Kind Attention: EMIS TC Generation Guidelines - 2

  Kind Attention: EMIS TC Generation Guidelines - 2

🔵முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும். 

🟢 Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ்   கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்

Terminal Class:

1.Nursery and primary school - 5 std - Terminal class

2. Middle school - 8std Terminal class

3.High Schools - 10 Std

4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class

🔵Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது *Terminal class* என்று மட்டுமே கொடுக்க வேண்டும். 

*குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.*

🔵Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.

 தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

🔵அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.

- EMIS Team



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் எவ்வளவு?

 'பிளஸ் 2 தேர்வில், கணிதத்தில் 'சென்டம்' குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங்கில் சேர்வதற்கான 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்,'' என, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது:


பிளஸ் 2 பொது தேர்வில், 47 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். அந்த நிலை இனிமேல் வராமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறை கணிதத்தில், 100க்கு 100 சென்டம் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளது.


கணிதத்தில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.


அதேநேரம், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவு மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அதனால், பி.காம்., படிப்பில் சேர கடும் போட்டி ஏற்படும்.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால், அதில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.


அதனால், இன்ஜினியரிங் மற்றும் பிற படிப்புகளுக்கான சேர்க்கையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்ணுடன் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சி , 1 முதல் 74 அணி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் , இவ்வணிகளில் பயிற்சிக்கு வருகை புரியாத அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சியில் இப்பயிற்சியில் பங்கேற்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல் ( இணைப்பு -2 ) மற்றும் முதன்மைக் கருத்தாளர்களின் பட்டியல் ( இணைப்பு -3 ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.


 இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அட்டவணைப்படி பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அவர்களை பணியிலிருந்து விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

CoSE - HSS HM Mentor Training.pdf - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS NEW UPDATE-TIME TABLE MODULE ENABLED

 அனைத்துப் பள்ளிகளும் தங்களது  பள்ளியின் பாட ஆசிரியர்  மற்றும் பாட விபரங்களை உள்ளீடு செய்து பள்ளி  மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்கும் TIME TABLE (கால அட்டவணை) தயார் செய்யும் வழிமுறை...வீடியோ இணைப்பு.





Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நாளை வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 4,33,000 மாணவிகளும் 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் பொதுத் தேர்வினை எழுதினர்.

8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.

முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

 மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in,

www.dge.tn.gov.in

என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல்,  இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.


ஆகஸ்ட 2-ல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

 பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். 

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம். www.tneaonline.org எனும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கிவைத்தப் பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், ‘பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும்.

மொத்தம் 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடக்கும், 3.10.2023 வரை கலந்தாய்வு நடைபெறும். 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 2023-24 ம் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 8-ம் தேதி தொடங்கும். மே 19 வரை விண்ணப்பிக்கலாம். மொத்த 1,07,395 இடங்கள் உள்ளன.

2,98,400 பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். இனி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தனித்தனியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. 5 கல்லூரிகள் வரை விண்ணப்பிக்கும் போது 50 ரூபாய் மொத்தமாக செலுத்தினால் போதும். 

5 கல்லூரிகளுக்கு மேல் விண்ணப்பிக்கும் போது கூடுதல் 50 தனித் தனியாக செலுத்தவேண்டும். www.tngasa.in என்கிற இணையதள முகவரியில் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிக மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடந்துள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 53% சதவிகிதமாக உள்ளது. 

இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 18 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 

சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் சென்னை பல்கலைக்கழகம் 12 வது இடத்தில் உள்ளது. 

என்ன படிப்பது? எங்குப் படிப்பது? அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுக் குழு - தொலைபேசி எண்ணும் அறிவிப்பு

 வரும் மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விவரிக்க வழிகாட்டுக் குழுவைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 3,123 பள்ளிகளில் அமைத்துள்ளது. இது குறித்த வீடியோவை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

12 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பது என்ற சந்தேகம் அனைத்து மாணவர்களுக்கும் எழும் ஒன்று தான். மேலும், நான் டாக்டர் ஆக வேண்டும், இன்ஜீனியர் ஆக வேண்டும் என்று கனவுகள் கொண்ட மாணவர்களுக்கு எங்குப் படிக்க வேண்டும் என்ற புரிதல் இருக்காது. இந்த நிலையில், இதற்குத் தீர்வு காண, மாணவர்களுக்கு என்று உயர்கல்வி வழிகாட்டிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டிக் குழுவில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்தக் கல்லூரிகளில் படிக்கலாம். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆகிய வழிமுறைகள் வழங்கப்படும்.

மேலும், உயர்கல்வி படிக்கக் கல்விக்கடன், உதவித்தொகை ஆகியவற்றை எப்படிப் பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். படிப்பிற்கு ஏற்ற அரசுத் திட்டங்களில் உதவித்தொகை பெற்றுப் பயன்பெறுவது குறித்த தகவல்களும் இந்த குழு மூலம் வழங்கப்படும்.

தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் கூட இந்த குழுவிடம் தேவையான ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உரிய வழிகாட்டுதலும் ஆலோசனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, நேரில் வர முடியாத மாணவர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 14417 என்ற எண்ணிற்குக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நீட் தேர்வு 2023 - வழிகாட்டு நெறிமுறைகள்

 இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG 2023) மே 7ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும் (485 நகரங்கள்) வெளிநாட்டிலும் (14 நகரங்கள்) எழுதுகின்றனர்.


பேனா மற்றும் பேப்பர் (PBT) முறையில் தேர்வு நடக்கும்.


நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள்


மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.


மாணவர்களுக்கான ஆடை மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் என்னவென்று பார்போம்.


தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது. 


உடை கட்டுப்பாடு : பெண்கள்


முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் அணியக் கூடாது. துப்பட்டா அணியக் கூடாது. பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணிதல் கூடாது. 


கால்களை மூடு விதமான செருப்பு மற்றும் ஷூக்களை அணியக்கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். 


நகைகள், காப்பு அணியக்கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.


தலைமுடியில் பின்னல் மற்றும் கொண்டை கூடாது (தலைவிரி கோலமாக போக வேண்டும்)


“தேசிய தேர்வு ஆணையம் (NTA) கலாச்சாரத்தின் புனிதத்தை மதிக்கிறது. குறிப்பாக மாணவிகள் தேர்வு மையங்களுக்கு மதசார் உடைகளை அணிந்து வந்தால் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.  தேர்வு அறைக்குள் கலாச்சார மற்றும் மத ரீதியான உடைகளை அணிந்து வருபவர்கள் குறைந்தது  ஒரு மணிநேரத்திற்கு முன்பே தேர்வு எழுதும் மையத்துக்கு வந்து விடவேண்டும். முறையான சோதனைக்கு பின்பே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 


பொது கட்டுப்பாடு: குளிர் கண்ணாடி, கைக்கடிகாரம், காப்பு ஆகியவை அணிந்து வரக்கூடாது. பேனா, ஸ்கேல், எழுதுவதற்கு அட்டை, ரப்பர், கால்குலேட்டர் ஆகியவற்றையும் எடுத்து வரக்கூடாது.  


தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


உணவு கட்டுப்பாடு:


சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் தங்களுக்கான மருந்தினை எடுத்து வரலாம். சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஆப்பிள், போன்ற பழங்களையும் கொண்டு வரலாம். பேக்செய்யப்பட்ட உணவுகள், சாக்லேட்களுக்கு அனுமதியில்லை. 


ஆவன கட்டுப்பாடு :


இரண்டு பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ, அசல் ஆதார் அட்டை மற்றும் நுழைவு சீட்டு (Admit card) மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். நுழைவு சீட்டில் புகைப்படம் ஒட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு மைய பகுதியில் கோவிட் தொற்று பயம் இருந்தால் தேர்வு எழுதுபவர், ஒரு தண்ணீர் பாட்டில், சிறிய சானிடைசர் பாட்டில், முக்கவசம் மற்றும் கைஉறைகள் உள்ளே எடுத்து செல்லலாம்.


நேரம்:


இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 


தேர்வு மையத்துக்கு அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ள ரிப்போர்டிங் டைம்மில் வந்துவிடவேண்டும்.


மையத்தினுல் நுழைவதற்கு கடைசி கால அவகாசம் 1:30pm. (Gate closing time 1:30pm, after that no body is allowed to enter or leave the Centre until 5pm)


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS - தற்போது Seniority Challenge செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் தற்போது Seniority Challenge ( மாவட்டத்திற்குள் மட்டும் ) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Plus Two - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) 08.05.2023 09.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு அட்டவணைப்படுத்தப்பட்ட  மதிப்பெண் பட்டியல் (TML) 08.05.2023 09.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு!




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை வெளியிடப்படுகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.


அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.


விடைத்தாள்கள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் சுமார் 50,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.


இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. பின்னர், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு மே 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளார்.


இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இணையதளங்களில் தேர்வு முடிவு: www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளைஅறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கல்!

 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கும்  திருச்சியில் நடைபெற்றது*


மதுரையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பின்சார்பில் ஆயிரம் புத்தகம் வழங்கும் விழா திருச்சியில் இன்று ( 05 - 05-2023) மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை சுந்தரவேலு பேசுகையில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது போல கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 16 க்கு முன்பு வரை அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றி வரும் சுமார் 1500 ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விழாவில் தலைமை உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த தகுதி தேர்வு நிபந்தனை ஆசிரியர்களின் பணிக்காலத்தைக் கருத்தில் கொண்டு  இவர்களுக்குஇந்தக் கோடை விடுமுறை காலத்தில் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து இவர்களுக்கும் விலக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ஆயிரம் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கியதோடு தங்களது நீண்ட நாள் கோரிக்கையையும் இங்கு முன் வைத்துள்ளனர். ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசிடம் வைத்துள்ள  கோரிக்கைகளில் எளிதாக தீர்க்கப்படக்கூடிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளோம்.
அந்த வகையில் இவர்களது இந்தக் கோரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளதோடு இவை அனைத்தும் ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அமைச்சர்.

இவ்விழாவில்   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளர் முருக செல்வராஜ் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ. சந்திரன், பூபதி, சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

நிறைவாக 
இக் கூட்டமைப்பின் பொருளாளர் காளிதாசன் நன்றி கூறினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வரும் கல்வி ஆண்டில் அரசு மாதிரி பள்ளி தொடக்கம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?*

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மாதிரி பள்ளி செயல்படவுள்ளது. இப்பள்ளி தற்காலிகமாக செயல்படவுள்ள வல்லநாடு தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


தமிழகத்தில் ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக 25 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் இத்திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு அந்த மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.


அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அரசு மாதிரி பள்ளி வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளது. வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அரசு மாதிரி பள்ளி தற்காலிகமாக செயல்படவுள்ளது.


இதையடுத்து வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:


முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படுகிறது. வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பள்ளி தற்காலிகமாக செயல்படும்.


இப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் 9-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 11-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும், 12-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 800 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில் இப்பள்ளி தொடங்கப்படவுள்ளது.


தனித்தனி விடுதி: இது உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 400 மாணவர்களுக்கு ஒரு விடுதியும், 400 மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்படவுள்ளது.


சிறப்பு கற்றல் வசதி: 

மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பையும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்தலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்துதலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும் என்றார்.


ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரி பள்ளிகள்) ஜெய, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பெ.கணேசன், இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி செயலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர் கலந்தாய்வு : கைப்பேசியில் காலியிடங்களை அறியும் வசதி

 பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியிலேயே காலியிடங்களின் விவரத்தை அறியும் வசதி இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மே 8- ஆம் தேதி தொடங்குகிறது. இணையவழியில் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக கடந்த 3 - ஆம் தேதி வரை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டன.


 இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தங்கள் கைப்பேசியிலேயே அறிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


அதன்படி ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் தங்களது லாக்இன் ஐடி வாயிலாக காலிப்பணியிடங்களை அறிந்துகொள்வதுடன் அதில் 12 இடங்கள் வரை தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அந்தக் காலிப்பணியிடங்கள் தங்கள் சுற்றுக்கு முன் யாராவது எடுத்துவிட்டால் அந்தத் தேர்வு பட்டியலில் இருந்து காலியிடங்கள் நீங்கி விடும் அல்லது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்.


இந்த வசதியின் மூலம் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின்போது தங்கள் கைப்பேசியில் காலிப்பணியிடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

 அதோடு இடத்தை முன்கூட்டியே தெரிவு செய்யும் காலதாமதத்தைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....

 


அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....


பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... 


இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App


Guidelines letter avail


CMBFS -SOP - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

B.E / B.Tech / B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிக்கு முறை!

 முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


NMMSS (2022-2023) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து சான்று வழங்கக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


NMMSS (2022-2023) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து சான்று வழங்கக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


CoSE - NMMSS Covering Letter.pdf - Download here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

மாணவர்கள் , ஆசிரியர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம்

 

மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரின் ஆரோக்கியத்துக்காக, 'குஷல் புரோகிராம்' என்ற நல்வாழ்வு திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்காகவே, சுதந்திரமான நல்வாழ்வு கணக்கெடுப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மாணவர்களுடன் தொடர்பில் இருக்க, 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற வகையில், behappy.iitm.ac.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில், தமிழகத்தில் செயல்படும் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் ஆதரவுடன், மாணவர்களிடம் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.


இதற்காக, 30க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், மாணவர்களை தனித்தனியே சந்தித்து பேசி, கணக்கெடுப்பு நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த கணக்கெடுப்பின் முடிவுப்படி, ஐ.ஐ.டி., வளாகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை கவனிப்பதற்கான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,000 பேருக்கு, தொல்லியல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய, 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.


உண்டு, உறைவிட வசதியுடன் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News