வினா-வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

 1161689

 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-வங்கி புத்தகங்கள் மீண்டும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநர்கள் நியமனம் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளார்.அவருக்கு உதவியாக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படும்.


மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பின்பு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு முக்கியமானதாகும். மேலும், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.


கரோனா பரவலுக்குபின் அது தயார் செய்யப்படாமல் இருந்து. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளுக்கு மழை விடுமுறை - புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித் துறை தகவல்

 2019

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.


தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது. 


அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழை பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. 


இந்தச் சூழலில் நிகழாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சா்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.


அதேபோன்று வியாழக்கிழமை பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன.


இதனால் அந்தப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education Official Calendar ( December 2023 & January 2024 )

 

IMG_20231201_113317

December 2023 & January 2024 - School Education Official Calendar 

டிசம்பர் 2023 & ஜனவரி 2024 மாத பள்ளி நாட்காட்டி!!!

Dec 2023 & Jan 2024 Calendar👇
Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 01.12.2023

 .com/

Pdf File - Download here

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2023

திருக்குறள் 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:311


சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார்


விளக்கம்:


 சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. 


பழமொழி :

Smile costs nothing


புன்னகைக்க பணம் தேவை இல்லை


இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை – ஜெர்மனி


பொது அறிவு :


1. வெள்ளையனே வெளியேறு” இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது.


விடை: 1919


2. பிரிட்டனின் தேசிய மலர்.


விடை: ரோஜா


English words & meanings :


 haematology (n) - scientific study of the blood and its diseases. இரத்தம் மற்றும் அது சார்ந்த நோய்கள் பற்றிய அறிவியல் படிப்பு. haill(n)- greeting, a shower of frozen drops , வாழ்த்து, ஆலங்கட்டி மழை.


ஆரோக்ய வாழ்வு : 


சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.


டிசம்பர் 01 இன்று


உலக எய்ட்ஸ் நாள்


உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது


நீதிக்கதை


 முயற்சி திருவினை ஆக்கும்.


ஒரு வண்டியோட்டி தனது வண்டியைக் கிராமப் புறத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, ஓரிடத்தில் அதன் சக்கரங்கள் ஆழப் புதைந்து கொண்டன.


என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போன அந்த வண்டியோட்டி கடவுளைக் கூவி அழைத்தான். கடவுள் அவன் முன்னே வந்தார். வண்டியோட்டியே... சக்கரங்களை உனது தோள்களால் தூக்கு. மாடுகளைத் தார்க்குச்சியை வைத்துத் தூண்டு. வண்டி ஓட ஆரம்பித்து விடும்.


உன்னால் எப்போது ஒரு காரியம் முடியாதோ அப்போது மட்டும் என்னை அழை. முயற்சியே செய்யாமல் என்னை அழைப்பவர்க்கு நான் உதவி புரிய வர மாட்டேன். முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து கொள் என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்தார்.


நீதி : முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


இன்றைய செய்திகள் - 01.12.2023


* இந்தியப் படைக்காக மேலும் 97 தேஜஸ் விமானங்கள்.


* அடையாறில் தூர் வாரியதால் குடிசை பகுதிகளில் நீர் தேங்கவில்லை –அமைச்சர் மா. சுப்ரமணியம்.


* சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழைப் பதிவு - வானிலை ஆய்வு மையம்.

* வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.


* இந்திய ஹாக்கி வியாழன் அன்று 24 வீரர்கள் அடங்கிய ஆண்கள் ஹாக்கி குழுவை வரக்கூடிய ஐந்து நாடுகளின் வலேன்சியா போட்டிக்காக அறிக்கை வெளியிட்டது. இந்த போட்டி டிசம்பர் 15 முதல் 22 வரை ஸ்பெயினில் உள்ள வலேன்சியா வில் நடைபெற உள்ளது.


Today's Headlines


* 97 more Tejas aircraft for the Indian Army


 * Water does not stagnate in slum areas as there was a dredge in Adyar - Minister Ma. Subramaniam


*  In Chennai, the maximum rainfall is in Meenambakkam it is recorded as 26 cm in the last 24 hours  - Meteorological Centre

 * A depression forms in the Bay of Bengal within 12 hours


* Hockey India on Thursday announced a 24-player men's hockey squad for the upcoming five-nation Valencia tournament.  The tournament will be held from December 15 to 22 in Valencia, Spain.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு.

 

2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல் · தற்காப்புக்கலைப் பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

SPD Proceedings - Download here

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் கீழ் 6941 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்தம் ரூ .1041,150 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 6267 உயர் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ .940.050 / -இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலைப்பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது . இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


மாவட்டங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது ( Elementary and Secondary )


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

7, 8TH SOCIAL SCIENCE ALL UNITS QUESTION PAPER with ANSWERS - NMMS EXAM - Materials

 7, 8TH SOCIAL SCIENCE ALL UNITS QUESTION PAPER with ANSWERS - NMMS EXAM - Materials

Click here -660 pages pdf file- Link 1




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

8 STD SOCIAL QUESTION PAPERS (NMMS, TRUST EXAM)

7 STD SS TEST QUESTION PAPER UNIT WISE (NMMS, TRUST EXAM)

 

TEST QUESTION PAPER 1 : CLICK DOWNLOAD


TEST QUESTION PAPER 2 : CLICK DOWNLOAD

TEST QUESTION PAPER 3 : CLICK DOWNLOAD

TEST QUESTION PAPER 4 : CLICK DOWNLOAD

TEST QUESTION PAPER 5 : CLICK DOWNLOAD


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CLAT Exam 2023 Rules - நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 





CLAT Exam 2023 Rules - நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம்

 

கோவை : மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் டோல் பிரீ எண் வாயிலாக கமிஷனர், கல்வி குழுவினரை வாரம் தோறும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதன் வாயிலாக, பள்ளிகளில் சந்திக்கும் பிரச்னைகள் மட்டுமல்லாமல், பாலியல் தொந்தரவு, மனரீதியான பிரச்னைகளை தெரிவிக்கவும் நல்ல வாய்ப்பு அமையவுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலைப் பள்ளிகள் என, 84 மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.தவிர 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால், நடப்பு கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் இப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர்.அதேசமயம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, பயிற்றுவிப்பு, ஆசிரியர்கள் அணுகுமுறை உள்ளிட்டவற்றில் இருக்கும் குறைகளை மாணவ, மாணவியர் யாரிடம் கூறுவது என தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காண, வாரம்தோறும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த, கல்விக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்துக்கு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். குழு தலைவர் மாலதி முன்னிலை வகித்தார். மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் உள்ள பூங்காக்களில் பெயின்ட் அடித்தல், குழந்தைகள் விளையாட தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தரவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கல்விக் குழு தலைவர் மாலதி கூறியதாவது:கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண முடிவு செய்துள்ளோம். இதற்கென, இலவச டோல் பிரீ எண் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாநகராட்சி கமிஷனர், எங்களது குழுவினர் வாரந்தோறும் புதன் காலை, 7:00 முதல் 8:00 மணி வரை மாணவ, மாணவியரிடம் இருந்து வரும் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காண உள்ளோம். குழந்தைகளின் பெற்றோரும் பள்ளி சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். அடுத்த வாரம் இந்த வசதி துவங்கப்படவுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

LO Exam Answer Key - 6 To 8th Std

 2023-நவம்பர் மாத கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு 6-8 ஆம் வகுப்பு - key Answer


🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 6th STD (TM) KEY


1. இ

2. ஆ

3. ஆ

4. இ

5. ஆ


🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 6th STD (EM) KEY


1. c

2. b

3. b

4. c

5. b


🌹 2023-நவம்பர் மாத    கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு - 7th STD (TM) KEY


1. ஈ

2. இ

3. ஆ

4. இ

5. இ


🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 7th STD (EM) KEY


1. d

2. c

3. b

4. c

5. c


🌹 2023-நவம்பர் மாத    கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு - 8th STD (TM) KEY


1. அ

2. அ

3. ஆ

4. அ

5. இ


🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 8th STD (EM) KEY


1. a

2. a

3. b

4. a

5. c



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மகாகவி பாரதியார் பிறந்த தினம் ( 11.12.2021 ) poem

 


.com/img/a/

 .......... மகாகவி பாரதி வாழிய !
====================

எட்டைய புரத்தில்
எரிமலை சமைத்தார் - அவர்
எண்ணிய விடுதலை வரும்படி அமைத்தார் ,

கட்டிய கவியில்
கரைய வைத்தார் - நமைக்
கவர்ந்திடும் வரிகளில் உறைய வைத்தார் ,

கொட்டிய வார்த்தையில்
குரல்வளை நெரித்தார் -தன்
கொடூர அக்னி பரல்களை விரித்தார் ,

வெட்டிடும் பாடலில்
வீரத்தைப் பதித்தார் - அதில்
வெள்ளையர் அடிமை கோரத்தைச் சிதைத்தார் ,

தமிழின் பெருமையைத்
தன்கவியில் உரைத்தார் - அதில்
தன்மானம் உயிரென பொன்கவியில் கரைத்தார் ,

உமிழும் வரிகளில்
உணர்வைக் கூட்டினார் - நம்
உள்ளத்தில் எழுந்திடும் அயர்வை மாற்றினார் ,

கமழும் தமிழைக்
கவியில் காட்டினார் - தன்
கருத்தினை விளக்கியே புவிதனில் நாட்டினார் ,

சிமிழாய் உரிமையைச்
சிதையாமல் காத்தார் - நம்
சிந்தையில் பாரதி விதையாகச் சேர்த்தார் .

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 



2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!  - Click Here For Download

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News