10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 - யுபிஎஸ்சி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

 


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!" என்று அவர் கூறியுள்ளார்.


திட்டம் என்ன? - நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


இந்நிலையில் 2023-24-க்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகும்.


இதன்படி TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.


ஏற்கெனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 02.08.2023 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023 ஆகும்.


 Click here for latest Kalvi News 

அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் 2 நாள் புத்தாக்க பயிற்சி பணிமனை!!!

 


ஒருங்கிணைந்த அனைத்து திட்ட உட்கூறுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் சார்ந்து அனைத்து மாவட்ட உதவி திட்ட அலுவலர் ( தொடக்கக் கல்வி ) மற்றும் உதவி திட்ட அலுவலர் ( மாவட்ட திட்ட அலுவலகம் ) ஆகியோருக்கான மாநில அளவிலான புத்தாக்க பயிற்சி பணிமனை - சார்ந்து , SPD PROCEEDINGS...

State Level Orientation Programme  for all APOs(Ele) and APOs(DPC) - Proceedings - Download here



 Click here for latest Kalvi News 

August 2023 - Then chittu Magazine

 

Then Chittu Magazine Collections

தேன்சிட்டு - 01-15 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு


August 2023 - Then chittu Magazine ( 1 to 15th ) - Download here


 Click here for latest Kalvi News 


Ennum Ezhuthum - Term 1 - Tamil & English Reading Practice Book

 

Ennum Ezhuthum Study Materials 


Ennum Ezhuthum - Term 1 - Tamil Reading Practice Book - Download here


Ennum Ezhuthum - Term 1 - English Reading Practice Book - Download here


 Click here for latest Kalvi News 

CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு.

 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது.

அதன்படி பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 1,20,742 பேர் துணைத் தேர்வு எழுதினர். இதில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 75 மதிப்பெண்ணுக்கு மேல்402 பேரும், 60 முதல் 75 மதிப்பெண்ணுக்குள் 3,101 பேரும் பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத்தேர்வில் பெற்றதை கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி முன்னேற்றத் தேர்வை 60,419 மாணவர்கள் எழுதினர். அதில் 59 சதவீதம் பேர் கூடுதல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும், 35 சதவீதம் பேர் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணைவிட குறைவாகவும், 6 சதவீதம் மாணவர்கள் அதே மதிப்பெண்ணையும் பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.



 Click here for latest Kalvi News 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு ( முழு விபரம் )

 அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது . 

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும் . ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும் , முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . 


முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் , இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . 18.08.2023. 23.09.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024. ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் , விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ .50 / - சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . 


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் .18.08.2023

 TN CM Talent Search Examination - Details - Download here



 Click here for latest Kalvi News 

All CEO's and DEO's Review Meeting Agenda - August 2 & 3

 அனைத்து CEOs & DEOs ஆய்வுக் கூட்டம்  02.08.2023 & 03.08.2023 ல் நடைபெறுதல் -  கூட்டப்பொருள் -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

All CEO's and DEO's Review Meeting Agenda - Download here

 Click here for latest Kalvi News 

SMC MEETING - 04.08.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

SMC MEETING - 04.08.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

                                            

சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது


ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்று வழங்கப்பட இருக்கிறது..


அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்...

விரிவான தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து  திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை டவுன்லோடு செய்து கொள்ளவும்..
👇👇👇👇👇👇👇👇

CLICK HERE-TO DOWNLOAD-SMC-LETTER  


Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 02.08.2023 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

விளக்கம்:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.


பழமொழி :
Appearance is deceitful

உருவத்தை கண்டு ஏமாறாதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 

2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை

பொன்மொழி :

உங்கள் வயதை நண்பர்களை வைத்துக் கணக்கீடுங்கள், வருடங்களை வைத்து அல்ல. உங்கள் வாழ்க்கையை புன்னகையை வைத்துக் கணக்கீடுங்கள், கண்ணீரை வைத்து அல்ல. --ஜான் லெனான்.


பொது அறிவு :

1. சிந்து மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் எது?

விடை: தாமிரம்


2. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை: சமுத்திரகுப்தன்


English words & meanings :

 haphazard - accident எதிர்பாராத நிகழ்ச்சி idiosyncrasy - an odd way of thinking சிந்தனை முரண்பாடு


ஆரோக்ய வாழ்வு :

சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்

ஆகஸ்ட் 02 இன்று


ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.

பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்


பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.

தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்து சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதைய சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாருஉடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி.

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு

உடனே விவசாயி தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .

உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,அப்ப அங்க வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு.

உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க .

அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத ஆத்தோட போயிருச்சுஅடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்டா அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு.


நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது.


இன்றைய செய்திகள் - 02.08. 2023

*தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1705 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக அமைச்சர் 
மா. சுப்பிரமணியன் தகவல். 

*11 நிமிட சார்ஜில் 100கி.மீ.  ரேஞ்ச்....வேற லெவல் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த ஹோண்டா.

*மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் அம்மோனியா எரிவாயு தொட்டி வெடித்து விபத்து-       9 மாணவர்கள்  மற்றும் ஒரு ஆசிரியருக்கு உடல் நலக்குறைவு.

*வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. 

*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வியட்நாம் அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து. 

*செஸ் போட்டியில் கலக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்   கவிரூபன் " சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம்"  என்கிறார்.

Today's Headlines

*1705 people have donated organs in 15 years in Tamil Nadu information by Health Minister
 Ma.  Subramanian 

 * In 11 minute charge travelling space of 100 km Range...Honda introduced marvelous electric car.

 *Ammonia gas tank exploded in school in West Bengal - 9 students and one teacher was wounded.

 *Unprecedented heat- two days holiday announced in Iran.

 *Netherland beat Vietnam 7-0 in Women's World Cup Football.

 *Kaviruban, a second standard student who competes  in chess, says, "The ambition is to participate in international competitions."
 Prepared by

Covai women ICT_போதிமரம்

6 - 8th Std | முதல் பருவம் - மாத வாரியாக - பாட வாரியாக கற்றல் விளைவுகள்...

 

முதல் பருவம் -மாத வாரியாக - பாட வாரியாக கற்றல் விளைவுகள்...

 

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை


6th std& 7th std

👇👇👇👇👇👇

Click here-pdf


8th std

👇👇👇👇👇

Click here pdf


8th Std Science- All term 

👇👇👇👇👇👇👇👇

Click here pdf


 Click here for latest Kalvi News 

6 To 10th Std - August 1st Week - History Kalakkodu

 

வரலாற்று காலக்கோடு - 6 முதல் 10ஆம் வகுப்பு

6 To 10th Std - August 1st Week - History Kalakkodu

Click here


 Click here for latest Kalvi News 

All CEOs & DEOs Review Meeting - August 2 & 3 - Dir Proceedings

 பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 02.08.2023 மற்றும் 03.08.2023 ஆகிய நாட்களில் மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அலுவலர்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார் . அனைத்து முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest Kalvi News 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை (MBC / DNC Girls Scholarship Format) விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும்... (PDF Format)

 


MBC / SC Girls Scholarship Consolidation Format - Download here


MBC/DNC Girls Scholarship - Individual Student Application Format - Download here


MBC/DNC Girls Scholarship - Covering Letter Format - Download here


MBC/DNC Girls Scholarship - Consolidation Format 1 - Download here


MBC/DNC Girls Scholarship - Consolidation Format 2 - Download here


MBC/DNC Girls Scholarship - Acquittance - Download here


 Click here for latest Kalvi News 

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.


சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது.


பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்



 Click here for latest Kalvi News 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.


தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.


 Click here for latest Kalvi News 

TNSED ADMIN APP NEW UPDATE-0.99- Date 12-3-24

 

TNSED ADMIN APP NEW UPDATE-0.99- Date 12-3-24*


👉 *Kalai Arangam and Uniform Measurement Module Added.*

TNSED Administrators App New Version👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring


 Click here for latest Kalvi News