYNCHRONIZE எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திரையில் ஆரஞ்சு நிறம் தோன்றி அது பச்சை நிறத்திற்கு மாறி, வருகைப்பதிவேடு முற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

இதேமுறையிலேயே, ஆசிரியர்களும் தங்களது வருகையை தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய,  லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

School Morning Prayer Activity-2.08.2022 pdf download

School Morning Prayer Activity-2.08.2022 pdf download


கனமழை -இன்று 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை -இன்று  02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

Ennum Ezhuthum Song Corner - All Songs Color Printable TLM

  எண்ணும் எழுத்தும் - பாடல் களம் - அனைத்து பாடல்களும் - Printable TLM

Click here to Download pf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

Alphabets Flashcards - PDF

CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டத்தை வாரியம் 50-50 சதவீதம் பிரித்து (CBSE Syllabus) இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2023 இல் முந்தைய ஆண்டுகளைப் போலவே ஒரு தேர்வு நடத்தப்படும்.

2022 ஆம் ஆண்டில், CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை இரண்டு பருவங்களாக நடத்தியது. முடிவைத் தயாரிக்க, தியரி பேப்பர்களில் டேர்ம் 1-க்கு 30 சதவீத வெயிட்டேஜும், டெர்ம் 2-க்கு 70 சதவீத வெயிட்டேஜும் வாரியம் வழங்கியிருந்தது. மறுபுறம், நடைமுறையில், இரண்டு விதிமுறைகளுக்கும் சமமான வெயிட்டேஜ் வழங்கப்பட்டது.


இருப்பினும், இந்த ஏற்பாடு அடுத்த ஆண்டு தொடராது, முந்தைய ஆண்டுகளில் இருந்தது போல் 2023 இல் ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும் என்று வாரியம் அறிவித்துள்ளது.

30% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது..

தேர்வை ஒரே கட்டமாக நடத்துவதை தவிர, CBSE 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும் சுமார் 30% குறைத்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


இந்த ஆண்டுக்கான அத்தியாயங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, சில பாடங்களில் இருந்து பல அத்தியாயங்கள் மற்றும் அலகுகள் அகற்றப்பட்டுள்ளன, மற்றவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.


2023 ஆம் ஆண்டு வாரியத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான படிப்புப் பொருள், மதிப்பெண் திட்டம், மாதிரி வினாத்தாள், கேள்வி வங்கி போன்றவற்றை வாரியம் விரைவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். மாதிரித் தாளில் இருந்து, மாணவர்கள் தேர்வைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறுவார்கள், மேலும் அது தயாரிப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மாதிரி தாள், குறிக்கும் திட்டம்...

மாதிரி வினாத்தாள், மதிப்பெண் திட்டம், கேள்வி வங்கி போன்றவை, சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் அங்கு அனைத்து விவரங்களையும் சரிபார்க்க முடியும்.


இந்த ஆண்டு வாரியத் தேர்வுகள் தாமதமானது, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை எழுதுவதற்கும், 12 ஆம் வகுப்பிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் குறைந்த நேரமே உள்ளது. இது தீவிர திட்டமிடல் மற்றும் கூடுதல் வகுப்புகள் தேவைப்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

 தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!


பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2021 க்குள் முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி ! ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


DEE Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல் , இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல் .


Dir Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: எஸ்எம்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு நிலைகளாக நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அனைத்துவித அரசுப் பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக. 2,3-ம் தேதிகளில் மதுரையில் நடைபெறும். மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஆக. 8 அல்லது 9-ம் தேதியில் நடைபெறும். பங்கேற்பாளர்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தேர்வு செய்யப்படும். மேலும், பள்ளி அளவிலான பயிற்சி ஆக. 11 முதல் 31-ம் தேதி வரை வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை திட்டம்.. பள்ளிப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

Minority Scholarship Scheme: 2022- 23 கல்வியாண்டிற்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஆகிய மூன்று திட்டங்களுக்கு  மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி பற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ/ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைகள்:


இந்திய அரசு/மாநில அரசு/ அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த கல்வித் தொகையைப் பெற, மாணவர்கள் தங்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

முதல் இரண்டு திட்டங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விட குடும்ப வறுமைக்கு முக்கியத்துவம் அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  மூன்றாவது திட்டத்தில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

முக்கியமான நாட்கள்:

பள்ளிப் படிப்பு  கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு புதிதாக பதிய அல்லது புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரை 30.09.2022 வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மேற்படிப்பு  மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 31.09.2022 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 2006ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச ஆதரவு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 100%  நிதிப் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  மாணவ/ மாணவியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

 இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது.

கொரோனா பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி"திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி வளாகங்களுக்கு வெளியே உள்ள இல்லம் தேடி மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக,  மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்கு  அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுக்களும் தங்கள் அளவில் கொடுக்கப்பட்ட பிரத்தியோக பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் பணியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . அதேபோன்று, மாவட்ட அளவிலும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறு சீரமைத்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்  என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில், "  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்று முடிவெடிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும்" என்று தெரிவிக்கப்பட்டது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news