Showing posts with label 10th Exam. Show all posts
Showing posts with label 10th Exam. Show all posts

பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு

 மேல்நிலை இரண்டாமாண்டு . முதலாமாண்டு , பத்தாம்வகுப்பு மற்றும் இத்துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள்- வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.


 வழித்தட அலுவலர்களுக்கென தனியாக உழைப்பூதியம் நிர்ணயம் செய்யப்படாததால் , இதுநாள் வரை பறக்கும் படை அலுவலர்களுக்கான உழைப்பூதியத் தொகையே வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2023 முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் அனைத்து பொதுத் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ .130. ( ரூபாய் நூற்று முப்பது மட்டும் ) என நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!

 


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு   வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!


Concession to Disabled - Download here



 Click here for latest Kalvi News 


பொதுத் தேர்வுக்குத் தயாரா?

 நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட, தேர்வு என்றதுமே அவர்களுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் சேர்ந்துவந்து ஒட்டிக் கொள்கிறது. இது அவர்களது புத்திக்கூர்மையையும் செயல்திறனையும் ஆற்றமையும் குறைப்பதாக அமைகிறது. இதனைச் சரியாக கையாளக் கற்றுக்கொண்டால், தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். தூள் கிளப்பலாம். மாணவர்கள் சுலபமாக பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்கள் இதோ...

முதலில், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக படித்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கை வைத்துக்கொள்ளாதீர்கள். அந்த ஓர் ஆண்டினை முழுமையாக படிப்பதற்கு என்று அர்ப்பணித்தால் மட்டுமே நீங்கள் பெற நினைத்த மதிப்பெண்ணை வாங்கிட முடியும். இவ்வளவு நாளாக சும்மா இருந்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனும் பதற்றம் கொள்ள வேண்டாம்.

மீதமிருக்கும் நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் திறனுக்கேற்றவாறு படிப்பதற்கென்று ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். பத்துப் பாடங்களில் எட்டுப் பாடங் களைக்கூட முழுமையாகப் படித்தால் போதும். பத்தையும் நுனிப்புல் மேய்வதை தவிருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் தூக்கம். எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இருக்காமல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. தூக்கத்தைக் குறைத்து படித்துக்கொண்டே இருந்தால், சோர்வு உண்டாகி, படிப்பது மறந்துபோகக்கூடும். எப்போது படித்தாலும் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்.

தினமும் இரவில் தூங்கச் செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பாக தொலைக்காட்சி பார்ப்பதும், செல்பேசியில் நேரத்தைச் செலவிடுவதும் நமது தூக்கத்தையும் கவனத்தையும் பாதிக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்காமல், சிறிது வீட்டைச் சுற்றி நடக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம்.

தேர்வு நேரங்களில் சரியான உணவு முறை வேண்டும். இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள், கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்கூடாது. உடல் நலனைப் பேணுவதும் அவசியம் என்பதால் தேவையான உணவை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நலனைப்போலவே மனநலனும் மிகவும் அவசியம். பெற்றோரின் குணநலன்கள், வீட்டுச்சூழல், பொருளாதார நிலை போன்ற பல சவால்கள் இருக்கக்கூடும். இதனால் மாணவர்கள் எதிர்மறையான சிந்தனையை ஒருபோதும் அடைந்து விடக்கூடாது. நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.

பாடங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைவிட, புரிந்து படிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் பாடங்களை ஆசிரியரிடமோ அல்லது சக மாணவரிடமோ கேட்டு, தெளிவு பெற வேண்டும். படித்து முடித்தவுடன் பழைய தேர்வுத் தாள்களை வைத்து, பயிற்சி செய்யலாம். கணக்குப் பாடத்தை இயன்றவரை பலமுறை போட்டுப் பார்க்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர், மாணவரை மட்டும் விட்டுவிட்டு, தனியாக கேளிக்கைகளில் ஈடுபடுதல், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த டிப்ஸ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் T/M (SAI.K) முக்கிய வினா விடை தொகுப்பு (முழு பாடப்பகுதி) 2022-23.

 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் T/M (SAI.K) முக்கிய வினா விடை தொகுப்பு (முழு பாடப்பகுதி) 2022-23.                   


          Prepared by

SAI K THIRUKUMARAN 
BT-SOCIAL SCIENCE 
GHSS MGR NAGAR CHENNAI-78.

அனைவருக்கும் பகிருங்கள் மாணவச் செல்வங்கள் பயன் பெறட்டும்..

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் 
 

10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.

10th STANDARD - ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE - மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு

 10th STANDARD - ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE - மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு


Tamil - Download Here

English - Download Here

Maths - Download Here

Science - Download Here

Social - Download Here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 


1Oth STD - ALL SUBJECTS - QUARTERLY EXAM MODEL QUESTION PAPER

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


+2 தேர்வு முடிவு TLM - ஐ ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை -6 – 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலைப் பொதுத் தேர்வுகள் - மே 2022 , தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) – அனைத்துப் பள்ளிகளும் ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பான செயல்முறைகள்.




IMG_20220617_124251



10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 வயது ஆன மாணவர்களின் சேர்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்ந்த 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும். அத்துடன், அவர்கள் சிறப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விளையாட்டுத் துறையில் சிலம்பம் போட்டிக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் வழங்கியுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்.. துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 பேர் பங்கேற்கவில்லை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்கும் வகையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு  மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் மொத்தம் 6,49,467 பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவ/மாணவியர்  10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் துணைத் தேர்வில்'  கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது.

முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகளை அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை  சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம்
வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொது தேர்வுகள் எப்போது?

அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள்  பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார்.


நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

SSLC Examination May 2022 - Valuation Camp Schedule

10th Public Examination May 2022 - Paper Valuation Camp Schedule 


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்: தேர்வுத்துறை




தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.

மேலும், 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

 இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பொது தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு!

பொது தேர்வுகளில் பங்கேற்காத, 1.17 லட்சம் மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து, 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.இவ்வளவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு விரிவான அறிக்கை தர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த தேர்வர்கள் அனைவரையும், ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 


05.05.2022 முதல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான கோவிட் - 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

05.05.2022 முதல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான கோவிட் - 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!



10, 11, 12 பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு

அறை கண்காணிப்பாளர் களுக்கான அறிவுரைகள்: Click here

துறை அலுவலர்களுக்கான பணிகள்: Click here

முதன்மைக் கண்காணிப்பாளருக்கான பணிகள்: Click here

வழித்தட அலுவலர்களுக்கான பணிகள்: Click here

வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களின் கடமைகள்: Click here

ஆய்வு அலுவலர்களின் பொறுப்புகள்: Click here

மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநருக்கான பணிகள்: Click here

பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனமும் கடமைகளும்: Click here

அவசர உதவி தொலைபேசி எண்கள்: Click here

படிவங்கள் : Click here

தேர்வுக் கால அட்டவணைகள்: Click here